Categories: Samayalarai

இஞ்சி மரப்பா… வீட்டிலேயே செய்யலாம்..!

குளிர்காலத்தில் இயல்பாக ஏற்படக் கூடிய சளி, இருமல், கரகரப்பான தொண்டை போன்ற உபாதைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது அவசியம். இதற்கு பெரும்பாலும் நம் மக்கள் வீட்டுமுறை தீர்வுகளை பெறுவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர்.

அந்த வகையில் நம் பாரம்பரிய மருத்துவத்திலும் இடம்பெற்ற இஞ்சி மிட்டாய் நமக்கு நல்ல பலனை தரும். குறிப்பாக சளி, இருமல் பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். நம் உடல் வெப்பத்தை அதிகரிக்கவும் இதை சாப்பிடலாம்.



இஞ்சி, வெல்லம், நெய், வறுத்த எள், மஞ்சள், கருமிளகு போன்றவற்றை சேர்த்து இஞ்சி மிட்டாயை நாமே தயார் செய்துவிட முடியும். கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்ற இஞ்சி மிட்டாய்களைக் காட்டிலும் நாமே தயார் செய்து சாப்பிடுகின்ற இஞ்சி மிட்டாய் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

இஞ்சி – 100 கிராம்
வெல்லம் – 200 கிராம்
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – அரை டீ ஸ்பூன் அளவு
கருமிளகு – 6, 7 எண்ணிக்கையில் நுணுக்கியது
வறுத்த எள் – ஒரு கைப்பிடி



செய்முறை விளக்கம் 

  • இஞ்சியை நேரடியாக தீயில் வைத்து வாட்டவும். கரி பிடித்து விடாமல் அவ்வபோது திருப்பி விடவும்.

  • இஞ்சி தோல் நன்றாக நிறம் மாறும் வரை வாட்டிக் கொள்ளவும். வாட்டிய இஞ்சிய ஒரு கப் தண்ணீரில் போட்டு குளிர்விக்கவும். பின்னர் கத்தியை கொண்டு இஞ்சி தோலை உறிக்கவும். இஞ்சியை துண்டு, துண்டாக நறுக்கி, ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

  • ஒரு கடாய் எடுத்து அதில் நெய் விட்டு சூடேற்றவும். இதில் 200 கிராம் வெல்லம் சேர்த்து, மிதமான தீயில் உருக்கிக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். நுணுக்கிய மிளகுத் தூள் சேர்க்கவும். இறுதியாக இஞ்சியை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  • இந்தக் கலவை கெட்டியாக வரும் வரை வதக்கவும். இந்தக் கலவை ஆறிய பிறகு, எடுத்து உருட்ட வருகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். கைகளில் நெய் தடவிக் கொள்ளுங்கள். அதேபோல பிளேட்டிலும் நெய் தடவி வைக்கவும். உருட்டுகின்ற உருண்டையின் மேல் பகுதியில் வறுத்த எள் சேர்த்து உருட்டி, நெய்யுடன் வைக்கவும்.



எப்படி சாப்பிடுவது..?

இஞ்சி மிட்டாயை கடித்துச் சாப்பிடுவதைக் காட்டிலும், வாயில் கரைய வைத்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். தொண்டை கரகரப்பு பிரச்சனை உடனடியாக தீரும். அதேபோல அழற்சிக்கு எதிரான தன்மையும், ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகளும் கொண்டிருப்பதால் சீதோஷ்ண காய்ச்சலை தடுக்கலாம்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

1 min ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

5 mins ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

8 mins ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

3 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

3 hours ago

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

5 hours ago