பெண்களின் முகம் எப்போதும் மென்மையானதாக மிருதுவானதாக இருக்கும். அரிதாக சிலருக்கு முகத்தில் தேவையில்லாத முடிகள் வளர்வதும் உண்டு. அது மோசமான தோற்றத்தை அளிக்கும். இந்த முடியை நீக்குவதற்கான வீட்டு வைத்தியம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
எலுமிச்சை சாறு மற்றும் தேன்
எலுமிச்சை சாறு நீர்த்தது – 2 டீஸ்பூன்
தேன் – 2 டீஸ்பூன்
என்ன செய்வது..?
இரண்டையும் சம அளவு கலந்து முடி இருக்கும் இடங்களில் நன்றாக தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் முகத்தில் ஊறவைக்கவும். இரண்டும் சருமத்தோடு நன்றாக ஒட்டியிருக்கும்.
சுத்தமான மென்மையான துணியை நனைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து மிருதுவாக முகத்தில் தடவவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்யவும்.
நன்மைகள்
இந்த கலவை முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை குறைக்கிறது. கூடுதலாக தேன் சேர்ப்பது சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க செய்கிறது.
நீங்கள் இயற்கை வழியில் முடியை வெளியேற்ற விரும்பினால் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு உதவும். முகத்தில் தேவையில்லாத முடிகளை நீக்க வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிகள்:
2. பூண்டு மற்றும் தேன்: பூண்டு மைய அரைத்து தேனுடன் கலந்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவவும்.
3. முல்தானி மிட்டி மற்றும் சீந்தில்: முல்தானி மிட்டி மற்றும் சீந்திலின் பொடியை சம அளவாக கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பிறகு கழுவவும்.
இந்த முறைகள் முகத்தில் முடி நீக்கவும், முகத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1