Categories: CinemaEntertainment

என்ன நயன்? இப்படி இறங்கிட்டீங்க… சோதனையில் நயன்தாரா…

தமிழ் சினிமாவில் ஹிட் நாயகியாக இருந்த நயன்தாரா கேரியர் பெரிய சறுக்கலை சந்தித்து உள்ளது. இதனால் அவர் தனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாவற்றுக்குமே ஓகே செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கோலிவுட்டில் தனி நாயகியாக நடித்து ஹிட்டடித்தவர் நயன்தாரா. கேரியர் எக்கசக்கமாக உயர்ந்தது. நயன் இருந்தாலே அப்படம் ஹிட்டடிக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்தார். ஆனால் அங்கு தொடங்கியது அவருக்கு வினை.

தொடர்ச்சியாக சிக்கல் தான். நடித்த எல்லா படங்களுமே தோல்வியில் முடிந்தது. கடைசியாக நடித்த அன்னப்பூரணி திரைப்படத்திலும் ராமனின் வசனம் இடம்பெற்று பெரிய பிரச்னையாக உருவானது. சர்ச்சைகளை நிறைய இருந்தும் படம் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. இதனால் தன்னுடைய சினிமா கேரியருடன் பிசினஸும் தொடங்கினார்.



அதே நேரத்தில் இன்ஸ்டா பக்கம் ஒன்றை தொடங்கி அதிலும் கல்லா கட்டினார். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினாலும் சினிமா கேரியரில் அவர் விட்ட இடத்தினை பிடிக்க முடியவில்லை. முன்னணி ஹீரோக்களின் படங்களில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.

பாலிவுட்டில் அவர் முதன்முறையாக ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் மட்டுமே வெற்றி படமாக அமைந்தது. இதனால் தமிழை விடுத்து அம்மணி தற்போது அடுத்த மொழி பக்கம் திரும்பிவிட்டார். ஆனால் இந்தமுறை இந்தியில் இல்லாமல் தெலுங்கில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். யாஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கும் டானிக் திரைப்படத்தில் முக்கிய  கேரக்டரில் நயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதுவும் கரீனா கபூர் தான் அந்த ரோலில் நடிக்க வேண்டியதாக இருந்ததாம். ஆனால் கால்ஷூட் பிரச்னை காரணமாக அவர் வெளியேறிவிட்டாராம். அதனை தொடர்ந்தே, கீது  மோகன்தாஸ் நயனை பார்த்து கதை சொன்னதாகவும் அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது யாஷின் ஜோடியாக இருக்காது என்றும் யாஷ் சகோதரியாக நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

8 mins ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

10 mins ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

12 mins ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

16 mins ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

3 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

4 hours ago