gowri panchangam Sprituality

கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்யப் போகிறீர்களா? அங்கப்பிரதட்சணம் செய்யும் முறை மற்றும் பற்றியும் அதன் சிறப்புகள்

பொதுவாக பெரிய பெரிய கோவில்களுக்கு எல்லாம் போனால் பக்தர்கள் கோவிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்வதைப் பார்த்திருப்போம். அவர்களது உறவினர்கள் அவர்களுடன் மெதுவாக வந்து உருட்டி உருட்டி விடுவார்கள்.

இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வதைப் பார்க்கும்போது நமக்கும் கடவுளின் மேல் ஒரு பயபக்தி வந்து விடுகிறது. உள்ளம் உருக பக்தர்கள் ‘முருகா… முருகா’ என்று கோஷம் எழுப்பியபடி திருச்செந்தூர் கோவிலில் வலம் வருவார்கள். இதில் ஆண் மற்றும் பெண் பக்தர்கள் என இருவருமே பாகுபாடு இல்லாமல் மனமுவந்து அங்கப்பிரதட்சணம் செய்வார்கள்.

அவர்களுக்கு உடலில் உள்ள ஈரம் காயாமல் இருக்க வேண்டும் என்பதற்காக உடன் வருபவர்கள் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டே செல்வார்கள். அது சரி. இப்போது அங்கப்பிரதட்சணம் செய்யும் முறை பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் பார்ப்போம்.




தலை, நெற்றி, கரங்கள், தோள் பட்டைகள், மார்பு, வயிறு, கால் முட்டிகள், பாத விரல்கள் போன்ற அவய அங்கங்கள் பூமியில் படும்படியாக வணங்கி வழிபடுவதையே நாம் அங்க பிரதட்சணம் என்று சொல்கிறோம்.

இதை சாஷ்டாங்க நமஸ்காரம் என்றும் சொல்வர். பொதுவாக குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது தீராத நோய்களோ, பிரச்சனைகளோ இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டி அங்கப்பிரதட்சணம் செய்வார்கள்.

‘எனக்கு சகலமும் நீயே..’ என்று இறைவனை நோக்கி சர்வ அங்கமும் படும்படி கோயில் பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும். அங்க பிரதட்சணம் செய்வதற்கு முன்பு குளித்து முடித்து ஈரத்துணியுடன் பலி பீடம் முன்பு வர வேண்டும. பிறகு கிழக்கு நோக்கி தரையில் உருண்டவாறு மேற்கு பக்கமாக உருண்டு வந்து பலி பீடத்தில் வந்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.

பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி, பிரதட்சணம் செய்வதனாலும் சரி. இடமிருந்து வலமாகத்தான் வர வேண்டும். இவ்வாறு பிரதட்சணம் செய்து வணங்குவது என்பது இயற்கையோடு இணைந்தது என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

நாம் வாழுகின்ற பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் போதும் சரி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் போதும் சரி. இடமிருந்து வலமாகவே சுற்றுகிறது. இயற்கையின் இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் நாமும் இடமிருந்து வலமாக சுற்றி வந்து தெய்வங்களை வணங்குகிறோம். இதைப் பார்க்கும்போது அறிவியலுக்கும், ஆன்மிகத்திற்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது என்று நம்மை அதிசயிக்க வைக்கிறது.




நம் வாழ்க்கை சக்கரம் சுழல்வதற்கு இயற்கை என்ற ஒரு புள்ளி வேண்டும். அதை மையமாக வைத்தே நம் வாழ்க்கை இயங்குகிறது. நம் தினசரி செயலின் ஆதாரமும், பணிகளின் மையமும் இயற்கையே என்பதை உணர்த்தவே இயற்கையோடு ஒன்றிய கடவுளை மையமாக வைத்து நாம் ஆலயங்களில் உள்ள சன்னதியைச் சுற்றி வருகிறோம்.

9 Planets

எந்த காலத்திலும், எந்த சூழ்நிலைகளிலும் இந்த பூமியில் வசிப்பவர்கள் இடமிருந்து வலமாகத்தான் சுற்றி வணங்க வேண்டும். வலமிருந்து இடமாக சுற்றி வணங்குதல் என்பது தவறு. அது இயற்கை நியதிகளுக்கும் முரண்பட்டது.

அங்க பிரதட்சணம் செய்யும் போது வேகமாக உருண்டு வரக் கூடாது. இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை உச்சரித்தப்படி அவயங்கள் பூமியில் நன்றாக படும்படி மெதுவாக உருள வேண்டும். அவயங்கள் பூமியில் படும்போது உடலிலுள்ள கர்ம பலன்கள் பூமியில் இறங்கி தெய்வ சக்தியிடம் கலந்து நமது பாவங்கள் தீர்க்கும் என்கிறது புராணங்கள்.

மகான்களின் கால் சுவடுகள் பட்ட இடங்களில் நாம் விழுந்து வணங்குவது நமக்குள் ஒரு நல்ல ஆற்றலைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுமட்டுமல்லாமல் கோவிலைச்சுற்றிலும் நல்ல ஒரு கதிர்வீச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் நாம் அங்கப்பிரதட்சணம் செய்யும் போது நம் உடலுக்குப் பலவிதமான நன்மைகளைத் தரும்.

புனிதமான இடங்களில் செய்யப்படும் அங்கப்பிரதட்சணத்துக்கு அதிக நன்மை உண்டு. இதனால் அங்க பிரதட்சணம் செய்பவர்களின் உடலும் உள்ளமும் தூய்மை அடையும் என்பது நம்பிக்கை.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!