பை விற்பனையில் ரூ.3 கோடி வருமானம் பார்க்கும் மதுரை தம்பதி..!

மதுரையைச் சேர்ந்த தம்பதி கௌரி கோபிநாத், கிருஷ்ணன் சுப்ரமணியன். கௌரி கோபிநாத் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார். சென்னையில் உள்ள ஒரு காப்பரேட் நிறுவனத்தில் கிருஷ்ணன் சுப்ரமணியன் வேலை பார்த்து வந்தார். இருவருக்குமே எப்படா சொந்த ஊரான மதுரைக்கு போவோம் என்றே எப்போதும் தோன்றிக் கொண்டே இருக்குமாம்.



அதேபோல் நகரங்களில் பெருகிவரும் பிளாஸ்டிக் மாசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நினைப்பும் ஒன்றாக இருந்து வந்தது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தது. குறிப்பாக ஒரு முறை பயன்படுத்தும் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள். நாங்களும் அதை பயன்படுத்துகிறோம். இதை எப்படியாவது நிறுத்த வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு இதனால் ஏற்படும் அபாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு ஏதாவது வழியை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான வழிமுறைக்கு மாற வேண்டும். இப்படித்தான் நாங்கள் இருவரும் எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்போம் என்று தம்பதியர் கூறினர். இந்த நிலையில் அவர்கள் எல்லோபேக் என்ற பை தயாரிப்பு நிறுவனத்தை 2014இல் தொடங்கினர்.

தொடக்கத்தில் தங்களது நண்பர்களுக்கு இதுபற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் துணிப்பைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர். உள்ளூர் டெய்லர்களை வைத்து துணிப்பைகளை தயாரித்து வளர்ந்து வரும் தேவையை சமாளித்தனர். 2019இல் தங்களது வேலையைவிட்டுவிட்டு முழுநேரத் தொழிலில் இறங்கினர். தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாகப் பயன்படுத்திவந்த மஞ்சப்பை, மஞ்சள் நிறத்திலான துணிப்பையின் பெயர் அவர்களது நினைவுக்கு வந்தது.



அதையே தங்களது பிராண்டு பெயராக மாற்றினர். இந்தத் துணிப்பைகள் சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு இருந்தது. சணலும் பருத்தியாலும் கலந்து செய்யப்பட்ட இந்த பையை பல்வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தலாம். பேக்கேஜிங் பைகள், கார்மென்ட் வைக்கும் பைகள், தொங்கும் கைப்பைகள் என பல்வேறு விதமான பைகளை அவர்கள் தயாரித்தனர். அவற்றின் விலை ரூ.20 முதல் ரூ.200 விற்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இந்தப் பைகள் தயாரிக்கப்பட்டன.

ஒரு வெப்சைட்டை தொடங்கி அதிலும் பல்வேறு சோசியல் மீடியா தளங்களிலும் இந்தப் பைகளை அவர்கள் மார்க்கெட்டிங் செய்தனர். தங்களது அலுவலகத்திலும் விற்றனர். தினமும் 2000 முதல் 3000 பைகளை அவர்கள் தைத்து விற்றனர். இதன் மூலம் இந்த ஆண்டு ரூ.3 கோடியை லாபமாக சம்பாதித்துள்ளனர். பல்வேறு ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் இந்தப் பைகளை அதிகளவில் ஆர்டர் செய்தன. வியாபாரம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தத் தம்பதியரின் புண்ணியத்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது. மஞ்சப்பைக்கு இப்போது மவுசு அதிகரித்து விட்டது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

3 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

3 hours ago

அழகிய காஷ்மீரை 6 நாள் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கலாம்.. எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி காஷ்மீர் டூர் பேக்கேஜை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த டூர் பேக்கேஜின் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கும். ஐஆர்சிடிசியின்…

3 hours ago

உங்க நட்புக்கு நா பலிகிடாவா? கதறும் சுசித்ரா

சாதுமிரண்டா காடு கொள்ளாது என்று சொல்லுவாங்க, அப்படித்தான் இப்போது பாடகி சுசித்ரா பொங்கி எழுந்து கொண்டிருக்கிறார். பேச வேண்டிய நேரத்தில்…

3 hours ago

சிறுதானியத்தில் ஐஸ்கிரீம் : ஸ்ரீ மில்லட் ஐஸ்கிரீம்ஸ் சாதனை படைத்தது எவ்வாறு?..!

பிரபு வேணுகோபால், சசிதர், அருண் பிரகாஷ், பார்கவ் ஆகிய நான்கு பேரும் நல்ல நண்பர்கள். வெளிநாட்டில் கைநிறைய சம்பளம் தரும்…

6 hours ago

ரோகினி கொடுத்த வார்னிங் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின்…

6 hours ago