Categories: Samayalarai

சுவைமிக்க தாளிப்பு வடகம்

ஒரு ஸ்பூன் போதும் குழம்பின் வாசனை அடுத்த வீட்டு  வாசலை தட்டும். நம் வீட்டில் வைக்கும் மீன் குழம்பு, புளி குழம்பு, சாம்பார், துவையல், போன்ற குழம்புகளில் தாளிப்பு வடகம் சேர்ப்பதால் குழப்பு இன்னும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். அந்த காலத்தில் பாட்டிகளின் கைவசம் என்றும் சொல்வார்கள். தாளிப்பு வடகத்தில் வெங்காயம், கருவேப்பிலை அதிகம் சேர்ப்பதால் ருசியை அதிகம் தருகிறது. இந்த தாளிப்பு வடகம் ஒரு வருடத்திற்கு மேல் ஆனாலும் கெட்டு  போகாமல் இருக்கும்.



அந்த காலத்தில் பாட்டிகள் வீட்டில் வரும் விசேஷத்திற்கு முன்னதாகவே இந்த தாளிப்பு கருவடவத்தை  தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இப்போ அப்படி  இல்லை  சமையல் செய்வதற்கு நேரம் இல்லாமல் கடையில்  விற்கும் சமையல் பொடி மற்றும் அஜினோமோட்டோ போன்ற பொருட்களை உணவில் சேர்த்து கொள்கின்றார்கள். இதனால் வயிற்று வலி, செரிமான கோளாறு போன்ற பல வித பிரச்சனைகள் வருகிறது. இந்த தாளிப்பு  வடகத்தில் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்ப்பதால் உடலுக்கு  நன்மைகளை தருகிறது. எல்லா குழம்பு வகைகளையும் மணக்க செய்யும்  தாளிப்பு வடகத்தை வீட்டிலேயே மிகவும் சுலபமாக எப்படி  செய்யலாம் என்று இந்த  பதிவில் பார்க்கலாம் வாங்க …



தேவையான பொருட்கள்:

 

  • சின்ன வெங்காயம் – 2 கிலோ

  • கடுகு – 50 கிராம்

  • வெந்தயம் – 50 கிராம்

  • சீரகம் – 50 கிராம்

  • உளுத்தம் பருப்பு – 50 கிராம்

  • சோம்பு – 30 கிராம்

  • மஞ்சத்தூள் – 50 கிராம்

  • கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு

  • உப்பு – 50 கிராம்

  • முழு பூண்டு -1

  • விளக்கெண்ணெய் – 100 மில்லி லிட்டர்



தாளிப்பு வடகம் செய்முறை:

ஸ்டேப் – 1   

முதலில்  2 கிலோ சின்ன வெங்காயத்தை எடுத்து சுத்தமாக கழுவ வேண்டும். தண்ணீரில் கழுவுவதால்  தோல் ஊறி சுலபமாக வெங்காய தோலை உரிக்க முடியும்.  அதன் பிறகு கழுவி வைத்த வெங்காயத்தை அரைக்க வேண்டும்.

ஸ்டேப் – 2

அரைத்து வைத்த வெங்காயத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்து கொள்ளவும். அதில் கடுகு, வெந்தயம், சீரகம், முழு உளுத்தம் பருப்பு அப்படி இல்லை என்றால் உடைத்த உளுத்தம் பருப்பு, சோம்பு, மஞ்சத்தூள், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு எல்லாத்தையும் சேர்த்து நல்லா  அழுத்தமாக மசிக்க  வேண்டும்.

ஸ்டேப் – 3

பிசைந்து வைத்த வடவத்தை கையை வைத்து நன்றாக மட்டமாக அழுத்தி விடவும். அதை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். கையால் பிசைவதால் கெட்டு போய்விடுமோ  என்ற அச்சம் வேண்டாம்.



ஸ்டேப் – 4

மறுநாள் காலையில் பிசைந்து வைத்த தாளிப்பு வடகத்தை ஒரு பெரிய தட்டில் கொட்டி பரப்பி விட்டு வெயிலில் வைக்க வேண்டும். இதே போல் ஒரு ஐந்து நாள் வரை காய வைக்க வேண்டும். வெயில் மிதமாக இருந்தால் ஒரு வாரம் வரை காய வைக்க வேண்டும்.

ஸ்டேப் – 5

காய வைத்த தாளிப்பு வடகத்தை மறுபடியும் ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு முழு பூண்டை எடுத்து பொடி பொடியாக நறுக்கி அதில் கலந்து விட வேண்டும். அதன் பிறகு 100 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் அதில் சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப் – 6

பிறகு ரெடி செய்திருந்த வடகத்தை விளக்கெண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைய வேண்டும். பிறகு உருண்டையை உருட்ட வேண்டும். விளக்கெண்ணெய் சேர்ப்பதால் ஓட்டும் தன்மை அதிகம் அதே சமயம் வாசனையாகவும் இருக்கும். அதனால் உருண்டை உருட்டும் பொழுது உடையாமல் கெட்டியாக வரும்.

ஸ்டேப் – 7

பிறகு உருட்டிய உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து, ஒரு மூன்று நாட்கள் காய வைக்க வேண்டும். நான்காவது நாள் அந்த உருண்டையை திருப்பி காய வைக்க வேண்டும். நாள் ஆகா ஆகா உருண்டையின் கலர் கருப்பாக மாறிவிடும். அதன் பின் இந்த உருண்டைகளை ஒரு பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வைக்கவும். இப்போது தாளிப்பு வடவம் தயார். இனிமேல் குழம்புவைக்கும் பொழுது தாளிப்பில் சேர்க்க வேண்டியதுதான்.



  • வீட்டுக் குறிப்பு:

  • சுத்தமான நாற்காலிகள்
     மைக்ரோ ஃபைபர் சோபாக்களின் மீது கரைகள் ஏற்பட்டால் நூறுசதவீதம் ஆல்கஹால் மற்றும் பிரஷ்ஷின் மூலம் அதை நன்கு தேய்த்தால் கரைகள் உடனே மறைந்துவிடும்.

  • பிரெட் பந்துகள்
    பிரெட்டுகளின் ஓரங்களை நீக்கி, நிறிய பந்து போல மீதமுள்ள பிரட்டை உருட்டிவைத்துக் கொள்ளுங்கள். கிச்சனில் கரைகள் ஏற்பட்டிருந்தால் கரைகளின் மீது அழுத்திதுடைத்தால் கரை நீங்கும். இதை ஸ்பாஞ்ச் போல பயன்படுத்துங்கள். காப்பி மேக்கர், தூசி மற்றும் போட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்ய இது ஒரு எளிதான வழியாகும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

2 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

2 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

2 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

2 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

6 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

6 hours ago