Categories: CinemaEntertainment

ஸ்டேஷனுக்கு வந்த முத்து, மீனாவுக்கு ஷாக் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்டேஷனுக்கு ஓடி வந்த மீனா தன்னுடைய வண்டியை பார்த்து அதை தொட்டு பார்த்து கண் கலங்குகிறார்.

இதை பார்த்துவிட்டு அங்கு வந்த லேடி கான்ஸ்டபிள் இங்க என்னம்மா பண்ற என்று கேட்க இது என்னுடைய வண்டிங்க. எடுத்துட்டு வந்துட்டாங்க என்று சொல்கிறார் தெரியாம நோ பார்க்கிங்ல விட்டுவிட்டு உள்ள போயிருந்த, வண்டிக்குள்ள பூவெல்லாம் இருக்கு, தயவுசெய்து என் வண்டிய குடுத்துடுங்க என்று கேட்க எஸ் ஐ வந்தால்தான்‌. அவர்கிட்ட பேசி தான் வண்டியை எடுக்கணும் என்று சொன்ன மீனா முத்துவுக்கு சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்து ஒரு இடத்தில் அப்படியே உடைந்து போய் உட்காருகிறார்.



இந்த நேரத்தில் ஜிபி மனோஜ் ரோகினி ஜீவா மற்றும் போலீஸ் ஆகியோர் ஸ்டேஷனுக்கு வந்து இறங்குகின்றனர். இவர்கள் உள்ளே சென்று விடுகின்றனர். ஒருவரை ஒருவர் பார்க்காத நிலையில் முத்து மீனாவுக்கு போன் பண்ண மீனா வண்டியை எடுத்துட்டு வந்துட்டாங்க என்று சொல்லி அழுகிறார். நோ பார்க்கிங்ல யாராவது வண்டி விடுவாங்களா என்று முத்து மீனாவை திட்டுகிறார்.

தெரியாம எடுத்துட்டு வந்துட்டாங்க வண்டியை தர மாட்டேன்னு சொல்றாங்க எனக்காக நீங்க ஆசையா வாங்கி கொடுத்த வண்டி என் மேல தான் தப்பு என்று அழ எந்த ஸ்டேஷனில் இருக்கேன் அங்கேயே இரு நான் வந்துருவேன் என முத்து கிளம்பி வருகிறார்.

உள்ளே ஜீவா உடன் போலீஸ் விசாரிக்க பணத்த எல்லாம் கொடுக்க முடியாது இவன்தான் என்னை ஏமாத்திட்டான். நீ கனடா போ பின்னாடி நான் வரேன்னு சொல்லி வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா. இவன் கூட ஆறு மாசம் சேர்ந்து வாழ்ந்ததுக்கு அந்த பணம் சரியா போச்சு என்று சொல்ல ரோகிணி இப்படி பேச அசிங்கமா இல்ல பணத்துக்காக நீங்க என்ன வேணாலும் பண்ணுவியா என்று கோபப்படுகிறார்.

போலீஸ் பொறுமையாக பேச ஜீவா பணத்தை தர முடியாது எதுவாக இருந்தாலும் என் லாயர் கிட்ட பேசிக்கோங்க என்று லாயரை வர வைக்கிறார். லாயரை வைத்துக் கொண்டும் பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்கிறார்.



நாயர் மனோகத்தோட பர்மிஷன் ஓட தான் அந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு அவரே கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கிறார் என்று ஆதாரத்தை காட்ட மனோஜ் நான் எவ்வளவு நம்பி கையெழுத்து போட்டு விட்டேன் என்று சொல்கிறார். ஜீவா நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கோங்க பணத்தை கொடுக்க முடியாது என உறுதியாக சொல்கிறார். ஒரு வருஷம் இவரோட சேர்ந்து வாழ்ந்து விட்டு அதற்கான காம்போசிஷன் தான் அந்த பணம் என்று சொல்கிறார்.

வெளியே ஸ்டேஷனுக்கு வந்து தெரிந்த கான்செப்ட் ஒரு வருடம் பேச அவர் எஸ் ஐ வரட்டும், பணத்தை கட்டிட்டு வண்டி எடுத்துட்டு போங்க என்று சொல்லி காத்திருக்க சொல்கிறார். இவர்கள் வெளியே காத்திருக்க உள்ளே லாயர் ஜீவாவை தனியாக கூட்டி வைத்து நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க உங்களோட கேரக்டரை நீங்களே தரம் தாழ்த்துகிறீர்கள் என்று சொல்கிறார்.

பிறகு லாயர் மனோஜிடம் நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க எனக்கு என்னுடைய பணம் வேணும்‌. அந்த பணத்தை தந்தா தான் அவ ஸ்டேஷன் என்று வெளியே போகணும் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் ‌எபிசோட் முடிவடைகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Radha

Recent Posts

ஓ…வசந்தராஜா…!-14

14 " அஸ்ஸு அவன் இங்கேயே வந்து விட்டான்டி" மண்டபத்தின் பால்கனியில் நின்று அப்போதும் விதார்த்துடன் போனில் பேசிக் கொண்டிருந்த…

5 hours ago

இயற்கையான முறையில் கஸ்தூரி மஞ்சள்

அழகான முகம், வசீகரமான முகம், கலையான முகம் ,கவர்ந்திருக்கும் முகம். கருகரு என்று ஆரோக்கியமாக வளரும் தலைமுடி, மாசு மருவற்ற…

5 hours ago

வாழ்வை வளமாக்கும் அட்சய திருதியை:குலதெய்வம் மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

அட்சய திருதியை வந்துவிட்டால் தங்கம் வாங்க வேண்டும் வெள்ளி வாங்க வேண்டும் என்று பலரும் அட்சய திருதியை வருவதற்கு முன்பாகவே…

6 hours ago

பட்டணத்தில் பூதம் விமர்சனம்

1964-ல் அறிமுகமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு 1967 வரை சுமார் இருபத்தைந்து கருப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பின்பே முதல்…

6 hours ago

உடலென நான் உயிரென நீ-5

5 " தமிழ்நாடு எல்லை ஆரம்பம் " வளைவான போர்டு வரவேற்பாய் சொன்ன போது , வானம் நிறம் மாறி வெளுக்கத் தொடங்கியிருந்தது. என்ன ஒரு துல்லியமான ப்ளான் ... ? சொன்னபடி விடியும் போது தமிழ்நாட்டிற்குள் நுழைந்து விட்டார்களே ... பிடிக்காத திட்டமென்றாலும்  இந்த  தமிழக வளைவுக்குள் நுழைந்ததும் சஷிஸாவின் மனது ஏனோ அமைதியை உணர்ந்தது . அது வரை  இருக்கை நுனியில் பயணித்த  கார் பயணத்தை  மெத்தென பின் சாய்ந்து  ஆசுவாசிக்க வைத்தது . பின்னால் சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் . " அப்படியே சீட்டில் படுத்துக் கொள்ளலாம். நாம் போக வேண்டிய ஊருக்கு இன்னமும் நிறைய நேரமாகும் ..."  சொன்னபடி தான் அமர்ந்திருந்த எதிர் சீட்டில் கால்களை நீட்டிக் கொண்டு படுத்துவிட்டான் கணநாதன் .…

10 hours ago

உங்க சீலிங் ஃபேன் மெதுவாக சுத்துதா? இதை ஃபாலோ பண்ணுங்க!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில்…

10 hours ago