Categories: CinemaEntertainment

அஜித் – ஷாலினி திருமண நாள் கொண்டாட்டம்;

அஜித் குமார் – ஷாலினி தம்பதியரின் 24-ம் ஆண்டு திருமண நாளில், அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டிங் செய்து கொண்டாடினர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜீத்குமார் – ஷாலினி தம்பதியரின் 24-ம் ஆண்டு திருமண நாளில், அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்டிங் செய்து கொண்டாடினர். இதனிடையே, அஜித் – ஷாலினி திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் நடிகர் அஜித் குமார் – ஷாலினி ஜோடி தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமான தம்பதியராக திகழ்கின்றனர். அஜித்தும், ஷாலினியும் கடந்த 2000-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அஜித் – ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். ஷாலினி திருமணத்துக்குப் பிறகு, சினிமாவில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அஜித் இப்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். அடுத்து, குட் பேட் அக்லி படத்தில் நடிக்க உள்ளார்.



இந்நிலையில், அஜித்தும் ஷாலினியும் இன்று (24.04.2024) தங்களது 24ஆவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். தமிழ் சினிமா உலகின் வெற்றிகரமான ஜோடியாக அஜித்தும், ஷாலினியும் தங்களுடைய 24-வது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி வருகிறார்கள்.

அஜித் – ஷாலின் தம்பதியருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து மழைப் பொழிந்து வருகிறார்கள். ரசிகர்கள், அஜித்குமார்ஷாலினி திருமணநாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ட்ரெண்டிங் செய்து அஜித் – ஷாலினி திருமண நாளைக் கொண்டாடினர். அதெ நேரத்தில், அஜித் – ஷாலினி இருவரும் தங்கள் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

4 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

4 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

4 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

4 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

8 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

8 hours ago