மகாபாரதக் கதைகள்/கண்ணன் ஆடிய கூத்துக்கள்

கண்ணன் பேரன். அநிருத்தன். பானாசுரன் மகள் உஷை. அவள் அநிருத்தனைக் காதலித்தாள். அநிருத்தன் தூங்குகையில் அவனைத் தன் அந்தப்புரத்துக்குக் கடத்திச் சென்று விட்டாள்.

அவனை மீட்பதற்காகக் கண்ணன் பாணாசுரனது சோ நகருக்குச் சென்றான். அப்போது அங்கு அநிருத்தன் உள்ள இடம் தெரிந்து கொள்ளும் பொருட்டு, வீதியிலே குடக்கூத்தும், பேடிக்கோலக் கூத்தும் ஆடிக் கொண்டு சென்றான் என்பது தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிச் செய்தி.



அது மட்டுமன்று கஞ்சனைக் கொல்வதற்காக அல்லியத் தொகுதிக் கூத்து என ஒருவகைக் கூத்து ஆடினான் என்பதும். கஞ்சன் ஏவிய சாணூரன், முட்டிகன் என்ற மல்லரைக் கொல்வதற்காக மல்லாடல் என்ற கூத்தும் ஆடினான் என்பதும் தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிய செய்திகள். இவற்றைச் சிலப்பதிகாரம் மிகமிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.

சங்க நூல்களில் பொதுவாக, கண்ணன் வரலாறுகள் பல கூறப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் வடநாட்டுக் காவியங்களில் உள்ளனவே.

கண்ணன் சூரியனைத் தந்தான் என ஒரு செய்தி குறிப்பிடப்படுகின்றது. அவ்வரலாறு வடமொழிக் காவியங்களில் இல்லை. தமிழ்நாட்டில் வழங்கி வந்த செவிவழிச் செய்திதான் போலும்! ஆனால் அச்செய்தி விளக்கமாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

தானுபே குழுமம் ரிஸ்வான் சாஜனின் வெற்றிக் கதை!

கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தானுபே குழுமம் (Danube Group) பற்றி நம்மில் பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது. 1993-ஆம்…

2 hours ago

காணாமல் போன பாக்யாவின் சந்தோஷம் – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ் ஈஸ்வரி…

2 hours ago

சினிமாக்காரங்கனா என்ன ? வீடு தர மாட்டீங்களா? நடிகர் ஸ்ரீ காந்த் காட்டம்

தமிழில் ரோஜாக்கூட்டம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி முன்னனி நடிகராக இருப்பவர் ஸ்ரீ காந்த். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம்…

5 hours ago

திடீரென காது வலியா? உடனடி நிவாரணம் பெற இந்த எளிய இயற்கையான வீட்டு வைத்தியம்!

காது வலி என்பது ஒரு பொதுவான மற்றும் துன்பகரமான பிரச்சினையாகும், இது ஒருவரின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதிக்கலாம். இது…

5 hours ago

மருதாணி பயன்படுத்துகிறீர்களா..? இதன் பாதிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்!

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வர நரை முடி பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். முடியை இயற்கையாக கருப்பாக்க சந்தையில் பல்வேறு பொருட்கள்…

5 hours ago

பல வருடங்களாக இசைக்காக காத்திருந்த வைரமுத்து.. 10 நிமிடத்தில் உயிர் கொடுத்த இசைப்புயல்..

ரசிகர்கள் மத்தியில் ஒரு பாடல் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறதோ அதற்கு இசையமைப்பாளரின் பெரிதாக இருக்கும். ஆனால், அதே போல…

5 hours ago