1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை பழம்பெரும் நடிகர் முத்துராமன் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.
ஸ்டார் ஹீரோ என்கிற அளவுக்கு இந்தியா முழுக்க பிரபலமான ஷாமிங் நாயகனாக இருந்தவர் நடிகர் கார்த்திக்.
நவரச நாயகன் கார்த்திக், சினிமாவில் காதல் மன்னன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு காதல் மன்னன் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.பார்ப்பதற்கு சாக்லெட் பாயாக இருநு்தாலும் நடிப்பிலும் பின்னி எடுப்பார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. அக்னி நட்சத்திரம், மௌன ராகம் போன்ற படங்களில் இவர் நடித்த ரொமாண்டிக் சீன்கள் பலவும் இன்றைய தலைமுறை இளைஞர்களையும் ரசிக்க வைக்கும்படியாக இருக்கும். ஆனால் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் இவர் அப்படி ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக தான் இருந்தார் என்கிறது திரைத்துறை வட்டார செய்திகள்.
வெற்றிப்படங்களின் நாயகன்
பாரதிராஜா இயக்கத்தின் தான் அறிமுகமாக அலைகள் ஓய்வதில்லை என்ற முதல் படமே கார்த்திக்குக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 1990களி்ல் இருந்த ஹீரோக்களின் முகத் தோற்றத்தில் இருந்து சற்று வித்தியாசமான, நல்ல கலருடன் இருக்க தொடர்ச்சியாக நிறைய காதல் தொடர்பான மென்மையான லவ் சப்ஜெக்ட் படங்கள் இவரை தேடி வந்தன. அலைகள் ஓய்வதில்லை, கிழக்கு வாசல், பொன்னுமணி, அமரன், மௌனராகம், வருஷம் 16, கோபுர வாசலிலே, அக்னி நட்சத்திரம் போன்ற ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றி நாயகன் என்றே சொல்லலாம்.
தன் தந்தை பெரிய நடிகராக இருந்தாலும் இவருடைய திறமையாலே இவர் முன்னணி நடிகராக ஜொலித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
காதல் கிசு கிசுக்கள்
![காதல் கிசு கிசுக்கள் காதல் கிசு கிசுக்கள்](https://i0.wp.com/static.langimg.com/thumb/94179817/samayam-tamil-94179817.jpg?resize=274%2C205&ssl=1)
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஏராளமான காதல் கிசுகிசுக்களைச் சந்தித்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவு் பார்ட்டி போன்ற இடங்களுக்கு நிறைய பெண்களுடன வருவதாகவும் பல்வேறு கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனாலேயே அவருடைய நிறைய பட வாய்ப்புகள் தவறிப் போனதாகவும் திரைத்துறையில் சில பேச்சுக்கள் அந்த காலகட்டத்தில் வந்த வண்ணமிருந்தன.
நடிகையுடன் திருமணம்
![நடிகையுடன் திருமணம் நடிகையுடன் திருமணம்](https://i0.wp.com/static.langimg.com/thumb/94179816/samayam-tamil-94179816.jpg?resize=510%2C382&ssl=1)
சாக்லெட் பாயாக, 80-90 களில் பெண்களுக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவராக இருந்த கார்த்திக் தன்னுடைய இணைந்து ‘சோலைக்குயில்’ என்னும் திரைப்படத்தில் நடித்த நடிகை ரோகினியை காதலித்து 1988 ஆம் திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக், அப்படியே அவருக்கு எதிர்மறையான குணங்களை கொண்டிருந்தார். முத்துராமன் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர். கார்த்திக், விமர்சனத்தை தவிர வேறு எதையும் எதிர்கொள்ளாதவர். அந்த காலகட்டத்தில் சமூக வலைதளம் இல்லாததால், அவையெல்லாம் அப்போது கடந்து போய்விட்டது.
கார்த்திக் – ரோகினி தம்பதிக்கு கௌதம் கார்த்திக் மற்றும் கைன் கார்த்திக் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கொழுந்தியாளை இரண்டாவது திருமணம்
![](https://i0.wp.com/padmagrahadurai.com/wp-content/uploads/2024/06/Pasted-215.png?resize=300%2C169)
முதல் மனைவியுடன் திருமண வாழ்ககை நன்றாக போய்க் கொண்டிருந்த போதே, மனைவியின் சொந்த தங்கையான ரதியுடன் காதலில் இருந்தார்.
இந்த ஜோடி பலமுறை மும்பையில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் முக்கியமான பார்ட்டிகளில் கலந்து கொள்வது என்று ஜாலியாக இருந்தனர். அதன்பின் 1992 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து ஒருமுறை நிருபர்கள் நடிகர் கார்த்தியிடம் கேட்ட பொழுது நான் யாரையும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்யவில்லை என்றும் இந்த திருமணம் என் மனைவியின் சம்மதத்துடன் தான் நடைபெற்றது என்று கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இவர்கள் இருவருக்கும் திரன் கார்த்திக் என்ற மகன் இருக்கிறார்.
ஒரே நேரத்தில் அக்கா-தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்ட நடிகர் கார்த்திக், சொந்த வாழ்க்கையில் தவறினாலும், சினிமா வாழ்க்கையில் அசைக்க முடியாத நடிகராகவே இருந்தார். இந்த இருவர் மட்டுமின்றி, ஆரம்ப காலத்தில் இருந்தே பல பெண்களுடன் கார்த்திக் கிசுகிசுக்கப்பட்டவர் என்பது வேறு கதை!
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1