தமிழ் பிக்பாஸ் சீசன் 7 ரொம்பவே ஸ்லோவாக தான் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேட்டான போட்டியாளர் விஜய் வர்மா நடந்த ஒரு சம்பவம் குறித்து முழுதாக விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஹிட்டாக இருந்தது தான் பிக்பாஸ் தமிழ். 6 சீசன் வரை ஒரு பார்மட்டில் கொண்டு சென்றனர். நடுவில் புதிதாக பல விதிகள், இரண்டு வீடுகள் என எக்கசக்க பார்மெட்களை தேவையே இல்லாமல் அள்ளி தெளித்தனர்.
இதனால் நிகழ்ச்சி ஹிட் அடிக்கும் என அவர்கள் நினைக்க டல் அடித்தது தான் மிச்சம். அந்த வகையில் தற்போது நிகழ்ச்சி மொக்கையாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அதனை சரி செய்ய ஐந்து வைல்ட் கார்டை களமிறக்குகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸில் முதல் ஸ்ட்ரைக் கார்டு வாங்கிய விஜய் வர்மா ஒரு வாரம் புத்தராக இருந்தார். ஆனால் அடுத்து நடந்த ஒரு டாஸ்க்கில் ரெஸ்ட்லிங் ஷார்ட்டை போட்டு பலரையும் பதற வைத்தார். இதையடுத்து அவர் அந்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.
இதையடுத்து தான் எதுக்கு அப்படி செய்தேன் என ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் விஜய் வர்மா. என்னுடைய நோக்கம் அந்த ஆக்சிஜன் சிலிண்டர் எடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை தவிர மற்றவர்களை தடுக்க நான் நினைக்கவே இல்லை. ஆனால் பிரதீப் என்னை லாக் செய்த போது என்னுடைய கழுத்தை பிடித்தார். நிகழ்ச்சிக்கு உள்ளே செல்ல ஒரு நாள் இருக்கும் போது தான் அங்கு எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது.
அது பிரதீப்புக்கு தெரியும். என்னால் மூச்சு விட முடியாமல் போனது. அந்த லாக்கில் இருந்து தப்பிக்கவும் என்னை விடுக்கவும் தான் அவரை அப்படி அடிக்கவே நேர்ந்தது எனத் தெரிவித்தார். மற்றொரு பேட்டியில் நான் வெளியேறுவேன் என நினைக்கவில்லை. இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவேன் என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1