Cinema Entertainment

நண்பரை திருமணம் செய்த சன்டிவி சீரியல் நடிகை

சன்டிவியின் வானத்தைப்போல சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வந்த நடிகை சுவாதி தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் சன்டிவியின் முக்கிய சீரியல் வானத்தைப்போல. நவீன பாசமலர் என்று அழைக்கப்படும் இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சீரியலில் முதலில் நாயகன் சின்ராசு கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகர் தமன். அவருக்கு தங்கையாக ஸ்வேதா நடித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவருமே அடுத்தடுத்து சீரயிலில் இருந்து விலகினர். இதனையடுத்து சன்ராசு கேரக்ரில் நடிகர் ஸ்ரீகுமார், துளசி கேரக்டரில், நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகின்றனர். தற்போது வானத்தைப்போல சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.




இதனிடையே இந்த சீரியலில் துளசி கேரக்டரில் நடித்து வந்த நடிகை, ஸ்வாதி தற்போது தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொண்டுள்ளார். கல்லூரியில் படிக்கும்போது இவர்களுக்கு இடையில் தொடங்கிய நட்பு காதலாக மாறிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நிச்சய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ஸ்வாதிக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. கர்நாடகாவில் தும்கூர் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஸ்வேதா தனது நடிப்பை தொடர்வார் என்றும் கூறப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!