சசிகுமார் இயக்கத்தை ஹீரோயின் இவங்களா…?

சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆனார்.

இவரது படங்கள் அனைத்தும் சமூக அக்கறையோடு இருக்கும். நட்பையும் நண்பர்களையும் பெருமை படுத்தி இவர் படங்களில் கூறியிருப்பார். ‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘போராளி’, ‘சுந்தர பாண்டியன்’, ‘வெற்றிவேல்’ ஆகியவை இவர் நடித்த படங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.



பொதுவாக சசிகுமார் இயக்கினாலும் சரி நடித்தாலும் சரி அந்த படங்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழும் வகையில் இருக்கும். தற்போது இயக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்த சசிகுமார் நடிப்பில் வாய்ப்புகள் தொடர்ந்து வந்ததால் அதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், பல வருடங்களுக்கு பிறகு சசிகுமார் பெண்களை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அதில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா இறுதியாக இந்தியில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘ஜவான்’ படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. அதைத் தொடர்ந்து அவரின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘எல்.ஐ.சி’ திரைப்படத்திலும், ‘தனி ஒருவன் 2’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக சசிகுமார்- நயன்தாரா கூட்டணியில் திரைப்படம் உருவாக போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உணவகங்களை வெற்றிகரமாக நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சாதனையாளர்கள்

வீட்டில் அம்மா கையால் சமைத்த உணவை சுவைத்துவிட்டு, "இந்த சுவையை உலகமே அனுபவிக்க வேண்டும்!" என்று உற்சாகமாக பேசியிருக்கிறீர்களா? அத்தனை…

1 hour ago

மீனா கொடுத்த அதிர்ச்சி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு…

1 hour ago

பாட்டுக்கு மெட்டா? சமூக வலைதளங்களில் வைரலாகும் வாலி-நா.முத்துக்குமார் பேட்டி

தற்போது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுவது வைரமுத்து- இளையராஜா, கங்கை அமரன் சர்ச்சை. வைரமுத்து அண்மையில் படிக்காத பக்கங்கள் என்ற…

4 hours ago

கற்றாழை ஜெல் நீங்களே வீட்டில் செய்யலாம் !

கற்றாழை மிகவும் குளிர்ச்சி வாய்ந்த பொருள்.. குறிப்பாக உச்சி முதல் பாதம் வரை அழகு சாதன பொருளாக இந்த கற்றாழை…

4 hours ago

அடிக்கிற வெயிலுக்கு சில்லுன்னு போக வேண்டிய 5 மலைப்பிரதேசங்கள்..

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருஷம் வெயில் வாட்டி வதைக்கிறது. அதனாலேயே ஊட்டி, கொடைக்கானல் என குளிர் பிரதேசங்களில்…

4 hours ago

பாலாவின் மறுரூபம் தான் அந்த டைரக்டர்..

 இக்கரைக்கு அக்கரை பச்சை என்று எப்பவுமே தோணும். ஆனா அந்த கரைக்கு போன அப்புறம் தான் அதோட உண்மை நிலவரம்…

4 hours ago