மகாபாரதக் கதைகள்/திரௌபதி அவமானம் !

துருபதன் அவளை என்ன சொல்லி படைக்கிறான்? இந்த உலகின் அவமானங்கள் அனைத்தையும் அவள் அடைய வேண்டும்! அப்படி அடைந்தாலும் அத்தனை அவமானங்களையும் அவள் வென்று வர வேண்டும் என்று வேண்டியே அவளை தோற்றுவிக்கிறான்!



நெருப்பின் மகளாகப் பிறந்த துருபதனின் மகள் கன்னிகையாகவேதான் இந்த மண்ணுலகிற்கு வருகிறாள். தீயிலிருந்தே பிறந்தாலும், மனித உருவமெடுத்தாலும் அவளுக்கு மனிதர்களின் தீய குணங்கள் இல்லை! அது என்னவென்றும் அவளுக்குத் தெரியாது!

அதனாலேயே அவள் நிறைய சங்கடங்களுக்கு ஆளாகிறாள்!

நமக்கெல்லாம் மகாபாரதத்தில் பகடையை உருட்டி சூழ்ச்சி செய்தவன் சகுனி என்று நன்றாகத் தெரியும்!

ஆனால் கண்ணுக்குத் தெரியாத பகடையை உருட்டி ஆளாளுக்கு சூழ்ச்சி செய்து தங்களுடைய ஆசைகளை தீர்த்துக் கொண்டனர் என்று தெரியுமா? இவர்களின் சூழ்ச்சிக்கெல்லாம் பலிகடாவானவள்தான் இந்த அபாக்கியவதி பாஞ்சாலி என்று தெரியுமா?

ஆமாம்! ஏனெனில் அவளுக்கு தீயைத் தெரியுமே தவிர, ஆசை, கோபம், வெறுப்பு, பழி, பாவம், வஞ்சகம், சூழ்ச்சி போன்ற தீய எண்ணங்களைத் தெரியாது! அவள் தீயிலிருந்து பிறந்ததால் புனிதமானவள்! அன்பு, பாசம், நேசம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் குணம், வீரம் போன்ற புனிதமான பண்புகளையுடையவள்! அதனால்தான் பல கொடுமைகளுக்கு ஆளாகிறாள்! ஆனாலும் தன் நற்பண்புகளை அவள் ஒருபோதும் கைவிட்டதில்லை!

துருபதன், துரோணரை பழி வாங்க பகடையை உருட்டி திரௌபதியை தோற்றுவிக்கிறான்!

குந்தி தன் மகன்கள் அரசாள வேண்டும்! அதற்காக அவர்கள் ஒற்றுமையாக இருத்தல் அவசியம் என்று பகடையை உருட்டி திரௌபதியை ஐவரின் மனைவியாக்கினாள்!

பீஷ்மர் தன் பிரம்மச்சரிய விரதம் பாழாகக் கூடாதென்றும், அஸ்தினாபுரத்தை காப்பேன் என்ற தன் சபதம் நிறைவேறவும் பகடையை உருட்டி துரியோதனன் செய்யும் தீய செயல்களை கண்டிக்காமல் விடுகிறார்! விளைவு? துரியோதனனின் மனதில் கொழுந்துவிட்டெறியும் பகையினால் தன் தம்பிகளின் மனைவியையே மானபங்கப்படுத்தத் துணிகிறான்!

திருதிராஷ்ட்டிரன் தன் மகனுக்கு அரசாட்சி வர வேண்டும் என்று பகடையை உருட்டி சகுனியையும் துரியோதனனையும் கண்டிக்காமல் விடுகிறான்! விளைவு! சூதாட்டத்துக்கு யுதிஷ்ட்டிரனை அழைத்து அனைத்தையும் அவனை இழக்க வைத்து திரௌபதியை களங்கப்படுத்தத் திட்டமிடுகிறான் துரியோதனன்!

இப்படி ஆளாளாளுக்கு பகடை உருட்டுவதால் அந்த பகடைகளுக்கு பலியானவள் திரௌபதி! ஆனாலும் அவள் எதையும் தாங்கும் இதயத்தோடு வாழ்கிறாள்!

