Categories: Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 7

7

 


” எனக்கு கேரட் பிடிக்காது .வேண்டாம் ” சொன்னதோடு தட்டையும் தூக்கி எறிந்தான் அமிர்தபாலன் .

சுடரொளி ஆத்திரத்துடன் அவனை அடிக்க கையை ஓங்கி விட்டாள் .ஓங்கிய கையை அவன் ஒரு வித அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்து ” நீயும் அடிப்பாயா ? ” கண்ணில் நீர் கோர்க்க  கேட்க  , நெருப்பிலிட்ட வெண்ணையாய் உருகி அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள் .

” ஏன்டா கண்ணா இப்படி செய்கிறாய் ? இது தப்பில்லையா ? “

” ஆனால் எனக்கு கேரட் பிடிக்காதே “

” கேரட் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா ? அதில் நிறைய விட்டமின்கள் இருக்கிறது …” தொடர்ந்து கேரட்டின் நன்மைகளை அவள் மென் குரலில் சொல்லியபடி இருக்க , அவளது அணைப்பு தந்த இதம் காரணமாகவோ என்னவோ , அமிர்தபாலன் அவளை ஒட்டிக் கிடந்தபடி ம் கொட்டிக் கொண்டிருந்தான் .

” சீக்கிரம் வாருங்கள் ” உஷாந்தி ஆனந்தபாலனின் கை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள் .

” இங்கே என்ன நடக்கிறது ? ” ஆனந்தபாலன் ஒட்டிக் கிடந்த இருவரையும் பார்த்து கேட்டபடி வந்தான் .

” இவள் குழந்தையை அடிக்கிறாள் ஆனந்த் .நான் பார்த்தேன் ” உஷாந்தி கையாட்டி நாடகத்தனமாக அபிநயித்தாள் .

ஆனந்தபாலன் சுடரொளியை பார்க்க , அவள் அமிர்தனை அணைத்தபடி அவனை பார்த்தாள் .இருவரது பார்வையும் சந்திக்க , மௌனமாக இருந்தனர் இருவரும் .



” அமிர்தன் கன்னத்தை பாருங்களேன் அடித்த அடியில் வீங்கியிருக்கும் .” சொன்னபடி அமிர்தனை சுடரொளியிடமிருந்து நிமிர்த்த முயல , அவன் அலறலுடன் மேலும் அவளிடமே ஒட்டினான் .

” ஏய் ரொம்பவும் ஆடாதே ! பிறகு …உனக்குத்தான் கஷ்டம் .ம் …நிமிர்ந்து என்னைப் பார் “

உஷாந்தி அமிர்தனை நிமிர்த்த பார்த்து முடியாமல் , அவனது தலைமுடியை பற்றி இழுக்க , சுடரொளி வேகமாக அவள் கையை பிடித்து தள்ளினாள் .

” என்ன செய்கிறீர்கள் ? அவன் குழந்தை .அவனிடம் இப்படியா அரக்கத்தனமாக

 நடந்து கொள்வீர்கள் ? “

சுடரொளி தள்ளிய வேகத்தில் கீழே விழ இருந்தவள் சுதாரித்து நின்று ” ஏய் என்னையே தள்ளுகிறாயா ? உன்னை என்ன செய்கிறேன் பார் ! ஆனந்த் உடனே இவளை வேலையை விட்டு நிறுத்துங்கள் .இவளை நம்பாதீர்கள் .இவள் குழந்தை கடத்துபவள் .அமிர்தனை கடத்திப் போய் விற்று விடுவாள் “

கைகளும் , கால்களும் பதற பதற நின்றபடி கத்திக் கொண்டிருந்தாள் .அவள் உடல் முழுவதுமே ஒரு வகை பதட்டம் ஓடிக் கொண்டிருந்தது.

அமிர்தனை அவள் இழுத்த வேகத்தில் அதிர்ந்து அவளை தள்ளி விட்டிருந்த சுடரொளி , அவளது அநியாய குற்றச்சாட்டுகளில் அதிர்ந்து ஆனந்தபாலனை பார்க்க , அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் .

” உஷாந்தி வாயை மூடு ” பார்வை இன்னமும் சுடரொளி மேலேயே இருக்க ,குரல் மட்டும் உஷாந்திக்கு .

” ஆனந்த் என்னைப் பாருங்களேன் .நான் நம் குழந்தையின் நன்மைக்காகத் தானே …”கொஞ்சலாய் பேசியபடி அவனருகே வந்தவளின் முகத்திற்கு நேராக கையை விசிறினான் .



