புராஜெக்ட் கைவசம் இருந்து, அதன் க்ளையன்ட் நிறுவனத்துக்கும் நிதிச்சுமை ஏற்படாமல் இருந்தால் அந்த ஊழியர்களுக்குப் பிரச்னையில்லை.இல்லாவிட்டால் பெஞ்ச் பீரியடுக்கு மாற்றப்படும் ஊழியர்களை கம்பெனியின் வேறு புராஜெக்ட்ல மாத்துவாங்க. நிறுவனத்துல வேறு புராஜெக்ட் இல்லையென்றால் ஊழியர்களே புது புராஜெக்ட் தேட வேண்டும் . அதுவரை நிறுவனமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும். அதன்படி புது புராஜெக்ட் பிடிச்சுட்டா, அதுக்கான பயிற்சி எடுத்துக்கணும். பிறகு, தேவைப்பட்டால் அந்த புராஜெக்ட்ல நிறுவன ஊழியர்களையும் சேர்த்துக்கலாம். பிறகு, நிறுவன ஊழியராகவே அந்த புராஜெக்ட்ல வேலை செய்யலாம். அந்த புராஜெக்ட் முடிந்ததும், நிலைமை சரியாகிட்டா, நிறுவனம் கொடுக்கும் புராஜெக்ட்லயே வேலையைத் தொடரலாம். ஒருவேளை புராஜெக்ட் பிடிக்க முடியாத சூழல் வந்தால்? ஆட்கள் தேவைப்படுற நிறுவனத்தின் வேறு கிளையில் (பிராஞ்ச்) இடமாற்றம் செய்யவும் வாய்ப்பிருக்கு. அல்லது வேலையிலிருந்து நீக்கலாம். எது நடந்தாலும், ஏத்துக்க ஊழியர்கள் தயாராக இருக்கணும்.
“எங்க நிறுவனத்துல பெரும்பாலான ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்துடன், அடிப்படை சம்பளத்துல (Basic Pay) சராசரியாக 25 சதவிகிதம் சேர்த்துக் கொடுத்திருக்காங்க. எனக்கும் போன மாசத்துக்கு கூடுதலான சம்பளம் கிடைச்சுது. உயர் பொறுப்பில் உள்ளவங்களுக்கு கொஞ்சம் சம்பளம் குறைச்சுக் கொடுத்திருக்கிறதா பேசிக்கிறாங்க. தற்போதைய மே மாதத்துக்கு என்ன நிலவரம்னு தெரியலை. ஆனாலும், இனி சிக்கனமா இருந்தால்தான் வருங்காலத்துல ஏற்படும் இடர்பாடுகளைச் சமாளிக்க முடியும். எனக்கு ரெண்டு குழந்தைகள். குடும்பம் பெரிசாகிடுச்சு. அதனால கணவருடன் நானும் வேலைக்குப் போனாதான் நிதிப் பிரச்னைகளை சமாளிக்க முடியும். அதனால சிரமப்பட்டாவது புது புராஜெக்ட் பிடிச்சாகணும். அதுக்குதான் தினமும் பல நிறுவனங்கள்கிட்ட பேசிட்டிருக்கேன்” என்கிறார் ஐ டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அர்ச்சனா
சென்னையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுடன் பல கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒருவர், தன் பெயரை குறிப்பிட விரும்பாமல், தங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசினார். “ஊழியர்களின் ஊதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கைவசம் புராஜெக்ட் இருந்தாலும், புது புராஜெக்ட் வருவது குறைந்திருப்பது உண்மைதான். இதனால் வருங்காலம் சற்றே சிக்கலாக இருக்கக்கூடும். தவிர, வேலைப்பளு கூடியிருப்பதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்.