அக்கினியிலிருந்து கன்னிகையாக பிறந்ததால் அவளுக்கு குழந்தைப் பருவம் கிடையாது! அதனாலேயே தாயன்பு, தந்தையன்பு கிடையாது! சகோதரனுடன் தோன்றினாலும் சகோதர பாசம் கிடையாது! அவள் சகித்துக் கொள்கிறாள்!



அர்ஜுனனின் மனைவியாக ஆவாய்! என்று சொல்லியே அவளை வளர்க்கிறான் துருபதன். ஆனால் சுயம்வரம் என்ற ஒரு நாடகத்தை நடத்துகிறான்! அங்கும் அவளுடைய விருப்பம் கேட்கப்படவில்லை! அர்ஜுனன் சுயம்வரத்தில் திரௌபதியை வென்றாலும் குந்தியின் வார்த்தைப் பிழையால் பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகிறாள்! அவள் வேறு வழியின்றி இந்த நிலையை ஏற்கிறாள்!

அரசியாக இருந்தாலும் அரச வாழ்வு மறுக்கப்படுகிறது! ஆனால் வனவாசத்தையும் அவள் சலனமின்றியே ஏற்கிறாள்!

ஐவரின் மனைவியாக இருந்தாலும் அவளுக்கு காதல் மறுக்கப் படுகிறது! தன் ஐந்து கணவர்களின் மூலம் ஐந்து குழந்தைகளுக்குத் தாயாக ஆனாலும் அவளுக்கு பிள்ளைக் கனியமுதும் மறுக்கப்படுகிறது! அவள் மனவருத்தப்பட்டாலும் ஜீரணித்துக் கொள்கிறாள்!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தருமம்! ஒருவனுக்கு மேற்பட்ட ஆடவனுடன் ஒரு பெண் உறவு கொண்டால் அவள் பதிவிரதை கிடையாது என்கிறது தர்மசாஸ்த்திரம்! அப்படியிருக்கையில் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள் என்றால் அவளுக்கு எத்தனை அவச்சொல் வந்திருக்கும்?! அத்தனையையும் தாங்குகிறாள்.

ஆனால் வியாச முனிவர் அவள் ஐவருக்கு மனைவியானாலும் அவள் தினம் தினம் காலையில் எழுந்ததும் தன் கன்னித் தன்மையைப் பெறுவாள் என்று வரமளிக்கிறார்! அதனால் அவள் நித்யகன்னியாவாள்!



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-16 (நிறைவு)

16 ‘‘அட.. ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? வாருங்கள் சகோதரி..” பிரெட்ரிக்கின் ‘சிஸ்டர்’ மைக் வழியாக அந்த அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.…

11 hours ago

ஒன்று சேர்ந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி.. என்ன நடந்துச்சு தெரியுமா.?

கடந்த சில மாதங்களாகவே அடுத்தடுத்து விவாகரத்து செய்திகள் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதிலும் கோலிவுட்டில் இப்போது இந்த கலாச்சாரம்…

11 hours ago

தங்கமயிலின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிய மீனா ராஜி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மாமியாரின் கெத்து எப்படி இருக்கும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.…

11 hours ago

பட்டுனு தந்தூரி சிக்கன் செஞ்சு சட்டுனு சாப்பிடலாம்!

சிக்கன் விரும்பிகளுக்கு இந்த எளிய ரெசிபி பெரிய உதவியாக இருக்கும். பட்டுன்னு பத்தே நிமிஷத்துல செஞ்சிடலாம் தந்தூரி சிக்கன். ஆனா…

11 hours ago

’எமகாதகன்’ திரைப்பட விமர்சனம்

முன்னொரு காலத்தில் பாஞ்சாயி என்ற பெண் விடுத்த சாபத்தால் குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளைகள் திருமணம் செய்துக் கொண்டால் இறந்து…

11 hours ago

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

15 hours ago