gowri panchangam Sprituality

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் செவ்வாய்க்கிழமை வழிபாடு

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன் தீர வேண்டும் என்று தான் இறைவனிடம்  வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடனை தீர்க்க எந்த வழியும் தெரியாமல் தடுமாறுவார்கள். கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது பிறவிப்பெருங்கடன் என்று முன்னோர்கள் சொல்வார்கள் நம்முடைய பிறவியே ஒரு கடன்தான்.




HT Special: முருகன் ஏன் அவதரித்தார்? - வைகாசி விசாகத் திருநாளில் அப்படி என்ன விஷேசம்..!-tamil god lord muruga incarnated on vaikasi visakam festival - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். அனைவரது வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என இரண்டு இருப்பது போல் கடன் வாங்குவதும், கடனை திருப்பிக் கொடுப்பதும் என்பதும் இயல்பான ஒன்றுதான். சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள். கடனிலிருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என இந்த ஆன்மிக பதிவில் பார்க்கலாம்.




செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு:

செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை தரிசித்து வந்தால் கடன்கள் தீர வழி வகைகள் பிறக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு காண முருகப்பெருமான் அருள்வார். அவருடைய வழிபாட்டிற்கு ஏற்ற தினம் செவ்வாய்க்கிழமை. அன்றைய நாளில் கடன் பிரச்சனைகள், பணி தொடர்பான பிரச்சனைகளை நினைத்து முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை அன்று நல்ல செயல்களை தொடங்க ஏற்ற நாள் இல்லை என்பது பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு செய்யும் வழிபாடு, பூஜைகளுக்கு ஆற்றல் அதிகம் என்பது ஐதீகம்.

Government sets a target of 35 MT for wheat procurement - The Economic Times

கடன் தீர பரிகாரம்:

இந்த பரிகாரம் செய்வதற்கு கோதுமையை வாங்கி அலசி நன்கு காய வைத்து அதை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடையிலிருந்து கோதுமை வாங்காமல் வீட்டிலேயே அரைப்பதால் நாம் செய்யும் பரிகாரம் கூடுதல் பலனளிக்கும். நீங்கள் எந்த அளவுக்கு கோதுமை மாவு எடுக்குறீர்களோ அந்த அளவுக்கு சர்க்கரை எடுத்து இரண்டையும் ஒன்றாக கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது 40 உருண்டைகள் வரும் அளவிற்கு உருட்டிக் கொள்ளுங்கள்.




செவ்வாய்க்கிழமை காலை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு இந்த உருண்டைகளில் ஒரு உருண்டையை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து மூடி உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்திலிருந்து  விடுபட வேண்டும் என முருகனை நினைத்து உங்கள் தலை முதல் கால் வரை வலப்புறமாக மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வெளியில் செல்லும் வேலையில் புற்று போன்றவற்றிற்கு இதனை உணவாக வைத்து விடுங்கள் அல்லது தண்ணீர் ஓடும் இடங்களில் இதனை போட்டு விடுங்கள்.

 முருகபகவானை செவ்வாய்க்கிழமையில் தரிசிப்பதும், வணங்குவதும் பலவிதமான நன்மைகளைத் தரும். அதனால் செவ்வாய்க்கிழமை அன்று முருகனை நினைத்து இந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுபடலாம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!