Categories: CinemaEntertainment

டிஆர்பிஐ உயர்த்த சொந்த செலவில் சூனியம் வைத்த சன் டிவி.. ஆதிகுணசேகரனாக தோற்றுப்போன வேலராமமூர்த்தி,

எதிர்நீச்சல் தொடர் பல மாதங்களுக்கு பிறகு இப்போது தான் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. அதாவது இந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.

நம்பர் ஒன் டிஆர்பியில் இருந்த எதிர்நீச்சல் தொடரை தொடர்ந்து அதே வரவேற்புடன் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று சன் டிவி நினைத்தது. அதன்படி குணசேகரனாக நடித்தால் யார் நன்றாக இருக்கும் என்று குழு அமைத்து யோசித்தனர்.

அப்போது தான் கிடாரி படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்த வேலராமமூர்த்தி ஓரளவு மாரிமுத்துடன் உருவ ஒற்றுமையில் இருப்பதாக அவரை கமிட் செய்தனர். ஆரம்பத்தில் வேலராமமூர்த்தி படத்தில் பிசியாக இருப்பதாக கூறி இந்த தொடரில் நடிக்க சம்மதம் தெரிவிக்காமல் இருந்தார்.



எதிர்நீச்சல் தொடரால் சன் டிவிக்கு ஏற்பட்ட இழப்பு

சன் டிவி அதிகபடியாக சம்பளத்தை கொடுத்து ஒரு வழியாக அவரை சம்மதிக்க வைத்து விட்டனர். ஆனால் சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் வேல ராமமூர்த்தியால் எதிர்நீச்சல் தொடரின் டிஆர்பி மளமளவென சரிய தொடங்கியது.

இதற்கு காரணம் மாரிமுத்து வில்லனாக நடித்தாலும் அவருக்குள் ஒரு வெள்ளந்தி தனம் இருக்கும். குழந்தைகளும் கொண்டாடும் அளவுக்கு தான் அவரது கேரக்டர் இருந்தது. ஆனால் இப்போது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வேலராமமூர்த்தி இடம் அந்த பிளஸ் பாயிண்ட் இல்லை.

வெறும் வன்மத்தை மட்டுமே கக்கும் கதாபாத்திரமாகத் தான் அவரது பிரதிபலிப்பு இருக்கிறது. இதனால் எதிர்நீச்சல் தொடர் பிரியர்களுக்கு கூட இப்போது இந்த தொடரை பார்க்கும் ஆர்வம் இல்லை. கிட்டத்தட்ட 60% பேர் இப்போது இந்த தொடரை பார்ப்பதை நிறுத்தி விட்டனர்.

சிலர் எதிர்நீச்சல் தொடரை பார்க்க காரணம் அந்தத் தொடரில் நடிக்கும் மருமகள்கள் மட்டும் தான். மேலும் குணசேகரனாகவே வாழ்ந்த மாரிமுத்துவின் இறப்புக்குப் பிறகு ஒரு தொடரே அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது ஆச்சரியம் தான். ஏனென்றால் எதிர்நீச்சல் தொடரில் ஆணி வேராக குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து வாழ்ந்திருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

2 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

2 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

2 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

2 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

6 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

6 hours ago