சுவையான கீரை வடை

என்னதான் வீட்டில் வடை சுட்டு கொடுத்தாலும், டீக்கடை கீரை வடை போல சுவை இருக்காது. மொறுமொறுப்பாக வராது. கடையில் காசு கொடுத்து வாங்கி சாப்பிட்டால் தான்திருப்தி   இருக்கும். டீக்கடையில் கிடைக்கும் அதே மொறு மொறு கீரை வடையை நம்முடைய வீட்டில் எப்படி செய்வது என்பதை பற்றிய சூப்பரான ரெசிபி இந்த பதிவில் உங்களுக்காக. பின் சொல்லக்கூடிய குறிப்புகளை பின்பற்றி வடை செய்தால் கடையில் கிடைக்கும் மொறுமொறுப்பான வடை நம்ம வீட்லயும் கிடைக்கும்.



தேவையான பொருட்கள்

உளுந்தம் பருப்பு – 2 கப்

பசலை கீரை – 1/2 கொத்து

சீரகம் – 1/2 தேக்கரண்டி

மிளகு – 12

அசாஃபோடிடா அல்லது பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – 1/2 அங்குலம்

கறிவேப்பிலை – 2

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய்- தேவைக்கு ஏற்ப 



செய்முறை விளக்கம்:

  • முதலில் 2 கப் உளுந்தம் பருப்பு எடுத்து அவற்றை அவற்றை 1 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். அவை நன்கு ஊறி வந்த பிறகு அவற்றை ஒரு கிரைண்டரில் இட்டு சொட்டு தண்ணீர் சேர்க்காமல் நொறுநொறுப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

  • பிறகு ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அவற்றில் வடை சுடுவதற்கான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இதற்கிடையில், நம்மிடம் உள்ள கீரையை நன்கு அலசி ஆய்ந்து, பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒருவேளை அவற்றில் தண்ணீர் இருந்தால் பேப்பர் டவலில் இட்டு உறிஞ்ச விடவும்.

  • இப்போது காரத்திற்கேற்ப பச்சை மிளகாய், தேவையான அளவு கருவேப்பிலை, இஞ்சி என அனைத்தையும் எடுத்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை முன்பு தயாரித்து வைத்துள்ள வடை மாவில் தூவ வேண்டும். பிறகு பெருங்காயம், மிளகு, சீரகம், பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள கீரை, மற்றும் சுவைக்கேற்ப உப்பு முதலியவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.

  • பின்னர் ஒரு இலையை எடுத்து அதை தண்ணீர் இட்டு கழுவி அதில் வட்டமாக வடையை தட்டி முன்னர் கொதிக்கவைத்துள்ள எண்ணெய்யில் ஒன்றன் பின் ஒன்றாக இடவும். அல்லது உங்கள் கையை தண்ணீரால் கழுவிய பிறகு அதில் கூட வட்டமாக வடையை தட்டி எண்ணெயில் இட்டு எடுக்கலாம். கீரை வடை நன்கு மொறுமொறுப்பாக வெந்த பிறகு தேங்காய் சட்டினிகளுடன் சேர்த்து பரிமாறலாம்.



What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

1 hour ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

1 hour ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

1 hour ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago