பாதரஸ பற​வைகள்-24 (நிறைவு)

24

அ ராதிகாவும் ராகவனும் அறைக்குள் நுழைந்தார்கள். அபிராமி இப்போ உனக்குத் தேவலைன்னா நாம வீட்டுக்குப் போகலாமா ?!

போகலாம் எனக்கு இப்போ ஒண்ணும் இல்லை இந்தமாதிரி ஏதும் இக்கட்டா நடந்திடக்கூடாதுன்னுதான் நான் அன்னைக்கே விஜிகிட்டே சொன்னேன். ஆனா அவ கேட்கலை இப்போ அவளோட நிலைமையும்.



வினை விதைத்தாளே அதன் பலனை இப்போ அனுபவிக்கிறா அடுத்தவாரத்தில டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்களாம். அம்மாவோட மருத்துவமனையில்தான் இருக்கா. சீக்கிரம் வீட்டுக்கு வந்து மட்டும் எங்கே மாறப்போறா? அவ தன்னோட குணங்களை நிச்சயம் மாற்றிக்கொள்ளப் போவதில்லைன்னு இன்னமும் தேளாத்தான் கொட்டப்போறா ?! நான் பரவாயில்லை அம்மாதான் பாவம். ராதிகாவின் கவலை அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

சரி அழாதே ராதிகா இதெல்லாம் விதி முடிஞ்சிப் போச்சு இனிமே பேசி பயனில்லை நானிருக்கிறேன் அப்படியெல்லாம் விட்டுடமாட்டேன். நமக்குன்னு ஒரு தொழில் தொடங்கியாச்சு பர்ஸ்ட் புரோஜெக்ட் வெற்றிகரமாக போயிட்டு இருக்கு இதுக்குமேல என்ன வேணும். நடந்ததையே நினைக்க வேண்டாம் ராகவின் ஆறுதல் அவளை சமாதானப்படுத்தியது.

அந்த காம்பெளண்ட் வீடு அந்த இரண்டு ஜோடிகளையும் ஆரத்தி கரைத்து வரவேற்றது இதுக்கு மேல இந்தப் பிள்ளைகளுக்கு எந்தப் பிரச்சனைகளும் வரக்கூடாது. ராதிகாம்மா நீங்க சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிட்டாங்க போதும் இனிமே இந்த வீட்டுலே ஒரு நல்லது நடக்கணும் பாட்டியும் மற்றவர்களும் அதையே சொல்லு. என்னடா சிவா கடைசியிலே உனக்கும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியாச்சு.

ஆமாமா இவருக்கு சமைச்சிப்போடத்தான் நான் இத்தனை படிச்சேனாக்கும் அபிராமி புன்னகையோடு சொல்ல அதென்னடி அப்படி சொல்லிட்டே சிவா எம்பேரன் அடியே பேரன் பொண்டாட்டி இந்த வீட்டை ஆளப்போறவன்டி அவன் பகைச்சிக்காதே பாட்டி அபிராமியின் காதைப் பிடித்து ஆட்டினாள். 

பழைய கலகலப்புக்கு மீண்டதைப் போலிருந்தது அனைவருக்கும் எல்லாருக்கும் இன்பம் அக்கூட்டில் உள்ள பாதரஸ பறவைகள் தன் இணைப்பறவைகளை இன்பமாய் பார்த்து ரசித்து காதல்பார்வைகளில் விழுங்கிக்கொண்டு இருந்தது நாமும் அதை ரசித்து வாழ்த்துவோம்

 முற்றும்



What’s your Reaction?
+1
8
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

6 hours ago