இன்றைய ராசிபலன் நவம்பர் 23, 2023, சோபகிருது வருடம் கார்த்திகை 7 வெள்ளி கிழமை, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் உள்ள பூரம், உத்திரம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை விரிவாக பார்ப்போம்.
மேஷ ராசி அன்பர்களே!
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிரதோஷ தினத்தில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய உறவுகள் கிடைக்கும்.ஒரே ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சந்திரன் சுப விரயங்களை அள்ளித் தருவார். அலுவலக விஷயங்களில் மனதிருப்தி ஏற்படும்.
இன்று சிவபெருமான் ஆலய வழிபாடு செய்யவும். இன்று நந்தி தேவருக்கு மாலை சாற்றி வழிபாடு செய்யவும்
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே!
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று பங்கு சந்தை முதலீடு வெற்றியை தரும். வெள்ளிக்கிழமை அன்று ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்கம் வாங்கும் போது பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.மனதில் இருக்கக்கூடிய குறைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். திருப்தியான நாளாக அமைகிறது. எண்ணங்கள் நிறைவேறும்.
கார்த்திகை மாத வெள்ளிக்கிழமை இன்று லட்சுமி குபேரரை வணங்கலாம்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மிதுன ராசி அன்பர்களே!
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனக்குறைகள் இல்லாத நாளாக இருக்கும்.புதிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டு. எண்ணிய காரியங்கள் நிறைவேறும். புதிய நண்பர்களின் ஆதரவு உங்கள் தொழில், வியாபாரத்தில் கிடைக்கும். கொடுத்த கடன் தொகையை வசூல் செய்யலாம். இன்று நீங்கள் குலதெய்வ பிரார்த்தனை செய்யவும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
கடக ராசி அன்பர்களே!
கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சுறுசுறுப்பான நாளாக அமைகிறது. கொடுத்த கடன் பாக்கிகள் வசூல் ஆகும். வணிகஸ்தர்களுக்கு லாபம் உண்டாகும். கடக ராசியினருக்கு சந்திரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு நிதி நன்மைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தெய்வ அணு குலங்கள் நிறைந்த நாளாக இருக்கும்.அம்பிகையை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே!
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் எட்டாம் இடத்தில் சனி உடன் சேர்ந்து சந்திராஷ்டம நாளாக இருக்கக்கூடிய இன்று பசுமாடுகளுக்கு உணவளிக்கவும்.இன்று காலை வேளையில் நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள், முடிவுகள் சாதக பலன்கள் தருவதாக இருக்கும். இன்றைய விநாயகர் வழிபாடு செய்யவும். ஆலயங்களுக்கு அரிசி தானம் செய்யவும்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் பல வகைகளிலும் நற்பலன்கள் அதிகரிக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி அன்பர்களே!
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சிறு சிறு குழப்பங்கள் இருக்கும். ராசியில் கேதுவும், ஏழாம் இடத்தில் சந்திரன் ராகுடன் சேர்ந்து இருப்பதால் கணவன் மனைவி இடையிலான உறவில் சிறு சிறு மனவருத்தங்கள் இருக்கும். சுத்தம் மற்றும் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் இன்று முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய கணவன் மனைவி சிறப்பாக இருக்கும். புதிதாக திருமணமானவர்கள் உறவில் கவனமாக இருக்கவும். ஆரோக்கிய குறைபாடுகள் வர வாய்ப்புள்ளது. பெண்கள் கவனமாக செயல்படும். மகாலட்சுமி வழிபாடு மனமகிழ்ச்சி தரும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
துலா ராசி அன்பர்களே!
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சற்று குழப்பமான நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகளும், நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். அதனால் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம். நிதானம் தேவை. இன்று உங்களுக்கு பதில் குழப்பங்கள் இருந்தாலும் நண்பர்களின் உதவி மூலம் சேரும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்தியான நாளாக இருக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய சூழல் இருக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக அமையும். இன்று நீங்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கக்கூடிய நண்பர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு திருமண யோகங்கள் கை கூடும்.ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே!
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு பல்வேறு வகையில் மனதிற்கு திருப்தி கிடைக்கும். பிள்ளைகளுடன் இருக்கக்கூடிய மனஸ்தாபங்கள் தீரும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். வேலையில் ஏற்ற இறக்கமான நாளாக அமைகிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்த மனப்போராட்டங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். விநாயகர் வழிபாடு செய்யவும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
மகர ராசி அன்பர்களே!
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு தரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும்.வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி வழிபாடு செய்ய உங்களின் எல்லாம் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களின் சந்திப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி கூடுதலாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
கும்பராசி அன்பர்களே!
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனத்திருப்தியும், மனபாரங்களிலிருந்து விடுதலையும் கிடைக்கும். உங்களின் உதவியாளர் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே மனவருத்தம் ஏற்படும். பேச்சு, செயலில் நிதானம் தேவை. நண்பர்களின் உதவியாக உங்கள் வேலைகள் எளிதாக முடியும்.ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.
மீன ராசி அன்பர்களே!
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். வழக்குகள், விசாரணைகள் இருப்பின் அதை ஒத்திவைப்பது நல்லது. குடும்பத்தில் நற்செய்திகள் வரும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்று காலை வேளையில் விநாயகர் வழிபாடு செய்யவும். குலதெய்வ வழிபாடு செய்வதால் இன்று நற்செய்திகள் தேடி வரும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1