சின்ன வயசுல வெள்ளை முடியா, சட்டுனு இந்த வைத்தியம் ட்ரை பண்ணுங்க,

25 வயதுக்குள் நரைமுடி என்பது மோசமான ஒன்று. இதை தடுக்க என்ன செய்யலாம்?

தோல் சுருக்கமும், முடி நரைத்தலும் வயதான அறிகுறிகளில் ஒன்று. முதுமையின் நேரடி அறிகுறியாக கூட இதை எடுத்துகொள்ளலாம். ஆனால் முன்கூட்டிய முடி நரைப்பது உங்களை தொல்லைக்கு ஆளாக்கலாம். மன ரீதியாகவும் பாதிக்க செய்யலாம். தோற்றத்தை குறைத்து காட்டும் இந்நிலையில் நம்பிக்கையை குறைக்கலாம்.

அதிலும் 25 வயதுக்கு முன்கூட்டியே நரைத்தல் என்பது உடல் ஆரோக்கிய குறைபாடாகவும் இருக்கலாம்.

கடுமையான இரும்புச்சத்து குறைபாடு, போதுமான புரதம், தாமிரம் மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்கள் குறைபாடு,. ஆரோக்கியமற்ற உணவு போன்ற அனைத்துமே முன்கூட்டிய நரைமுடிக்கு காரணமாகிறது. இதற்கு என்ன மாதிரியான வீட்டு வைத்தியம் கை கொடுக்கும்.. வாங்க  தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள் 

பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் (நீர்த்தது)

தேங்காயெண்ணெய் – கால் கப்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி



தயாரிக்கும் முறை  

  • பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ கொண்டுள்ளது. இது முன் கூட்டியே நரையை தடுக்கும். மற்றும் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்க செய்யும். கூடுதலாக எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்வை.

  • தேங்காய் எண்ணைய்,  பாதாம் எண்ணைய்  இரண்டையும் இரும்பு வாணலியில் காய வைத்து அதில் கறிவேப்பிலை சேர்த்து காயவிடவும். கறிவேப்பிலை நன்றாக காயட்டும். பிறகு இந்த கலவையை குளிரவைக்கவும்.

  • எலுமிச்சை சாறு கலந்து வைக்கவும்.

  • கூந்தல் அழுக்கு நீங்க சுத்தம் செய்து அலசிய பிறகு இதையும் உச்சந்தலையில் நன்றாக தேய்க்கவும்.

  • கூந்தலை சிக்கில்லாமல் சீவி இந்த எண்ணெயை கூந்தலில் தடவி கொள்ளவும். பிறகு இரவு முழுவதும் அப்படியே வைத்திருந்து மறுநாள் காலை மென்மையான ஷாம்பு கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும்.

  • தலைக்குளியலின் போது அல்லது வாரம் ஒரு முறை இதை செய்யலாம்.

  • பாதாம் எண்ணெய் வைட்டமின் ஈ கொண்டுள்ளது. இது முன் கூட்டியே நரையை தடுக்கும். மற்றும் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்க செய்யும். கூடுதலாக எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்வை. இது முடி வளர்ச்சியை ஊகுகுவிக்கிறது.



What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நடிகை மனோரமா-8

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

வேர்க்குரு எதனால் வருகிறது… வியர்க்குரு போவதற்கு என்ன செய்வது.?

கோடைக்காலத்தில் வெயிலினால் நம்முடைய ஆரோக்கியத்திலும், தோலிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருக்கள், அரிப்பு போலவே வேர்க்குருவும் இயல்பான ஒன்றாக இருக்கிறது.…

2 hours ago

கோடை காலத்தில் நம்ம ஊருக்கு ஏற்றதா ‘ஏர் கூலர்’?

வெயிலைச் சமாளிக்க நாம் பல போராட்டங்களை இந்தக் கோடைக் காலத்தில் மேற்கொள்வோம். அவற்றுள் ஒன்றுதான் ஏர் கூலர் வாங்குவது. பொதுவாக…

2 hours ago

இந்தியன் படத்தில் நம்பவே முடியாத 5 ஆச்சரியங்கள்…

1996ல் உலகநாயகன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான போது இந்தியன் பட்டையைக் கிளப்பியது. அந்தக் காலத்தில் தமிழில் இந்தியன்…

2 hours ago

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

5 hours ago