Cinema Entertainment

ஈஸ்வரி மீது கம்ப்ளைன்ட் கொடுத்த கமலா.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கமலாவுக்கும் கோபிக்கும் மீண்டும் வாக்குவாதம் உருவாக கமலா ஈஸ்வரியை கொலைகாரி என்று சொன்னது கோபி கோபப்படுகிறார்.

கோபி உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை என்று சொல்ல கமலா நான் அப்படித்தான் பேசுவேன் உன்னால என்ன பண்ண முடியும் என்று கேட்க வீட்டை விட்டு வெளியே போக சொல்ல முடியாது இது என் பொண்ணோட வீடு நான் இங்கதான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறார்.




அதோடு நிறுத்தாமல் திரும்பத் திரும்ப ஈஸ்வரியை பற்றி பேச கோபி இன்னொரு முறை எங்க அம்மாவ பத்தி பேசினீங்க கொன்னுடுவேன் என்று அதிர்ச்சி கொடுத்து நான் வர்றதுக்குள்ள நீங்கள் வீட்டை விட்டு வெளியே போய் இருக்கணும் இல்லன்னா நான் சொன்னதை செய்வேன் என்று மிரட்டல் விடுத்து கிளம்புகிறார்.

அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷன் வந்த கோபி ஈஸ்வரி ராதிகாவை குறித்து தன்னை குழந்தையை கலைத்து விட்டதாக கம்பளைண்ட் கொடுக்க நீங்க கிளம்புங்க என்று அனுப்பி வைக்கின்றனர்.




அதன் பிறகு எழில் தயாரிப்பாளரிடம் கதை சொல்ல தயாராகி வெளியே வர எதிரே வந்த போலீஸ் ஈஸ்வரியை கேட்டு அதிர்ச்சி கொடுக்கின்றனர். வீடு புகுந்து ஈஸ்வரியைத் தேட கும்பகோணம் சென்ற விஷயம் தெரிந்து கும்பகோணம் போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் கொடுத்து அவர்களை கைது பண்ணி சென்னைக்கு கூட்டிட்டு வர சொல்லி ஆர்டர் போட அனைவரும் அதிர்ந்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!