16

“ஜீவி என்னத்தைடி உருட்டிட்டு இருக்கிறாய்?” ஸ்டூலின் மேல் ஏறி நின்று லாப்டை குடைந்து கொண்டிருந்தவளை பார்த்து கேட்டாள் கலைவாணி.

“அம்மா அக்காவோட போன் எங்கேம்மா?”

“அதானே…ஸ்வேதா போனை எங்கே?”

பதில் கேள்வி கேட்டவளை முறைத்தாள்.”ம்மா…”

“எனக்கு தெரியலை ஜீவி.கையிலேயேதான் வைத்துக் கொண்டிருந்தாள்.ஒரு வேளை மாப்பிள்ளையிடம் இருக்கிறதோ என்னவோ?”

ஜீவிதாவிற்கு திக்கென்றது.ஸ்வேதாவை பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ள அவளது போன் ஒன்றே வழி என்று போனை தேட ஆரம்பித்திருக்கிறாள் .ஆனால் முதலிலேயே போனை கைப்பற்றிக் கொண்டானா அந்த வில்லன்? 

பிரவீணுடன் பேசி வந்த பிறகு ஹரிகரனை வில்லனாகத்தான் நினைக்க தோன்றியது.அவனைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளும்  முன் நிச்சயம் அவனை… ஹரிகரனை சந்திக்கவே கூடாது.பாவிப்பயல் ஏதோ வசிய மந்திரம் வைத்திருப்பான் போலும்.சித்தி,சித்தப்பா,தம்பி,




 

மனைவி,குழந்தை என அவனது வசிய வளையத்திற்குள் விழுந்தவர்கள் ஏராளம்.

அவனது தம்பி, அவ்வளவு பேசிக் கொண்டிருந்தவன்,அவனைப் பார்த்ததும் மகுடி நாகமாகி விடவில்லையா?கைகளை தலைக்கு மேலுயர்த்தி பாம்பு நடனமாடவில்லை அவ்வளவுதான்.மற்றபடி அண்ணனின் மகுடிக்கு நடனமாடியது தம்பியின் தலை.

திடுமென அங்கு வந்து நின்றவனை அவள் எதிர் பார்க்கவில்லை.”பிரவீண் அது ஹரி மாதிரி தெரிகிறது” உடன் பேசிக் கொண்டிருந்தவனிடம் குரல் குறைத்து சொல்ல,அவன் திரும்பிப் பார்த்து அலட்டாமல் தலையசைத்தான்.”ஹரியேதான்”

“இங்கே எப்படி வந்தார்?”

“சொன்னேனே,நாங்கள் தொழில் விபரம் இந்த ரெஸ்டாரன்டில்தான் பேசிக் கொண்டிருந்தோம்.ஒரு போன் வரவும் எழுந்து போனான்.அப்போதுதான் உன்னை பார்த்தேன்”

அடப்பாவி பக்கத்தில் அண்ணனை வைத்துக் கொண்டே அவ்வளவு புறணி பேசினாயா நீ ?அதோ தூரத்தில் வருபவன் சமீபிக்கும் முன் ஓடி விடலாமா? அவசரமாக திட்டமிட்டாள்.

பின்வாசலா…முன்வாசலா…

யோசனை செய்து முடிவெடுக்கும் முன் “இங்கே என்ன செய்கிறாய்?” முன் வந்து நின்று அதட்டிக் கொண்டிருந்தான் ஹரிகரன்.

விளக்கு பூதமா இவன்?அதற்குள் எப்படி அருகே வந்தான்…விழித்தபடி நின்றிருக்க,”நீங்கள் வரும் வரை பேசிக் கொண்டிருந்தோம் அண்ணா” என்ற குரல் அருகிலிருந்து எழுந்தது.

யார் இது இவ்வளவு மரியாதையும்,பவ்யமும் காட்டுபவர்…அவள் ஆச்சரியமாக திரும்பிப் பார்க்க,பிரவீண் கை கட்டி வாய் பொத்தாத பள்ளிக்கூட மாணவனாய் நின்றிருந்தான்.ஹரிகரனின் பார்வை அவனை அலட்சியம் செய்து இவள் மீதே இருந்தது.

“ஈசன் எப்படி இருக்கிறான்?”

ஆஹா பிள்ளை மீது பாசம்தான், முகம் திருப்பிக் கொண்டாள்.”வீட்டை விட்டு வெளியேற்றும் போது இந்த அக்கறை இருந்திருக்க வேண்டும்” முணுமுணுத்தாள்.

“என்னது? நீ இப்போ எஸ்டேட்டில் இல்லையா?” பிரவீண் அலறலாய் கத்தி விட்டு,ஹரிகரனின் தீக்குச்சி பார்வையில்…”அண்ணா…அண்ணி…” என தந்தியடித்து வாய் மூடிக் கொண்டான்.இப்போது நிஜமாகவே அவன் வாய் மேல் கை.

“ஒரு நிமிடம் இங்கே வா ஜீவி” ஹரிகரன் எழுந்து நின்று அழைக்க,ஜீவிதா கண்டு கொள்ளாமல் திரும்பி நிற்க,பொத்திய கைக்கு மேலாக உருண்ட விழிகளுடன் இருவரையும் பார்த்திருந்தான் பிரவீண்.

ஹரிகரன் வலுக்கட்டாயமாக அவளை எழுப்பி ரெஸ்டாரன்டின் உள்ளிருந்த தங்கும் விடுதியின் தனி அறை ஒன்றுக்குள் அழைத்துப் போனான்.

“அதென்ன உனக்கு எங்கே போனாலும் கூஜா தூக்க ஆள்.எப்போதும் என்னை கண்காணிக்கிறாயா?” அறைக்குள் நுழைந்ததும் எகிறினாள்.

“ஆமாம்” நிதானமாக பதில் சொன்னவனை கோபமாக பார்த்தாள்.”எதற்காக இப்படி என் பின்னாலேயே அலைகிறாய்?”

ஒரு நிமிடம் அவளைப் பார்த்தபடி நின்றவன்,சட்டென அவளை இழுத்து இறுக்கி அணைத்தான்.

“நமக்காக…நம் குழந்தைக்காக…நம் வாழ்க்கைக்காக…நம் காதலுக்காக” ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் ஒரு முத்தமிட்டான்.உறைந்து நின்று விட்டாள் ஜீவிதா.




அவள் கண்ணோரம் துளிர்த்து விட்ட நீர்த்துளியை சுட்டு விரலால் துடைத்தான்,”கொஞ்ச நாட்கள் பொறு ஜீவி.எல்லாம் சரியாகி விடும்”

“காதலா…அந்த புனிதமான வார்த்தையை கூட சொல்லாதே” அவன் மார்பில் குத்தினாள்.

“நம் காதல் புனிதமானது ஜீவி.எத்தனை தடைகள் வந்தாலும் நம்மை சேர்த்து வைக்கும்”

“பெரிய காதல் மன்னனென்ற நினைப்பு உனக்கு” பொருமினாள்.

“இல்லை.உனக்கு மட்டுமானவன் என்ற நினைப்பு.நிதானமாக அமர்ந்து நம் காதலை யோசி.வா”மீண்டும் ரெஸ்டாரன்ட் வந்தவன்,பிரவீண் முன் அமர்ந்து அவன் முகத்திற்கு நேரே கை நீட்டினான்.

“இவன் சொல்வதை நம்பாதே.லூசு மாதிரி எதையாவது உளறுவான்”பிரவீண் வார்த்தைகளின்றி விழித்திருந்தான்.

ஜீவிதாவிற்கு மிக உடனே பிரவீண் சொன்ன அனைத்தையும் நம்ப வேண்டும் போல் தோன்றியது.”அவன் அப்பா,அம்மாவிற்கே பணம் கொடுத்து நம் கல்யாணத்தை நடத்தியவர்தானே நீங்கள்?” 

“ஆமாம்” ஹரிகரன் மறுக்கவில்லை.”எனக்காக வந்து நிற்க ஆட்கள் வேண்டுமில்லையா? புட்டு ஐஸ்க்ரீம் ஆர்டர் சொல்லவா? “கண் சிமிட்டினான்.

“ப்ராடு.ஐஸ்க்ரீமே சாப்பிட்டிராத மாதிரி அன்று எப்படி நடித்தாய்?”

“ம்…உன்னை இம்ப்ரஸ் பண்ண வேண்டுமே.ஆனால் அந்த வெரைட்டி ஐஸ்க்ரீம் அன்றுதான் புதிதாக சாப்பிட்டேன்.நீதான் அறிமுகம் செய்து வைத்தாய்.வெகு ருசி” நாக்கை சப்பு கொட்ட,ஜீவிதாவிற்கு டென்சன் ஏறியது.

டேபிளிலிருந்து தண்ணீரை அவன் மேல் விசிறியவள்”நீயே கொட்டிக்கோ.நான் போறேன்” வெளியேறினாள்

பெரிய இவன் மாதிரி பேசுகிறானே!இவன் முகமூடியை கிழிக்கனும் கறுவியபடி ஸ்வேதாவின் போனை தேடினாள்.வீடு முழுவதும் உருட்டி பார்த்து இறுதியில் அவளது அழுக்கு உடைகள் போட்டு வைக்கும் லாண்டரி் பேக்கினுள் கண்டுபிடித்தாள்.

இதற்குள் தெரியாமல் விழுந்ததா?அல்லது அக்காவே மறைத்து வைத்தாளா?இனம் புரியா ஏதோ படபடப்புடன் போனை சார்ஜில் போட்டு எடுத்து  லேப்டாப்போடு கனெக்ட் செய்து அதன் பாஸ்வேர்டை உடைத்து திறந்து பார்த்தாள்.

அவளது யூகம் சரியானது.ஸ்வேதாவின் போனில் அவளுடன் உற்சாகமாக பல போஸ்களில் இருந்தவன் ஹரிகரன் இல்லை.




What’s your Reaction?
+1
61
+1
44
+1
9
+1
3
+1
5
+1
1
+1
2

Radha

View Comments

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

2 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

3 hours ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

3 hours ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

3 hours ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

5 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

5 hours ago