” என் முன்னால் நிற்காதே .போ …” அவனது கோபத்தில் அதிர்ந்து உஷாந்தி மாடியேறி போய்விட்டாள் .

இன்னமும் சுடரொளியின் அணைப்பில் இருந்த மகனிடம் வந்தவன் , மெல்ல அவன் தலையை வருடி விட்டு சென்றுவிட்டான் .

இந்த சம்பவத்தின் பிறகு அமிர்தன் அதிகமாகவே சுடரொளியுடன் ஒட்டிக் கொண்டான் .

 

ன்னமும் இரண்டு லட்சங்கள் இருந்தால் வேலை முடிந்து விடும் சார் .நீங்கள்தான் மனது வைக்க வேண்டும் ” ராஜா கெஞ்சுதலாக ஆனந்தபாலனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் .

” ம்…ம்…பார்க்கலாம் ” தட்டிக் கழிப்பது போல் பேசிக் கொண்டிருந்தான் ஆனந்தபாலன் .

” நீங்கள் அப்படி சொல்லக் கூடாது .ஏழை மக்கள் . அவர்களுக்காக பாருங்கள் “

” சரி சார் .நான் யோசித்து சொல்கிறேன் “

” நான் நாளை வரட்டுமா ? “

” வேண்டாம் .. .நீங்கள் இங்கே வர வேண்டாம் .நானே உங்களை வந்து பார்க்கிறேன் “

ராஜாவின் முகம் வாடி விட்டது .” சரி சார் ” போய் விட்டான் .

தட்டென்ற சத்தத்துடன் தன் முன்னால் வைக்கப்பட்ட மர டிரேயை எட்டிப் பார்த்தான் ஆனந்தபாலன் .” என்ன இது ? “

” காபி .கொட்டிக்கோங்க ” எரிச்சலாக சொன்னாள் சுடரொளி .

” அட ,சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு என்ன மரியாதை ? “

” சம்பளம் கொடுக்கிறாயா ? நான் உனக்கு காபி போட்டுக் கொடுக்க வந்தேனென்கிறாயா ? “

சுடரொளி ஒரு நாள் அடுப்படிக்குள் வேணுகோபாலனுக்கு மணமான பில்டர் காபி போடும் முறையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த ஆனந்தபாலன் அவளையே காபி போட்டு வருமாறு சொல்ல, தனது திறமையை காட்டுவதாக நினைத்து காபி போட்டு வந்தாள் .



மிகவும் ருசியென்று பாராட்டியவன் , அன்றிலிருந்து காபி போடும் வேலையை அவள் தலையில் கட்டி விட்டான் .போடும் வேலை இல்லை .அதைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலை , முக்கியமாக ஆனந்தபாலனுக்கு .

” இதுவெல்லாம் என் வேலை இல்லை ” எகிறியவளை உற்றுப் பார்த்தான் .

” உன் அம்மாவின் கை மணம் உன்னிடம் அப்படியே இருக்கிறது .அம்மாவின் காபியை நான் அதன் பிறகு வேறு எங்கும் குடிக்கவில்லை .அந்த ருசியை மீண்டும் சுவைக்கத்தான் காபி வேலையை உன்னிடம் கொடுத்தேன் “

சுடரொளி அமைதியாகி விட்டாள் .தனது தாயின் நினைவில் மனம் கசிந்து காபி வேலையை தனதாக்கிக் கொண்டாள் .சுடர் …இவன் உன்னை சென்டிமென்ட் பேசி அடக்கி விட்டானென சொன்ன மனட்சாட்சியை கண்டு கொள்ளவில்லை .

” ஒரு சிப் குடித்துப் பார்.இன்று அதிக ருசியாக வந்திருக்கிறது ” அவன் அருந்திய  கப்பை தன்னை நோக்கி நீட்டியவனை கொலை பார்வை பார்த்தாள்.

” இங்கே பாருங்க , உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை .அவர் ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் கேட்கிறார் .அதை எதற்கு தட்டிக் கழிக்கிறீர்கள் ? “

” எவர் …? ” ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.

