Categories: Samayalarai

ருசியான பைனாப்பிள் பச்சடி

பைனாப்பிள் பச்சடி செய்ய தேவையான பொருட்கள் 

அன்னாச்சி பழம் – 1 கப்

தேங்காய் – 1 கப்

தயிர் -1 கப்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1/2 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்

சர்க்கரை – 1 ஸ்பூன்

இஞ்சி – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை விளக்கம் 

அன்னாச்சி பழத்தை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து வேக விட வேண்டும்.

இடையில் ஒரு கப் தேங்காய் 1 பச்சை மிளகாய் கால் ஸ்பூன் கடுகு அரைஸ்பூன் சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பைனாப்பிள் 10 நிமிடம் வரை வெந்த பிறகு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இப்போது ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தேங்காயையும் சேர்த்து கொள்ள வேண்டும். 

அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். 5 நிமிடம் தேங்காய் வெந்த பிறகு கடைசியாக அரை கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலந்து கொள்ள வேண்டும். (சர்க்கரை சேர்க்க பிடிக்காதவர்கள் தவிர்த்து விடலாம்) 



இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் கடுகு உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். கடுகு வெடிக்கும் போது ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சி, நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். 

இந்த தாளிப்பை பைனாப்பிளுடன் சேர்த்தால் ருசியான பைனாப்பிள் பச்சடி ரெடி. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இந்த பச்சடி லேசாக இனிப்பு காரம், புளிப்பு கலந்த சுவையில் இருக்கும். ஒரு முறை செய்து குடுங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும்.

அன்னாச்சி பழத்தின் நன்மைகள்

அன்னாசிப்பழத்தில் அதிகம் உள்ள மாங்கனீஸ், உங்கள் எலும்புகளை கட்டமைக்க உதவுகிறது. ஆரோக்கியமான உடலை பராமரிக்கவும், உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க பைனாப்பிள் உதவும். துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் ஆகியவற்றுடன் இணைந்தால், மாங்கனீசு மிகவும் ஆரோக்கியமானது மற்றும் வலுவான எலும்புகளைப் பாதுகாக்கும்.  அன்னாசிப்பழத்தில் காணப்படும் ப்ரோமைலைன், உணவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஏராளமாக உள்ளன மற்றும் ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவுகின்றன. இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

உங்கள் ஹார்மோன்கள் மற்றும் நரம்புகளை எளிதாக வைத்திருக்கும் இயற்கையான மன அழுத்த நிவாரணியான செரோடோனின் அன்னாசிப்பழத்தில் உள்ளது. இது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

வைட்டமின் சி நிறைந்த அன்னாசி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உங்கள் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago