Categories: Samayalarai

பழைய சாதத்தைப் பயன்படுத்தி அக்கி ரொட்டி செய்யலாம் வாங்க!

உங்கள் வீட்டில் என்றாவது ஒரு நாள் சாதம் மிந்து போனால் இனி அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அதைப் பயன்படுத்தி எளிதாக கர்நாடகாவில் பிரபலமான அக்கி ரொட்டி செய்யலாம். இந்த அக்கி ரொட்டி தேங்காய் சட்னியுடன் சாப்பிடுவதற்கு சூப்பராக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்: 

பழைய சாதம் – 1 கப்

அரிசி மாவு – 1 கப்

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1



இஞ்சி- ½ ஸ்பூன் துருவியது

தேங்காய் – ¼ கப் துருவியது

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

  • கர்நாடகா அக்கிரொட்டி செய்ய முதலில் பழைய சாதத்தை நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

  • பிறகு அதில் பச்சை மிளகாய், வெங்காயம், அரிசி மாவு, சீரகம், தேங்காய், தேவையான அளவு உப்பு, இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வெந்நீர் ஊற்றி மென்மையாக பிசைய வேண்டும்.



  • அடுத்ததாக பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து, வாழை இலையில் வைத்து கொஞ்சமாக எண்ணெய் தடவி ரொட்டி போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

  • பின் ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து அது சூடானதும் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து ரொட்டியை மிதமான தீயில் வைக்க வேண்டும். பிறகு இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால், சுவையான அக்கிரொட்டி தயார். இது எளிதாக செய்யும் ஒரு காலை உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.

  • இனி உங்கள் வீட்டில் மீந்து போன பழைய சாதத்தை வீணடிக்காமல் இப்படி சுவையான ரொட்டி செய்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.

வீட்டு குறிப்பு

  • தொண்டை கட்டிக்கொண்டால்… கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் சரியாகிவிடும்.

  • அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.


What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

1 hour ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

1 hour ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

1 hour ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago