ஹாய் ப்ரெண்ட்ஸ் ,

எனதல்லாத மற்றொருவரது கதை நமது தளத்தில் .இவர் நம் தள வாசகர்களுக்கு சிறுகதை மூலம் முன்பே அறிமுகமானவர்தான் . இப்போது ஒரு பரபரப்பான குறுநாவல் ஓன்றுடன் வந்துள்ளார் .” தித்திக்கும் தோட்டா ” பெயரே திக் திக்கையும் , தித்திப்பையும் ஒருங்கே தருகிறதுதானே ? கதையும் அப்படியே ராணுவமும் , தேசபற்றும் , இழைந்தோடும் காதலுமாக மிக அருமையான கோர்வையாக்கப்பட்டுள்ளது .அருமையான கதைக்கு நண்பருக்கு வாழ்த்துக்கள் .உங்கள் ஆதரவை தவறாமல் அவருக்கு கொடுங்கள் தோழமைகளே ….நாளை முதல் நாவல் நம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் .இனி கதையாசிரியருடன் சில வார்த்தைகள் ….

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.

நான் தமிழ்செல்வி .பிரதிலிபி போன்ற தளங்களில் சில சிறுகதைகள் எழுதியுள்ளேன் 

  இது எனது முதல் நாவல் . இதனை  குறு நாவலாக எழுதியுள்ளேன். இது ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில்  புனையப்பட்டது.

          நான் வார்த்தைகளை கையாளுவதில் சிறிது கவனமாக இருக்கவே விரும்புகிறேன் நண்பர்களே. இந்த கதையை உண்மை சம்பவம் என்று கூறியுள்ளேன். உண்மை கதை என்று கூறவில்லை உண்மை சம்பவத்திற்கும் உண்மை கதைக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு.

          இதில் வரும் கதாபாத்திரங்கள்  நம் மத்தியில் நரம்பும் சதையுமாய் வாழ்ந்து செத்தவர்கள். இதன் உண்மை தன்மையை அறிய எங்கோ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் நாம் செல்ல வேண்டியது இல்லை.  இதோ இப்பொழுது  ஒரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் விளைந்த ஒரு மாவீரனின் வரலாறு.

          1962 ஆம் ஆண்டு இந்திய சீன யுத்தம் நடக்கும் நேரம் நாம் தோல்வி அடைந்தோம். இந்த யுத்தம் ஏன்? இதில் ஏன் தோல்வி அடைந்தோம்? இது எதனால் ஏற்பட்டது? இது போன்ற பல்வேறு தகவல்களை நான் நுட்பமாக சேகரிக்கும் போது தான் இந்த மாவீரனை கண்டேன்.

             ஆஹா!என் மண்ணே! என்ன உன் பெருமை?  நான் சத்தியம் செய்து சொல்லுவேன் இதுபோன்ற  மாவீரனை சுமக்கும்   திருவயிறு படைத்தவள் என் பாரதத்தாய் அன்றி வேறு எவர் உண்டு?

          வாசகர்களே! நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால்  இது கதையல்ல. அன்றைய சம்பவம் இன்றைய சரித்திரம். இதில் வரும் வார்த்தைகள் மட்டுமே எனக்கு சொந்தம்.  வாழ்க்கைக்கு சொந்தக்காரன்………..!!!!!!??????  “கதையை வாசித்து தான் பாருங்களேன்”

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியை…

6 hours ago

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா..புதிய அப்டேட்!

மிழ் திரையுலகில் காமெடி நடிகராகவே பல ஆண்டு காலம் பயணித்து வந்த நடிகர் சூரியின், திரை வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய…

6 hours ago

குழந்தைகளுக்கு பிடித்த பிரெஞ்சு டோஸ்ட் செய்யலாம் வாங்க!

French Toast உலகெங்கிலும் உள்ள மக்களால் விரும்பி உண்ணப்படும் காலை உணவாகும். எளிய பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த உணவு,…

6 hours ago

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு

தமிழ் திரையுலகில் காமெடியனாக கொடிகட்டிப் பறந்தவர் சந்தானம். ஒரு காலத்தில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்த…

6 hours ago

உடலென நீ உயிரென நான்-14

14  " ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டு போயேன் மாமா " பரபரப்பான தோப்பு வேலைகளில் இருந்த  தன் கணவனை மெல்லிய குரலில் ராஜம் அழைப்பது கேட்டது. அவள் கணவனை மாமா என்று அழைக்கிறாள் என மனதிற்குள் குறித்துக் கொண்டாள் மதுரவல்லி. சில நாட்களாகவே அவளுக்கு இந்த டாக்டர் என்ற அழைப்பை மாற்றுவது எப்படி என்ற எண்ணம்தான். திடுமென மாமா என்று கணநாதன் முன்னால் போய் நிற்கவும் ஒரு மாதிரி இருந்தது. ஆனால் கணவனுக்கான மரியாதையை அவனுக்கு கொடுத்தாக வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள். .இதனை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ ...? இச்சிந்தனையின் போது அவளுக்கு கறாரும் , கண்டிப்புமாக இருக்கும் தாடி வைத்த உர்ராங்குட்டான் டாக்டர் கணநாதன் தான் நினைவிற்கு வந்தான். அவளிடம் பட்டும் படாமல் ஒதுங்கி நிற்பானே அவன் ...ஆனால் இப்போதெல்லாம் அவன் அப்படி இல்லையே ...நிறைய மாறி விட்டானே ....அவளுள் இடை தழுவி நின்ற கணநாதனின் நினைவு. நிச்சயம் அப்போது அவன் வருடலில் மருத்துவத்தனம் இல்லை. சொல்லப்போனால் அந்த வித்தியாச வருடல்தான் அவளுக்கு முன்னொரு நாள் தனக்கு நேர்ந்த தவறான வருடலை உணர வைத்தது. அருவெறுக்க வைத்தது. ஆனால்  இன்றைய வருடல் ...மதுரவல்லியின் உடல் சிலிர்த்தது .…

10 hours ago

கொசுக்களை விரட்டும் செடிகள் என்னென்ன?!

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக…

10 hours ago