இந்த திசையில் கறிவேப்பிலை செடியை வெச்சா.. வீட்டில் செல்வம் இருமடங்கு அதிகரிக்கும்

ஒவ்வொருவருமே தங்கள் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள். வீட்டின் அழகு என்பது வீட்டிற்கு உள்ளே மட்டுமின்றி, வெளியேயும் பொருந்தும். வீட்டின் வெளிப்புறத்தை அழகாக வைத்துக் கொள்ள பலர் செடிகளை வாங்கி வைப்பார்கள். அப்படி செடிகளை வைப்பதாக இருந்தால், ஒவ்வொரு செடியையும் வாஸ்து சாஸ்திரத்தின் படி சரியான திசையில் வைக்க வேண்டும்.

ஏனெனில் தவறான திசையில் செடிகளை வைத்து வளர்த்து வந்தால், அது வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தி, வீட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வருவதோடு, வீட்டின் மகிழ்ச்சியையே அழிக்கும். என்ன தான் செடிகள் வீட்டிற்கு வெளியே இருந்தாலும், அவை ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.



வீட்டில் செடிகளை வளர்க்க விரும்பும் பலர், பெரும்பாலும் வீட்டிற்கு மற்றும் சமையலுக்கு பயனுள்ளதாக இருக்குமாறான செடிகளைத் தான் வளர்ப்பார்கள். அதில் மிகவும் முக்கியமான செடி தான் கறிவேப்பிலை. தினசரி சமையலில் கட்டாயம் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. எளிதில் வளரக்கூடிய கறிவேப்பிலையை வீட்டில் வளர்க்க விரும்பினால், அதை வாஸ்து விதிகளைப் பின்பற்றி வைக்க வேண்டும். இப்போது வாஸ்துப்படி கறிவேப்பிலை செடியை எங்கு வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

எந்த திசையில் கறிவேப்பிலை செடியை வைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கறிவேப்பிலை செடியை வைக்க சிறந்த திசையாக கருதப்படுவது சந்திரனுக்கு உரிய திசையான மேற்கு திசை தான். இந்த மேற்கு திசையில் கறிவேப்பிலை செடியை வளர்த்து வந்தால், அது அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, வீடு மகிழ்ச்சியாக இருக்கும்.



எதிர்மறை ஆற்றலை நீக்க…

வீட்டின் தோட்டத்தில் கறிவேப்பிலையை செடியை ஒருவர் வைத்து வளர்த்து வந்தால், அது அந்த வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவதோடு, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். அதோடு வீட்டில் செல்வமும் பெருகும்.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலை ஜோதிடத்தில் மட்டுமின்றி, ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கறிவேப்பிலை புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்களின் அறிகுறிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கிறது. அதுவும் இதில் உள்ள மருத்துவ பண்புகள், வயிற்று புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது இதய நோயைத் தடுக்கவும் உதவுகிறது. கண்களுக்கும் நல்லதாக கருதப்படுகிறது. முக்கியமாக தலைமுடிக்கு மிகவும் நல்லது.

செல்வம் பெருக எந்த திசையில் வைக்க வேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கறிவேப்பிலையை செடியை மேற்கு திசையை விட, தென்கிழக்கு மூலையில் வைப்பது இன்னமும் நல்லதாக கருதப்படுகிறது. இந்த திசையில் கறிவேப்பிலை செடியை வைத்தால், அது வீட்டிற்கு செல்வ செழிப்பைக் கொண்டு வரும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக விரும்பினால், கறிவேப்பிலை செடியை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்த்து வாருங்கள்.



What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

உடலென நான் உயிரென நீ -16

16 " எப்படி ...? " மதுரவல்லி அளவு கணநாதனிடம் அதிர்ச்சி இல்லை . " டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஏதோ இந்திப்படம். அதில்...." மேலே பேச முடியாமல் மதுரவல்லி திணற ... " ஓ.கே ...ஓ.கே பேபி .ரிலாக்ஸ் ..." அவள் தோள் வருடி ஆறுதலாக அணைத்துக் கொண்டான். " என்ன சொன்னார்கள் ?…

4 hours ago

வெறும் தண்ணீரில் பூண்டு வளர்க்கலாமா?

பூண்டு செடியை இவ்வளவு சுலபமாக வளர்க்க முடியுமா? என்று நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பூண்டை சுலபமாக உற்பத்தி செய்து விட…

4 hours ago

பெண்களே நீங்க சேலையில ஒல்லியா ஸ்டக்சரா தெரியணுமா? அப்போ இந்த டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு, என்று ஒரு சினிமா பாடலே இருக்கிறது. புடவை கட்டினால் பெண்கள் வழக்கத்தை விட…

4 hours ago

குக் வித் கோமாளியை முதல் எபிசோடில் ஓரங்கட்டிய டாப் குக் டூப் குப்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் புதிதாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.…

4 hours ago

தின்பண்ட வியாபாரம்.. வெற்றி கதை?

பல்வேறு தொழில் மேற்கொண்டு அதில் சரிவை கண்டவர்களுக்கு சில வெற்றிக் கதைகளை கேட்கும்போது ஒரு உத்வேகம் கிடைக்கும். அப்படி ஒரு…

6 hours ago

மீனாவால் முகம் மாறிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா சேர்ந்து…

6 hours ago