ரசனைகள் (சிறுகதை)

“அத்தை …. நான் இன்று ஆபீஸ்ல இருந்து வரும்போது அப்படியே அம்மா அப்பாவை
பார்த்துவிட்டு வருகிறேன் ”என்று காலையில் ஆபீஸ் கிளம்பும்போதே சொல்லி
கொண்டு கிளம்பினாள் லதா .

உள்ளூரிலேயே பிறந்த வீடும் இருப்பதால் மாதம் ஒரு முறை அங்கு சென்று வருவது
அவளது வழக்கம் தான்.  அன்றும் அது போலவே சென்ற போது, “ வா.. வா என்று
வரவேற்ற அம்மா இந்தா உனக்கு பிடிக்குமே என்று செய்தேன். எடுத்துக்கோ.. சாப்பிடு என்றபடியே ஒரு தட்டில் இரண்டு ரவா லட்டுகளையும் கொஞ்சம் மிக்ஸ்ஸரும்
கொண்டு வந்து கொடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

“ஏம்மா …. சிரமப்படுகிறாய். காஃபி மட்டும் போதுமே” என்றாள் லதா.

“இதில் என்ன சிரமம். உனக்கு பிடிக்கும். ரசித்து சாப்பிடுவாய். பிடித்ததை செய்து
கொடுத்தால் அது ஒரு சந்தோஷம்தான்” என்று சிரித்தாள் அம்மா
உண்மைதான். லதா சாப்பிடும் எதையும் ரசித்து, ருசித்துதான் சாப்பிடுவாள். சாப்பாட்டு
ராமி என்று அர்த்தம் இல்லை. ஆனால் சாப்பிடுவதை ஒரு கடமை போல, ஒரு வேலை
போல, கடனே என்று செய்ய கூடாது என்பாள். அதே போல டிவி பார்த்துக்கொண்டோ,
இடது கையில் கதை புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டோ சாப்பிடுவதும் தவறு
என்பாள். அது சாப்பிடும் பொருளை அலட்சியப்படுத்துவது போல, நமக்காக உபசாரம்
செய்பவரை அவமதிப்பது போல என்பது அவள் கருத்து.

“கம கம”வென நெய் ,ஏலக்காய் வாசனையுடன், முந்திரி பருப்புகள் நெருட, ஜிலீரென நாவில் கரைந்த ரவா லட்டுக்களை ருசித்த லதா சாப்பிட்டு முடித்துவிட்டு “ரொம்ப
நன்னா இருக்கும்மா” என்று பாராட்டி விட்டு, கொஞ்ச நேரம் அம்மா, அப்பாவுடன்
பேசிக்கொண்டு இருந்த பின் வீட்டுக்கு கிளம்பினாள்.



குங்குமம் கொடுத்த அம்மா கையோடு ஒரு எவர்சில்வர் சம்புடத்தையும் கொடுத்தாள்.
“இந்தா இதையும் எடுத்துக்கோ. உன் மாமியாரிடம் கொடு. போன முறை கொடுத்தது
நன்றாக இருந்தது. உன் நாத்தனாருக்கும் கொடுத்து அனுப்பியதாக சொன்னாயே.
அதனால் செய்தவுடனே கொஞ்சம் எடுத்து வைத்து விட்டேன்” என்ற படியே சம்புடம்
நிறைய இருந்த ரவா லாடுகளை காண்பித்தாள்.

லதா மறுக்க முடியாமல் வாங்கி கொண்டு கிளம்பினாள். அம்மா போன முறை
என்றதும் அன்றைய நினைவு நெஞ்சில் நிழலாடியது.

“உன் அம்மா கொடுத்த லாடுகளுக்கு சர்க்கரையும், நெய்யும் குறைச்சலாக இருந்தது.
நான் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு சர்க்கரையும், நெய்யும் சேர்த்து திரும்ப
பிடித்தேன் ” என்று விமர்சனம் செய்த மாமியார் நாத்தனார் வந்தபோது அவளுக்கு
கொடுத்து அனுப்பியது நினைவு வந்தது.

வீடு வந்தவுடன் இந்தாங்கோ அத்தை . அம்மா கொடுத்தனுப்பினாள்  என்ற படியே
மாமியாரிடம் சம்புடத்தை கொடுத்தாள். திறந்து பார்த்த மாமியார் என்ன ரவா லாடுவா
? என்ன உங்கம்மா எப்பவும் இதே பண்ணுகிறாள் ? இது உனக்கு பிடிக்கும் என்பதாலா
இல்ல. உங்கம்மாவுக்கு இது ஒன்றுதான் பண்ண தெரியுமா” என்றாள் கிண்டலாக .
அம்மா ஆசை ஆசையாக செய்து கொடுப்பதென்ன ; அதற்கு இவர்கள் கிண்டலென்ன.
பொறுத்தது போதும்; பொங்கி எழு என்ற உத்வேகம்தான் லதாவுக்கு .

“இது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். எங்கம்மா வேற பட்சணமும்
செய்வாள் ஆனால் நீங்க உடைத்து, உதிர்த்து, உங்க இஷ்டத்துக்கு, திரும்ப ரீ-மாடல்
பண்ண இதுதான் வசதி இல்லையா ? வேற எந்த பட்சணமும் அந்த மாதிரி பண்ண
முடியாதே” “வெடுக் “ என்ற பதில் லதாவிடமிருந்து வந்தது.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்த மாமனார் கையில் வைத்து கொண்டு
என்னம்மா அரட்டை ; ஈ மொய்க்க போகிறது என்றார்.

“இல்ல மாமா இங்கே “ஈயே” இல்லை ” என்றாள் லதா கிண்டலுடன், வெகு திருப்தியுடன்
மாமியாரின் முகத்தை பார்த்த படி…….

மாமியாருக்கு அவள் தன்னைத்தான் சொல்கிறாள் என்று புரிந்தது. மாமனார் புரிந்தும்
புரியாமலும் விழித்துக்கொண்டிருந்தார்.

*******



What’s your Reaction?
+1
18
+1
17
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

10 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

10 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

10 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

10 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

14 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

14 hours ago