Categories: CinemaEntertainment

காதல் கதையை தடுத்த எழுத்தாளர்….மருதநாயகம் உருவான கதை!

கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அந்த வகையில் கமல் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் குணா.



இந்த படம் இன்று ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டாலும் ரிலீஸான சமயத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான Tie me up Tie me down என்ற படத்தின் தழுவலில் உருவானது. இந்த படம் தோல்வி அடைந்தாலும் அடுத்தும் இதே போல ஒரு காதல் கதையையே எடுக்க ஆசைப்பட்டுள்ளார் கமல்ஹாசன். அந்த படத்தின் பெயர் அமராவதி. அமராவதியை ஒரு வரலாற்று காதல் கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் கதையை எழுதி ஒரு ஆலோசனைக்காக எழுத்தாளர் சுஜாதாவுக்கு அனுப்பியுள்ளார். அப்போது அவர் இப்போதுதான் ஒரு காதல் படத்தில் நடித்தீர்கள். அடுத்தும் ஏன் இன்னொரு காதல் படம் எனக் கேட்டுள்ளார். வரலாற்று நாயகன் ஒருவனை வைத்து ஆக்‌ஷன் படம் ஒன்றை பண்ணுங்கள் எனக் கூறியுள்ளார்.



மேலும் கான்சாகிபு சண்டை என்ற புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அந்த புத்தகம்தான் மருதநாயகம் படத்தின் விதை கமல் மனதில் விழ காரணமாக அமைந்துள்ளது. அதன் பிறகு பல புத்தகங்களை படித்த கமல்ஹாசன் மருதநாயகம் பற்றி பல தகவல்களை திரட்டி மருதநாயகம் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த திரைக்கதையில் சுஜாதாவும் ஆலோசனையராக பணியாற்றியுள்ளார்.

ஆனால் திரைக்கதை எழுதி முடித்த பின்னர் இதை வழக்கமான பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்பதால் சில ஆண்டுகள் காத்திருந்து அதன் பின்னர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து தொடங்கினார். ஆனால் பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

7 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

7 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

7 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

7 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

11 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

11 hours ago