Categories: lifestyles

ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்களா? – எப்படி சாத்தியம்?

கோடைக்காலம் என்றவுடன் மாம்பழ சீசன் வந்துவிடும். மற்ற பழங்களை விட மாம்பழம் அனைவரும் விரும்பக்கூடிய பழவகை!

மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அவை அவற்றின் தனித்துவமான சுவைகளில் வேறுபடுகிறது. இப்படி இருக்கும் சூழலில் 14 வகையான மாம்பழங்கள் ஒரே மரத்தில் காய்க்கிறது என்று சொன்னால் நம்ப முடிகின்றதா?



குஜராத் மாநிலம் அம்ரேலியை சேர்ந்த 70 வயதாகும் மாம்பழ விவசாயி உகாபாய் பாட்டி தனது கடும் முயற்சியால் 14 வகையான மாம்பழங்கள் காய்க்கும் ஒரே மாமரத்தை உருவாக்கியுள்ளார்.

இதனை சாத்தியமாக்கியது குறித்து உகாபாய் பாட்டி கூறுகையில் இதை செயல்படுத்த தாவர ஒட்டுதல் முறையைப் பயன்படுத்தியதாகக் கூறியிருக்கிறார்.



விவசாயத்தில் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக இரு தாவரத் தண்டுப்பகுதிகளை இணைத்து புதிய தாவரமாக வளர்க்கப்படுவதே ஒட்டுதல் எனப்படும்.

தனது வீட்டில் இருக்கும் இந்த மாமரம் ஹோலி முதல் தீபாவளி பண்டிகை வரை அனைத்து சீசன்களிலும் இனிப்பான மாம்பழங்களையும் வழங்கி வருவதாக கூறுகிறார்.

பாட்டியின் மரத்தில் அம்ரபாலி, நீலம், தாஷேரி, பேகம், நிலேசன், நீல் பகுன், சுந்தரி, பனாரசி லாங்டோ, கேசர், டாட்மியோ, குலாபியோ, கனோஜியோ, துத்பீடோ மற்றும் கோடி போன்ற மாம்பழங்கள் உள்ளன.

இந்த மரத்தில் காய்க்கும் பழங்கள் விற்பனைக்கு செல்வதில்லை என்றும் , வரலாற்றில் தான் படித்த பல வகையான மாம்பழங்கள் அழிந்துவிட்டதாக உகபாய் பாட்டி கவலையுடன் கூறுகிறார்.

மேலும் தற்போது இந்த மாம்பழத்தில் புதிய சுவைகளை சேர்க்க முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வேலையை விட்டு நர்சரி தொடங்கியவரின் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி

மாதம் பிறந்தால் சுளையாக 3 லட்சம் ரூபாய் கைக்கு வந்து சேரும், இருந்தாலும் இந்த வேலையை விட்டுவிட்டு பாவ்சாஹேப் பூக்கள்…

1 hour ago

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கொடுத்த காதல் கடிதத்துடன்…

1 hour ago

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

4 hours ago

பாலிடெக்னிக்குகளில் சேர்ந்து டிப்ளமோ படிக்கப் போறீங்களா?…

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக்…

4 hours ago

ரயில் பயணிகளின் லக்கேஜ்: புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்..

ரயிலில் பயணம் செய்யும்போது, யாராவது தங்கள் லக்கேஜுடன் ஓடிவிட்டால், கேட் திறந்திருப்பதால், பல பயணிகள் இரவில் தூங்குவதில்லை. கேட்டை சுற்றியுள்ள…

4 hours ago

சுசித்ராவின் இரண்டாவது கணவர் யார்? பல உண்மைகள்!

சென்னையில் பிறந்து வளர்ந்து, தன்னுடைய விடாமுயற்சியாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் சுசித்ரா. பாடகி என்பதை தாண்டி,…

4 hours ago