Cinema Entertainment

ஜெயிக்கப் போவது யார்? சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நீ தனது அம்மாவுக்கு போன் போட்டு பாட்டிக்கு எந்த தாவுத் பிறந்தநாள் அதற்கான அலங்கார வேலைகள் சென்று இருந்தோம் என்று சொல்ல அண்ணாமலை அண்ணாவும் போன் பண்ணி சொன்னாரு என்று அவரது அம்மா சொல்கிறார். ஆமாம்மா சாயங்காலம் சீக்கிரமா வந்துடுங்க என்று மீனா சொல்ல கிப்ட் என்ன வாங்கலாம் என்று கேட்க முத்து அதெல்லாம் நீங்க எதுவும் பெருசா செலவு பண்ண வேண்டாம் இங்கு வந்தா மட்டும் போதும் அத்தை என்று சொல்கிறார். பிறகு மீனா உங்க மனசுக்கு தோன்றது வாங்கிட்டு வாங்க என்று சொல்ல சீதா புடவை வாங்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.




அதன் பிறகு பாட்டியை பஸ் ஸ்டாண்டில் இருந்து அழைத்து வரும் முத்து அமைதியாகவே வர உனக்கு உடம்பு சரியில்லை என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கேன் என்று முத்து சமாளிக்கிறார். பிறகு பாட்டி ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் நகை பார்த்து அதைப்பற்றி பேச முத்து மனோஜை மனதில் நினைத்து அது தங்கமா கவரிங்கானு கண்டு பிடிக்கிறேன் என்று சொல்ல பாட்டு யாரோ ஒருத்தவங்க கழுத்தில் இருக்கிறதை நீ எப்படி கண்டுபிடிப்ப என்று கேள்வி கேட்க எதையோ சொல்லி சமாளிக்கிறார்.

அடுத்ததாக மீனா பாட்டிக்கு ஆரத்தி கரைத்து எடுத்து வர விஜயா அதை பிடுங்கி மற்ற இரண்டு மருமகள்களிடம் கொடுத்து ஆரத்தி எடுக்க சொல்ல பாட்டி மீனா எங்கே என்று கேட்டு அவரையும் கூப்பிட்டு ஆரத்தி எடுக்க வைத்து விஜயாவிற்கு பல்பு கொடுக்கிறார்.

அதன் பிறகு வீட்டு அலங்காரங்களை பார்த்து அவர் ஆச்சரியப்பட உங்களுக்காக நான் ஒரு குட்டி தரப் போறேன் என் மனசுக்கு பிடிச்ச மாதிரி யாரு கிப்ட் தரீங்களோ அவங்களுக்கு தான் அந்த கிப்ட் என்று சொல்கிறார்.




பிறகு விஜயா என்ன கிப்ட் அத்தை என்று கேட்க அவரை கூப்பிட்டு ரகசியம் சொல்வது போல காது கிட்ட போய் பிரிக்கும் போதே உனக்கே தெரியும் என்று பல்பு கொடுக்கிறார்.

அதன் பிறகு பாட்டி மனதை கவர என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று ஆளாளுக்கு யோசிக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!