கற்றாழை செடி 1 வாரத்துக்குள் நன்கு சதைப்பற்றுடன் வளர இதை 1 டீஸ்பூன் கொடுங்க போதும்..!

நாம் இந்த உலகில் நிம்மதியாகவும் ஆரோக்கியமாக வள வேண்டும் என்றால் அதற்கு நமக்கு தேவை மிகவும் சுத்தமான மூச்சு காற்று. நமது மூச்சு காற்று மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இல்லை என்றால் நாம் நிம்மதியாக சுவாசிக்கவே முடியாத நிலை உருவாகிவிடும். அதற்கு நமக்கு உதவுவது தாவரங்கள் தான். அதனால் தான் இன்றைய சூழலில் அனைவருமே தங்களது இல்லத்தில் ஒரு சிறிய அளவிலான தோட்டத்தை அமைத்து தாவரங்களை வளர்க்கிறார்கள்.

அப்படி நாம் நமது வீடுகளில் விரும்பி வளர்க்கும் பலவகையான தாவரங்களில் ஒன்று தான். இந்த சோற்று கற்றாழை. இதனை வளர்ப்பவர்கள் அனைவரும் கூறுவது எங்கள் வீட்டு கற்றாழை நன்கு செழித்து வளரவில்லை என்று. அதனால் இன்றைய பதிவில் கற்றாழை செடி நன்கு செழித்து வளர உதவும் ஒரு எளிமையான டிப்ஸினை பற்றி பார்க்கலாம் வாங்க. 



கற்றாழை செடி வளர்ப்பது எப்படி.?

நாம் அனைவருமே கற்றாழை செடியினை நமது வீடுகளில் மிகவும் விரும்பி வளர்ப்போம். ஏனென்றால் இதில் உள்ள சதையினால் நமக்கு பலவகையான ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.

அப்படி நாம் விரும்பி வளர்க்கும் கற்றாழை செடி நன்கு செழித்து வளரவில்லை என்றால் நமது மனம் மிகவும் வருத்தப்படும். எனவே நமது வீடுகளில் உள்ள கற்றாழை செடி நன்கு செழித்து வளர உதவும் ஒரு டிப்ஸினை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம் வாங்க.



தேவையான பொருட்கள்:

  1. வாழைப் பழத்தோல் – 4

  2. தண்ணீர் – 1 கிளாஸ் 

  3. கண்ணாடி பாட்டில் – 1

செய்முறை விளக்கம்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 4 வாழைப் பழத்தோல்களையும் இரண்டு முதல் மூன்று நாட்கள் நன்கு வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பொடி பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு அதனை நன்கு சலித்து அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து நன்கு மூடிபோட்டு மூடி கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து 1 டீஸ்பூன் எடுத்து அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் வீட்டில் உள்ள கற்றாழை செடியில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை 10 நாட்களுக்கு ஒருமுறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் கற்றாழை செடி நன்கு சதைப்பற்றுடன் வளர ஆரம்பிக்கும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

1 hour ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

1 hour ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

2 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

2 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

5 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

5 hours ago