Categories: lifestylesNews

உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள்

உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் திருமணம் என்றாலே ஒரு கொண்டாட்டம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..

ஒவ்வொரு திருமணமும் தங்களின் கலாச்சார முறைப்படி பல்வேறு மரபுகளைப் பின்பற்றுவார்கள்.

சிலர் தங்களின் கல்யாணம் இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று வித்தியாசமான முறையில் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் நடத்துவார்கள். இவ்வாறு உலகம் முழுக்க சில இடங்களில் விசித்திரமான முறையில் திருமணங்களில் சடங்குகள் நடைபெறுகின்றன. அப்படி திருமண நிகழ்ச்சியில் என்னென்ன நடைபெறுகிறது என்பதைக் காணலாம்.

ஜூதா சுப்பாய் ( Joota Chupai)

ஜூதா சுப்பாய் என்ற ஒரு வகையான வினோதமான சடங்கில் மாப்பிள்ளையின் காலணியை எடுத்து மறைத்து வைத்து பெண்ணின் சகோதரிகள் விளையாடுவர்.

பின் மாப்பிள்ளை தரப்பில் இருந்து மாப்பிள்ளையின் சகோதர சகோதரிகள் பேரம் பேசி மாப்பிள்ளைக்கு அதை வாங்கி கொடுப்பார்கள்.



மரத்தை திருமணம் செய்ய வேண்டும்

மணமக்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் கெட்டது நடைபெறும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதற்காக முதலில் மரத்தைத் திருமணம் செய்தால் அவற்றைத் தடுக்க முடியும் என்பது பலரின் நம்பிக்கை. இதனை ஒரு வினோதமான சடங்காகவும் பின்பற்றுகின்றனர்.

அழுகை சடங்கு

திருமணங்களில் பெரும்பாலும் அழுகை ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. திருமணமாகும் பெண்கள் பிறந்த வீட்டை விட்டுப் போகிறோம் என்ற கண்ணீருடனும் திருமணம் நடைபெற்று தன்னவனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்கிறோம் என்ற ஆனந்தக் கண்ணீருடனும் ஒவ்வொரு திருமணம் நிகழ்வு இருக்கும்.

ஆனால் சீனாவின் துஜியா மக்கள் திருமண நாளுக்கு 30 நாட்களுக்கு முன்னர் அழுவதன் மூலம் திருமணத்திற்குத் தயாராகிறார்கள். மணமகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அழுவார்களாம்.



மணமக்களைக் கருப்பாக்கும் சடங்கு

மணமக்களின் மீது கருப்பு சாயம் பூசுவது என்பது ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் மணமக்களை அவர்களின் நண்பர்கள் பல பொருட்களைக் கொண்டு அலங்கோலமாக்கவிடுகிறார். தீய சக்திகளை விரட்டுவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் இது இன்னும் நடக்கிறது.

மீதி உணவு பரிமாறப்படும்

பிரஞ்சு பழக்கவழக்கங்களின்படி, எஞ்சிய உணவுகளை ஒரு பானையில் வைத்து புதுமணத் தம்பதிகளுக்குக் கொடுப்பார்களாம். இது தம்பதியருக்கு ஆற்றலைக் கொடுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. தற்போது அந்த முறை மாறி அவர்களுக்கு சாக்லேட் மற்றும் மதுபானம் வழங்கப்படுகிறது.

3 நாட்களுக்குக் குளியலறை இல்லை

திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்குத் திருமணமான தம்பதிகள் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்ற வினோத பழக்கம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் நடைமுறையில் உள்ளது.

இந்த பழக்கத்தினை மீறும் தம்பதிகளின் திருமண வாழ்வில் முறிவு , தனது துணைக்குத் துரோகம் செய்வது, குழந்தைகள் பிறந்தால் உயிரிழப்பது போன்ற துயர சம்பவங்கள் நடக்கும் என நம்புகின்றனர்.

முத்த பாரம்பரியம்

திருமணத்தின் போது முத்தம் கொடுப்பது சாதாரணமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த சடங்கு அப்படிப்பட்டதல்ல. இந்த சடங்கில் நீங்கள் விரும்பினால் மணமகன், மணமகள் யாருக்கு வேண்டுமென்றாலும் முத்தம் கொடுக்கலாம்.

திருமணத்தின் போது மணமகன் ஏதாவது ஒரு காரணத்திற்காக நகர்ந்து செல்ல நேர்ந்தால் திருமணமாகாத இளைஞர்கள் மணப்பெண்ணை முத்தமிடலாம். அதேபோல மணமகனுக்கும் திருமணம் ஆகாத பெண்களை முத்தமிடலாம். இது ஸ்வீடனின் தனித்துவமான பாரம்பரியமாகும்.

திருமண நாளில் சிரிக்கக் கூடாது

திருமண நாட்கள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாக இருக்க வேண்டும். காங்கோவின் சில பகுதிகளில் அப்படி இல்லை! காங்கோ திருமணங்கள் காதலைப் பற்றியது அல்ல, அவை இரண்டு குடும்பங்கள் மணமகளின் “விலை” பேரம் பேசிய பிறகு நடைபெறும் ஒரு சடங்கு ஆகும். அந்த நாளில் மணமக்கள் சிரிக்கக் கூடாது என்பது அவர்களின் வழக்கம்.



மணமகனின் கால்களை அடிப்பது

தென் கொரியாவில் திருமண விழாவுக்குப் பிறகு “மணமகனின் கால்களை அடிப்பது” என்ற சடங்கு நடைபெறுகிறது. உண்மையில் இது ஒரு வேடிக்கையான பாரம்பரியம். இந்த வேடிக்கையான சடங்கு கொரிய திருமண கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

மணமகள் மீது எச்சில் துப்புதல்

கென்யாவின் வினோதமான திருமண சடங்குகளில் ஒன்று இதுவாகும். துப்புவது பொதுவாக அவமானத்தின் அடையாளமாகும், ஆனால் மசாய் மக்கள் அதனை ஆசீர்வாதமாகப் பார்க்கிறார்கள். மணமகளின் தந்தை மகளின் தலை மற்றும் மார்பகங்களில் எச்சில் துப்பி ஆசீர்வதிக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

3 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

3 hours ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

3 hours ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

3 hours ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

6 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

6 hours ago