” அவர்தான் .ராஜா .ரேஞ்சர் “

” அவர் விபரங்களெல்லாம் நீ சொல்லி எனக்கு தெரிய வேண்டியதிருக்கிறது பாரேன் “

” ப்ச் …பேச்சை மாற்றாதீர்கள் .அவர் கேட்ட பணத்தை கொடுக்க முடியுமா ? முடியாதா ? “



” ஐம்பது …நூறா ? இரண்டு லட்சம் கேட்கிறார்மா .உடனே எப்படித் தூக்கிக் கொடுக்க முடியும் ? “

” மலைவாழ் பெண்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுப்பதற்காக அவர் இந்தப் பணத்தை கேட்கிறார் .தெரியும்தானே ? “

” ம் …கேள்விப்பட்டேன் .ஏற்கெனவே இரண்டு கிராமங்களில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.இது மூன்றாவது கிராமம். “

” எவ்வளவு நல்ல விசயம் ! மலைப் பெண்கள் காலைக் கடனை கழிக்க திறந்தவெளிகளைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது .இது எவ்வளவு கடினம் தெரியுமா ? ஒரு பெண்ணால்தான் இந்த கொடுமையை உணர முடியும் .உங்களுக்கென்ன ஆண் பிள்ளை .கரண்டு கம்பத்தை பார்க்கும் போதெல்லாம் காலை தூக்கும் ….”

” ஏய்…ஏய்…ஸ்டாப் …ஸ்டாப் என்ன இது ? எதற்காக இப்படி கடின வார்த்தைகளை பேசுகிறாய் ? “

” பணம் கொடுக்க ஒத்துக் கொள்ளுங்க .இல்லையென்றால் இப்படித்தான் பேசுவேன் “

” மை காட்…” ஆனந்தபாலன் கைகளை விரித்து கவலை காட்டிக் கொண்டிருந்த போது , அங்கே வந்த உஷாந்தி இருவரையும் விசித்திரமாகப் பார்த்தாள் .

” இங்கே என்ன நடக்கிறது ? “

” ஒன்றுமில்லை .நீங்க போகலாம் ” சுடரொளி பட்டென பேச உஷாந்தி அவளை முறைத்தாள். ஆனந்தபாலனருகே தோளுரச இடித்தபடி அமர்ந்தாள் .

” ம் …இப்போ பேசுங்க ” கன்னத்தில் கை தாங்கி இருவரையும் கவனிக்க தயாரானாள் .

இது தேவையா உனக்கு ? ஆனந்தபாலன் சுடரொளியை சலிப்புடன் பார்க்க , அவள் வேறு யோசனைக்கு வந்திருந்தாள் .

” மலைவாசி பெண்களுக்கு பாத்ரூம் கட்டித் தருவதற்கு இரண்டே லட்சம்தான் ரேஞ்சர் ராஜா கேட்கிறார் மேடம் .அதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்  .” அழகாக பற்ற வைக்க , உஷாந்தியின் விழிகள் எரிந்தன.

” என்ன …கக்கூஸ் கட்ட இரண்டு லட்சமா ? ஆனந்த் என்ன இது ? ” கத்த துவங்க …

” அனுபவிடா ” சத்தமின்றி இதழசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் .



அரை மணி நேரம் கழித்து ஆனந்தபாலன் வந்து ” போகலாமா ? ” எனக் கேட்க விழித்தாள்

” எங்கே ? “

” எதையும் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்ய மாட்டேன் சுடர் .வா ராஜாவை காட்டிற்குள் போய் பார்க்கலாம் .அப்படியே அந்த மலைவாசி பெண்களிடமும் பேசி வரலாம் “

” இவ்வளவு நம்பிக்கையின்மையா ? ” குறைபட்ட போதும் உடனே கிளம்பி விட்டாள் .

அமிர்தன் காட்டிற்கு எனவும் குதித்துக் கொண்டு கிளம்ப ” அ…அவர்கள் வரவில்லையா ? ” மெல்லக் கேட்டாள் .

” எவர்கள் ? “

” உ…உங்கள் மனை….ஆங் அமிர்தனின் அ…அம்…” எப்படி சொல்ல முயற்சித்தும் அவளால் முடியவில்லை.

இறுதியாக ” உஷா வரவில்லையா ? ” எனக் கேட்டு முடித்தாள் .

” இல்லை ” ஒற்றை வார்த்தை பதில் .

” அவர்களை எப்படி சமாளித்தீர்கள் ? “

” எதில் …நீ பற்ற வைத்து விட்டு வந்த விசயத்திலா ? அதெல்லாம் சரி பண்ணிட்டேன் .திரும்ப எப்படின்னு கேட்காதே . அதெல்லாம் தாம்பத்திய ரகசியம் ” சொல்லிவிட்டு அவன் கண் சிமிட்ட , சுடரொளிக்கு வாந்தி வரும் போல் இருந்தது.



What’s your Reaction?
+1
46
+1
32
+1
2
+1
8
+1
0
+1
0
+1
4

Padma Grahadurai

Website Admin

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

3 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

3 hours ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

3 hours ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

3 hours ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

6 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

6 hours ago