Cinema Entertainment

இவ்வளவு காலமும் நான் உயிரோட இருக்க அந்த வழிதான் காரணம்!.. பாய்ஸ் நடிகர்!

சினிமாவிற்கு வரும் அனைவருக்கும் திரைத்துறை சிறப்பானதாக அமைந்து விடுவதில்லை. சிலருக்கு அது எந்தவித வாய்ப்பையும் கொடுக்காமல் வாழ்க்கையே பெரும் பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது. தமிழ் சினிமாவில் அப்படி பிரபலமானவர்கள் பத்தில் ஒருவர்தான் இருப்பார்கள்.

பாய்ஸ் மணிகண்டன் நிலை \Boys manikandan

 




 

பாக்கி ஒன்பது பேர் பிரபலமாகாமல் நம் கண்ணுக்கு தெரியாமல் போய் உள்ளனர். அப்படியாக பாய்ஸ் திரைப்படம் சில நடிகர்களுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சித்தார்த்தில் துவங்கி சில நடிகர்களுக்கு அந்த திரைப்படம் முதல் திரைப்படமாக இருந்தது.

முக்கியமாக அந்த திரைப்படத்தை பெரும் இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். புது நடிகர்களை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசையில் சங்கர் அதை செய்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இந்த படம் சித்தார்த்திற்கு ஒரு அளவு வரவேற்பை பெற்று கொடுத்தது.

ஆனால் அவரது நண்பர்களாக நடித்த நகுல், மணிகண்டன் போன்ற நடிகர்கள் அதன்பிறகு பெரிதாக பிரபலமாகவில்லை. மணிகண்டன் தற்சமயம் இது குறித்து பேட்டி அளித்திருந்தார். அவர் பஹிரா திரைப்படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு நடித்துள்ளார்.




பேட்டியில் அவர் பேசும் பொழுது கிட்டத்தட்ட 20 வருடத்திற்கு மேல் சினிமாவில் பயணித்து வருகிறீர்கள் உங்களது இளமையும் காலத்தையும் இழந்த பிறகும் இன்னும் பெரிதாக வாய்ப்பை பெறவில்லை. இதற்காக பெரிதாக கவலைப்பட்டு உள்ளீர்களா? என கேட்கும் பொழுது புகழ் அந்தஸ்துக்காகவெல்லாம் நான் சினிமாவிற்கு வரவில்லை.

எனக்கு பிடித்ததை செய்யவே நான் சினிமாவிற்கு வந்தேன் நான் ஆன்மீக வழியில் சென்று கொண்டுள்ளேன் எனவே இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் என் மனதை கலைக்க முடியாது. இந்த உலகத்தில் ஆன்மீகத்தை விட பெரிய விஷயம் எதுவும் கிடையாது. அதை நான் பின்பற்றுவதனால் எந்த ஒரு விஷயமும் எனக்கு பெரிய விஷயமாக தெரிவதில்லை. நான் இப்பொழுது உயிர் வாழ்கிறேன் என்றால் அதற்கு அந்த ஆன்மீக வழி தான் காரணம் என்று கூறியுள்ளார். ரஜினியை போலவே முழுமையாக தன்னை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி உள்ளார் நடிகர் மணிகண்டன்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!