Categories: lifestylesNews

பெங்களூரில் 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு Work From Home.. ஏன் ?….!!

பெங்களூரு நகரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, மக்களின் அன்றாட வாழ்வை புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு தற்காலிக தீர்வாக, IT துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் Work From Home வசதியை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.



ஏற்கனவே பல நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம், ரிமோட் வொர்க் சலுகையை அளித்துள்ள வேளையில் தற்போது கட்டாய வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கர்நாடக அரசின் தகவல்படி, பெங்களூரு தினசரி 2,600 மில்லியன் லிட்டர் (MLD) தண்ணீர் தேவை, இதில் சுமார் 500 மில்லியன் லிட்டர் குறைபாடு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக WFH முறையை அமல்படுத்துவது மூலம் பெங்களூரில் மக்கள் தொகையைக் குறைத்து, தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும் என்று இணையவாசிகள் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில், நீதிபதி கே. ஸ்ரீதர் ராவ் உள்ளிட்ட பல சட்ட நிபுணர்களும், நீர் மேலாண்மை நிபுணர்களும், பெங்களூரு தண்ணீர் பிரச்சனை தீரும் வரை, வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை ஊக்குவிக்குமாறு கர்நாடக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே. ஸ்ரீதர் ராவ், பெங்களூருவில் உள்ள சுமார் 15 லட்சம் ஐடி ஊழியர்களுக்கு குறுகிய கால தீர்வாக வீட்டிலிருந்து பணிபுரியும் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.



ஒரு வருட காலத்திற்கு வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை அனுமதிப்பதன் மூலம், சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பலாம். இதன் மூலம் பெங்களூருவின் வளங்கள் மீதான அழுத்தம் குறையும் என்றும் நீதிபதி ஸ்ரீதர் ராவ் கருத்து தெரிவித்தார். 1980 களில் பெங்களூரு மக்கள் தொகை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை இருந்ததாகவும், தற்போது அது 1.5 கோடியை தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கர்நாடக மாநிலம் 2003-04 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வறட்சியை எதிர்கொண்ட போதிலும், அப்போதைய மக்கள் தொகை குறைவாக இருந்ததால், தண்ணீர் தட்டுப்பாடு பெரிதாக உணரப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் பெங்களூரில் ஏரி மீட்டெடுப்பு, மழை நீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஓ…வசந்தராஜா…!-15 (நிறைவு)

15 பட்டுச்சேலையை அடுக்கடுக்காய் அமைத்து தோள் பக்க ஜாக்கெட்டோடு சேர்த்து பின் செய்த போது பிளாஸ்டர் ஒட்டியிருந்த காயம் சுரீரென…

9 hours ago

பக்கவிளைவுகளை ஒப்பு கொண்ட AstraZeneca…கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..?

பெருந்தொற்றான கொரோனா மிக தீவிரமான நிலையில் இருந்த போது பிரிட்டன் நாட்டை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி இணைந்து…

9 hours ago

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கட்லெட்

கட்லெட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் அனைவருக்கும் பிடித்த பன்னீர் வைத்து தயாரிக்கப்படும்…

9 hours ago

ரசவாதி எப்படி இருக்கு.?

சித்த மருத்துவரான நாயகன் அர்ஜுன் தாஸ், தன் வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து அமைதியான சூழ்நிலையில் வாழ வேண்டும்…

9 hours ago

உடலென நான் உயிரென நீ-6

6 " சாப்பிடலாம் வா " இடையில் கார் நின்றிருக்க அவளை அழைத்தான் கணநாதன் . " நான் ...எ...எனக்கு பசியில்லை " ' அதெப்படி இல்லாமலிருக்கும் .இறங்கு " " இ...இல்லை வேண்டாம் ..." தடுமாறினாள் .நல்ல வெளிச்சம் வந்து விட்டது .இப்போது இது போல் கோரமான முகத்துடன் அவள் எப்படி வெளியே வருவாள் ? அவள் முகத்தை சுற்றி வட்டம் போல் காற்றில் வரைந்து காட்டினான். "இதையெல்லாம் செய்து கொள்ள தீர்மானிக்கும் முன் கவலைப்பட்டிருக்க வேண்டும் .இப்போது வெளியே வர கூசி என்ன பயன் ? இறங்கு ..." அவனது அதட்டலுக்கு கால்கள் நடுங்க கீழே இறங்கிவிட்டாள் .…

13 hours ago

இந்த’ மருந்துகளை டீ, காபியுடன் சாப்பிடாதீங்க..!

எந்தெந்த மருந்துகளை டீ மற்றும் காபியுடன் சேர்த்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை பற்றி இன்கு தெரிந்து கொள்ளலாம். இப்போதெல்லாம்…

13 hours ago