Categories: CinemaEntertainment

சிவபெருமானாகவே மாறிய சிவாஜி… கண்களால் செய்த அந்த அற்புதம் .

திருவிளையாடல் புராணத்தில் இருந்து ஒரு சில காட்சிகளை எடுத்துக் கையாண்ட படம் தான் திருவிளையாடல். இயக்கியவர் ஏ.பி.நாகராஜன். இந்தப் படத்தில் வரும் மறக்க முடியாத பாடல் பாட்டும் நானே பாவமும் நானே. இது விறகு வெட்டும் படலத்தில் இருந்து எடுக்கப்பட்டது.



மதுரையை ஆண்ட வரகுணபாண்டியன் அவைக்கு வடக்கிருந்து ஏமநாதன் என்ற பாடகன் வருகிறான். அவரது புலமைக்கு பரிசளித்து தங்கும் இடமும் கொடுக்கிறார் மன்னர். இதனால் கர்வம் கொண்ட பாடகன், எனக்கு சமமாகப் பாட உங்கள் நாட்டில் யாராவது இருக்கிறார்களா என்று சவால் விடுகிறான்.

அப்போது மன்னர் பாணபத்திரரிடம் இதுகுறித்து கேட்கிறார். அவரும் அதற்கு உங்கள் ஆசியும், இறைவனின் அருளும் இருந்தால் ஏமநாதனை ஜெயிக்கிறேன் என்கிறார். அவர் வெளியே வந்தால் ஏமநாதனின் சீடர்களே சூப்பராகப் பாடுகிறார்கள். அடேங்கப்பா இவங்களே இப்படின்னா, ஏமநாதனை எப்படி ஜெயிப்பது என கவலை கொள்கிறார் பாணபத்திரர். சொக்கநாதரிடம் போய் முறையிடுகிறார். நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன் என்று சொல்லும் சொக்கநாதர் விறகு விற்க வெளியில் வலம் வருகிறார். வந்தவர் ராத்திரியில ஏமநாதன் தங்கி இருக்கும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடுகிறார்.

வெளியில் வந்த ஏமநாதன் ஆச்சரியத்தோடு அவரை யாரப்பா என்று கேட்க நான் பாணபத்திரரின் சீடரா சேரப் போனேன். உனக்கு எல்லாம் அந்தத் தகுதி இல்லடான்னு விரட்டி விட்டுட்டாரு. அப்புறம் தான் விறகு வெட்டப் போனேன் என்கிறார். அப்போது ஏமநாதனுக்குப் பயம் வந்து விடுகிறது. தகுதி இல்லாதவரே இப்படின்னா, பாணபத்திரர் எப்படி பாடுவார் என்று பயந்து நாட்டை விட்டே ஓடி விடுகிறார் ஏமநாதர்.



இதைப் படத்தில் அருமையாகக் காட்சிப் படுத்தியிருப்பார் ஏ.பி.நாகராஜன். ஏமநாதரை ஏமநாதப்பாகவதராக மாற்றியிருப்பார். மக்களுக்கு சிவபெருமான் வந்து இருக்கிறார் என்று தெரிய வேண்டும் என்பதற்காகப் பாடலில் 5 சிவாஜியைக் காட்டி அசத்தியிருப்பார் இயக்குனர்.

கௌரிமனோகரி ராகத்தில் பாட்டும் நானே பாவமும் நானே என பாடல் ஆரம்பிக்கிறது. டிஎஸ்.பாலையா ஏமநாத பாகவதராக வந்து அசத்துவார். விறகுவெட்டியானாக சிவாஜி வந்து ஆட்டம் போட்டுப் பாடுவது செம மாஸாக இருக்கும். இந்தப் பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதியது தான். கே.வி.மகாதேவன் அருமையாக இசை அமைத்துள்ளார். பாடலில் சிவாஜி சிவபெருமானாக வந்து நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என பாடும் வேளை அவர் கண்களால் அபிநயம் காட்டி கண்ணடிப்பார். பாடலுக்கே அது சிகரம் வைத்தாற்போல நின்று பேசச் செய்தது.

மேற்கண்ட தகவலைப் பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

39 mins ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

41 mins ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

44 mins ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

47 mins ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

5 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

5 hours ago