Categories: CinemaEntertainment

விஜய் நடிக்க மறுத்த திரைப்படம்..அது என்ன படம்?

தமிழ் சினிமாவில் எப்போதுமே தனக்கென ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இப்போது விஜயின் அடுத்த கட்ட நகர்வு அரசியலை நோக்கி திரும்பி இருக்கிறது. அதற்காக முதற்கட்டமாக என்னென்ன ஆயத்த பணிகளை செய்ய வேண்டுமோ அதை தன் இயக்க நண்பர்கள் மூலமாக செய்து கொண்டு வருகிறார்.

அரசியலில் தீவிரமாக இறங்கிய பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருக்கிறார். இவருடைய இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சார்ந்த பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.  திரையரங்க உரிமையாளர்களும் விஜய் சினிமாவை விட்டு விலகக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.



அந்த அளவுக்கு தியேட்டர் உரிமையாளர்களை வாழ வைக்கும் தெய்வமாக விஜய் மாறி இருக்கிறார். கோலிவுட்டில் ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் மன்னனாக கலக்கி வருபவர் விஜய். அதனாலயே இவரால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே உரிமையாளர்கள் சினிமாவை விட்டு விலக வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சமீபத்தில் இவருடைய கில்லி திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து அதிலும் பெரும் கோடியை தியேட்டர் உரிமையாளர்கள் லாபமாக பார்த்திருக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கில்லி திரைப்படத்தை இப்போது ரீ ரிலீஸ் செய்தும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. அதற்கு காரணம் கதையையும் தாண்டி விஜய் என்று சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும் பட்சத்தில் அவர் சினிமாவை விட்டு அரசியலுக்கு போகக்கூடாது என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கில்லி திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறி இருக்கிறார். எஸ் எ சந்திரசேகர் இயக்கிய  ‘சுக்ரன்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினத்தின் மகனான ரவி கிருஷ்ணா ஹீரோவாக நடித்திருப்பார்.



அவரை நடிக்க வைக்க எஸ் ஏ சந்திரசேகர் இந்த படத்தில் விஜயும் நடிக்கிறார். அதனால் உங்கள் மகனை நடிக்க வையுங்கள் என்று சொல்லி கேட்டிருக்கிறார். ஏ எம் ரத்தினமும் ரவி கிருஷ்ணாவிடம் ‘ இதில் விஜய் நடிக்கிறார்’ என்று சொல்லி தன் மகனை சம்மதிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் இந்த படத்தில் என் மகன் நடிக்கவில்லை என கூறியிருக்கிறார். இதை கேட்டதும் ஏ எம் ரத்தினத்திற்கு பெரும் ஷாக்.

இருந்தாலும் ஏ எம் ரத்தினம் நேராக விஜய் இடம் ஏன் நடிக்கவில்லை என கேட்க அதற்கு விஜய்  ‘இது உங்கள் மகனின் எதிர்காலம். அவர் ஒரு வளர்ந்து வரும் இளைஞர். இதில் நான் நடித்து அது பாதிக்கக் கூடாது’ என கூறியிருக்கிறார். இருந்தாலும் ஏ எம் ரத்தினம் விடவில்லையாம். அதன் பிறகு விஜய்  ‘சரி நான் நடித்து அதில் உங்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் நான் இதில் நடிக்கிறேன்’ என கூறினாராம். ஏனெனில் சுக்கிரன் திரைப்படத்தின் போதே விஜய் ஒரு டாப் ஹீரோவாக உயர்ந்திருந்தார். இதில் விஜய் நடித்த அது விஜய் படமாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே இந்த படத்தில் நடிக்க மறுத்தாராம் விஜய்.



 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

1 hour ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

1 hour ago

மோகன்லால் உண்மை முகம் இது தான்: சாந்தி வில்லியம்ஸ்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. லாலேட்டன் என அவரை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து…

1 hour ago

வேலையை விட்டு நர்சரி தொடங்கியவரின் ஆண்டு வருமானம் ரூ.2 கோடி

மாதம் பிறந்தால் சுளையாக 3 லட்சம் ரூபாய் கைக்கு வந்து சேரும், இருந்தாலும் இந்த வேலையை விட்டுவிட்டு பாவ்சாஹேப் பூக்கள்…

4 hours ago

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபா கொடுத்த காதல் கடிதத்துடன்…

4 hours ago

நடிகை மனோரமா-7

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரைக்கும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால்,…

6 hours ago