இன்றைய ராசி பலன் (28.04.24)

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 07.06 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று அதிகாலை 03.21 வரை கேட்டை. பின்னர் மூலம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். பைனான்ஸ் வரவு செலவுகளை சமூகமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சந்திராஷ்டமம் கவனம் தேவை.



ரிஷபம்

எதிர்ப்புகள் தொழிலுக்கு இடையூறாக இருந்தாலும் தக்க உதவியின் மூலம் அதைத் தாண்டி வருவீர்கள். வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் சாதகமான பலனை அடைய மாட்டீர்கள். மூலப் பொருள் கிடைக்காமல் தொழிலில் சற்று முடக்கம் ஏற்படும்.

மிதுனம்

மாமனார் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள். வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்களுக்கு முன்னெடுப்பு செய்வீர்கள். தான தர்மங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறு வியாபாரிகள் லாபம் அடைந்து மனநிறைவு கொள்வீர்கள். வேலையிடங்களில் திறனை வெளிப்படுத்தி பாராட்டுப் பெறுவீர்கள்.

கடகம்

வெளியிடங்களில் சாப்பிடுவதால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். உறவுகளால் உபத்திரவம் அடைவீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை தொடுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். கல்லூரிச் செலவுகள் கை மீறிப் போவதால் கஷ்டப்படுவீர்கள். காதலியின் அன்பை பெறுவதற்காக பரிசு பொருள் வாங்கி கொடுப்பீர்கள்.

சிம்மம்

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வீடு கட்ட வாஸ்துக்குத் தயார் ஆவீர்கள். வங்கி லோன் எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். மனை இடங்கள் வாங்குவீர்கள். தன தான்ய விருத்தி அடைவீர்கள். புதிய வாகனங்களை தவணை முறையில் வாங்குவீர்கள்.



கன்னி

விரும்பிய வேலையில் சேர்வீர்கள். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். விவசாய உற்பத்தியை பெருக்குவீர்கள். ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். கணினித்துறையினர் கணிசமான லாபம் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள். வாழ்க்கைத் துணையினர் மனம் கோணாமல் நடப்பார்கள். வெளியிட செல்வாக்கைஅதிகரிப்பீர்கள்.

துலாம் சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் உதவி பெற்று முக்கிய பிரச்சனையிலிருந்து மீள்வீர்கள். முந்தி வரும் கோபத்தால் சொந்தங்களை பகைப்பீர்கள். தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். சக ஊழியர்களின் தொல்லையால் வேலை இடத்தில் சிக்கலை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வாக்குத் திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறன் முன்னேற்றமாக இருக்கும். எளியோருக்கு உதவி செய்து சமுதாயத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள் .

தனுசு

சொல்வாக்குத் தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள். சிறியோர்களால் அவமானம் அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து எட்டி நில்லுங்கள். வேலையில் கவனத்தைச் சிதற விடாதீர்கள். வியாபாரத்தில் பொறாமைக்கார்கள் இடையூறு செய்வர். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர் பெறுவதில் சிரமப்படுவீர்கள்.



மகரம்

சுப நிகழ்ச்சிக்கான ஆயத்த வேளையில் இறங்குவீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நடத்துவீர்கள். கையில் பணம் தாராளமாகப் புழங்கும். வீடு தேடி உதவிகள் வரும். விருந்து நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்

நில விற்பனை மூலம் அதிக வருமானம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டால் மனம் குளிர்ந்து போவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த வில்லங்கத்தை விலக்குவீர்கள். ஓயாத உழைப்பால் வியாபாரத்தை உயர்த்துவீர்கள். மழலைச் செல்வத்தின் அழுகுரலால் குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம்

தந்தையார் வகையில் மருத்துவச் செலவுகள் செய்வீர்கள். கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகளை கிட்ட கொண்டு வருவீர்கள். நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக நன்மை அடைவீர்கள். பணியாளர்கள் துணிவாகச் செயல்படுவீர்கள். திடீர் தனவரவால் திக்கு முக்காடி போவீர்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ-7

7 வாசலில் பிரம்மாண்டமான நான்கு தூண்களை தாங்கி நின்ற அந்த பெரிய வீட்டின் தோற்றம் ஏதோ ஓர் இந்திப் படத்தில்…

2 hours ago

அன்னையர் தினம் வரலாறு

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அன்னையர் தினம் தோன்றிய வரலாறு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, அன்னையர் தினம்…

2 hours ago

உண்மையை உடைத்த பாக்யா-பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி சோபாவில்…

2 hours ago

இப்படி நடிக்க மோகனால் மட்டுமே முடியும்… கே. பாக்கியராஜ்

80 களில் மிக பிரபலமான முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் கே. பாக்கியராஜ். இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை அமைப்பாளர், வசன…

2 hours ago

ஆசை மகனே! (அன்னையர் தின ஸ்பெஷல் -சிறுகதை)

அன்னையர் தின ஸ்பெஷல்  (சிறுகதை)  மாலதி அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். பள்ளிக்குச் சென்றிருந்த குழந்தைகள் இருவரையும் பாதியிலேயே அழைத்து…

4 hours ago

வெற்றி பயணம் ஏவி.எம்..நிறுவனம்!

பிசினஸ் என்பது தராசு போல. அதில் ஏற்ற இறக்கம் நிச்சயம் இருக்கும். ஆனால், துணிச்சலான முடிவு, சரியான திட்டமிடல்கள் மூலம்…

4 hours ago