குரங்கு பெடல் விமர்சனம்

சினிமாவில் நடித்தோமா, நாலு காசு பார்த்தோமா, கார், பங்களா என செட்டில் ஆனோமா என்று நினைக்கும் நட்சத்திரங்கள்தான் அதிகம். நல்ல படங்களைத் தந்து, இந்தச் சினிமா உலகை வாழ வைக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிகக் குறைவு. இதில் விதிவிலக்காக தனுஷ் போன்றவர்கள் சிறந்த படங்களைத்  தயாரித்து வழங்கி வருகிறார்கள். இப்போது இந்த லிஸ்டில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார்.



சிவகார்த்திகேயன், சவிதா சண்முகம், சுமி. பாஸ்கரன் இம்மூவரும் இணைந்து ‘குரங்கு பெடல்’ என்ற குழந்தைகள் படத்தைத் தயாரித்துள்ளார்கள். இயக்குநரும், எழுத்தாளருமான ராசி. அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

1980களின் கோடைக்காலம். ஈரோடு மாவட்டம் பவானி  அருகே உள்ள ஒரு சிறு ஊரில்  ஐந்து சிறுவர்கள்  கோடை விடுமுறையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதில் ஒரு சிறுவன் மட்டும் சைக்கிள் வாங்கிவிட மூன்று  சிறுவர்கள் சைக்கிள் வாங்கிய சிறுவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள்.

மாரியப்பன் என்ற சிறுவன் மட்டும் தனித்து விடப் படுகிறான். வாடகை சைக்கிள் எடுத்து உயரம் போதாமல் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் கற்றுக்கொள்கிறான். இந்தச் சைக்கிள் கற்றுகொள்ளும்போது நடக்கும் நிகழ்வுகளை ஒரு மிகச் சிறந்த வாழ்க்கைச் சித்திரமாக, குழந்தைகளின் அழகான உலகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ‘குரங்கு பெடல்’  படத்தின் மூலமாக காட்டியுள்ளார் டைரக்டர் கமலக்கண்ணன்.



சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மதுபானக்கடை’ என்ற படத்தை இயக்கியவர் கமலக்கண்ணன். ‘மதுபானக்கடை’ படத்தில் மார்க்ஸியத்தைச் சொன்னவர். ‘குரங்கு பெடலி’ல் டிவி, சமூக ஊடகங்கள், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள்  என மூழ்கிக் கிடக்கும் இந்த இளம் தலைமுறையினருக்குத் தெரியாத 1980களில் வாழ்ந்த குழந்தைகளின் வாழ்வியல் யதார்த்ததைச் சொல்லி இருக்கிறார். கொங்கு தமிழ், கோடையிலும் வற்றாத பவானி நதி, பரிசல், தோல் பாவை கூத்து என காட்சிக்குக் காட்சி செதுக்கி இருக்கிறார் டைரக்டர். ஒரு சிறு கதாபாத்திரம் கூட நம் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. உதாரணமாக, தோல் பாவை கலைஞர், காளி வெங்கட்டின் மகளாக நடிப்பவர் போன்றவர்களைச் சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் சுமி.பாஸ்கரனும், ஒலிக் கலைஞர் ஆண்டனி பி.ஜெயரூபனும் டைரக்டரின் காட்சிக்கு வடிவம் தந்துள்ளார்கள். நாளுக்குநாள் காளி வெங்கட்டின் நடிப்பு மெருக்கேறிக்கொண்டே வருகிறது. கொங்கு மண்ணின் குசும்பும், ஒரு பாசக்கார தந்தையாகவும் சிறப்பாக நடித்துள்ளார். ஐந்து சிறுவர்களின் நடிப்பை பார்க்கும்போது “பலே! பலே!” என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக மாரியப்பனாக நடித்துள்ள மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன்  நடிக்கவில்லை.சூ ழ்நிலையை உள்வாங்கி வாழ்ந்திருக்கிறார்.



பிரசன்னா பாலசந்தர், ஜென்சன் திவாகர், செல்வா, சாவித்ரி என ‘நக்கலைட்ஸ்’ டீம் இங்கேயும் முத்திரை பதித்து உள்ளது.

‘குரங்கு பெடல்’ படத்தை நடுத்தர வயதினர் பார்த்தால் தங்களது குழந்தை பருவம் நினைவுக்கு  வரலாம். இப்போது உள்ள குழந்தைகள் பார்த்தால் இப்படி ஒரு வாழ்க்கை  முன்பு இருந்ததா  என்று வியப்படைய வைக்கலாம்.

தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் ரத்தம் தெறித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்பை சொல்லும் படமாக வந்துள்ளது ‘குரங்கு பெடல்.’ தமிழில் நல்ல சினிமா வரவில்லையே என்று வருத்தப்படும் நாம், இது போன்ற நல்ல படங்கள் வெளியாகும் போது வரவேற்கவும் செய்ய வேண்டும்.

அரண்மனையின் ஆர்ப்பாட்டங்கள், ரீரிலீஸ் படங்களின் கொண்டாட்டங்கள் மத்தியில் இந்த எளிய, தரம் வாய்ந்த கருத்துமிகு படத்தையும் வரவேற்போம். பாராட்டுவோம்! இப்படி ஒரு நல்ல படம் உருவாக காரணமாக இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சல்யூட்!



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 seconds ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

2 mins ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

5 mins ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

8 mins ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

4 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

4 hours ago