Cinema Entertainment

டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்

டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி




தனுஷின் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் மிகப்பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவருடைய நானே வருவேன் திரைப்படம் வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனை தொடர்ந்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் தான் இயக்கி இருக்கிறார். இதையடுத்து அவர் தொடர்ச்சியாக மூன்று தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படபூஜை சமீபத்தில் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இப்படி தனுஷ் அடுத்தடுத்ததாக தெலுங்கில் கவனம் செலுத்தி வருவது இங்கிருக்கும் இயக்குனர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது. எதற்காக அவர் இப்படி தெலுங்கு திரைப்படத்திலேயே நடிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.




ஆனால் இதற்குப் பின்னணியில் இருப்பது டாக்டர் நடிகையான சாய் பல்லவி தான். அவர்தான் தெலுங்கு இயக்குனர்களிடம் தனுஷுக்காக சிபாரிசு செய்து பட வாய்ப்புகளை வாங்கி கொடுக்கிறாராம். இதை வைத்து பார்க்கும் பொழுது தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக இங்கு இருப்பவர்களை மறந்துவிட்டு தெலுங்கு தேசத்திலேயே செட்டில் ஆகி விடுவார் என்று பேசிக் கொள்கின்றனர்.

தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட அதிலிருந்து நண்பர்கள், சொந்த பந்தங்கள் என்று அனைத்தையும் ஒதுக்கி வருகிறார். யாருடனும் பேசாமல் அமைதியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் சாய்பல்லவியின் பேச்சை தட்டாமல் கேட்டு வருவது பலருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. மேலும் மிகப் பெரிய நடிகராக இருக்கும் அவர் நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்றும் கூறுகின்றனர்.




அது மட்டுமல்லாமல் சாய்பல்லவி கூறும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் அவர் சம்மதம் தெரிவித்து வருகிறார். இப்படி அவர் சென்னையில் இருப்பதை விட ஹைதராபாத்தில் இருக்கும் நாட்கள் தான் அதிகமாக இருக்கிறது. இதை பார்த்து இப்போது தனுஷின் ரசிகர்கள் தான் அதிக குழப்பத்தில் இருக்கின்றனர்.

இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் கடந்த சில நாட்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லேட்டஸ்டாக அஜித் தன்னுடைய லுக்கை முற்றிலும் மாற்றியது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டானது.




அதைத்தொடர்ந்து துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் தான் முதல் பாடலாக வெளிவர இருக்கிறது. அதில் அஜித் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூப்பரா டான்ஸ் ஆடி இருக்கிறாராம்.

இதனால் இந்த பாட்டிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு திரைப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பற்றி ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார். அதாவது இந்த திரைப்படத்தில் அஜித் யாரும் எதிர்பார்க்காத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

அந்த வகையில் இந்த படத்திற்குப் பிறகு இனிமேல் வேறு ஒரு அஜித்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்தின் நிஜ வாழ்க்கையும் துணிவு திரைப்படத்தின் கதையோடு சம்பந்தப்படுத்தி இருக்கிறதாம். இதுவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.




மேலும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்ற கூறி ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருப்பதால் படத்திற்கான ட்ரெய்லரும் விரைவில் வெளியாக இருக்கிறது.

அந்த வகையில் இந்த மாத இறுதியில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் அட்டகாசமாக வெளிவரும் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு வாரிசு திரைப்படமும் வெளிவர உள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இதில் அஜித்துடன் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரும் இணைந்திருப்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!