மாவட்ட கோவில்கள்:பூவராக சுவாமி திருக்கோவில்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில் மூன்றாம் அவதார தலமாகும்சுவாமி : பூவராக சுவாமி (தானே தோன்றியவர்).

அம்பாள் : அம்புஜவள்ளி தாயார்.

விமானம் : பாவன விமானம்.

தீர்த்தம் : நித்ய புஷ்கரணி.

தலவிருட்சம் : அரச மரம்.



தலச்சிறப்பு : இக்கோவிலில் நாராயணன் வராஹ அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.  தினமும்  காலை மூலவருக்கு திருமஞ்சனம், மக்கட்பேறு வேண்டுபவர்கள் அரச மரத்தை வலம் வந்து  ஸ்ரீசந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்துகொள்வதினால் பயன் பெறுவார்கள்.   நெய்  தீபம் ஏற்றுவதினால் ஐஸ்வர்யம் உண்டாகும், குடும்பம் தழைக்கும், பெண்களுக்கு திருமணம்  நடக்கும். தானே தோன்றிய மூர்த்திகளை கொண்டவைணவ தலங்களில் இதுவும் ஒன்று  (1. ஸ்ரீரங்கம் 2. ஸ்ரீமுஷ்ணம் 3. திருப்பதி 4. வானமாமலை).

இந்த கோவில் புருஷசுகாரா மண்டபம் எனப்படும் மண்டபம் ஒன்றையும் தன்னகத்தே  கொண்டுள்ளது. 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேர் வடிவ மண்டபத்தை குதிரைகளில்  போர் வீரர்கள் இழுத்துச் செல்ல, பின்னால் யானைகள் தொடர்ந்து வருமாறு  வடிவமைக்கப்  பட்டுள்ளது.  ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்  அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது.



திருத்தல வரலாறு : முன்னொரு காலத்தில் நாராயணன் மிகப் புனிதமான வராஹஅவதாரம்  எடுத்து, பூமியைக் கவர்ந்து சென்ற ஹிரன்யாஹூசன் என்னும் அசுரனை கொன்று, அப்பூமியை  தனது கோரைப் பற்களினால் சுமந்து வந்து, அதிஷேஷன் மேல் அமர்ந்த நிலையில் காட்சி  தருகிறார்.  அச்வத்த விருஷத்தையும், துளசியையும் உண்டாக்கி, தனது வியர்வை நீரின் பெருக்கை  கொண்டு நித்ய புஷ்கரணி என்ற புனித தீர்த்தத்தையும் ஏற்படுத்தி, ஸ்ரீமுஷ்ணம் என்னும்  இத்தலத்தை இருப்பிடமாக ஏற்று பிரம்மன் முதலானோர் பூஜிக்க ஸ்ரீபூவாராகவன் என்ற  திருநாமத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பவராக இத்திருக்கோவிலில்  எழுந்தளியுள்ளார்.

இக்கோவிலின் பெருமையை உணர்த்த பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஒரு ஊரை  ஆண்டு வந்தார்.  அவருக்கு தீராத வியாதி ஏற்பட்டது.  வைத்தியர்கள் அவரை கைவிட்ட  நிலையில், இக்கோவில் வழியாக ஆதி நவாப் செல்லும் போது, ஒரு பக்தன் தான் வைத்திருந்த  பெருமாளின் தீர்த்ததையும், பிரசாததையும் கொடுத்தான்.  அதை சாப்பிட்ட ஆதி நவாப் பூரண  குணமடைந்ததார். அது முதல் அவர் பெருமாளின் பக்தனாக மாறினார்.  அதுமட்டுமில்லாமல்  கோவிலுக்காக நிறைய நிலங்களை எழுதி வைத்தாக கூறப்படுகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற பயன்.. ஓம வாட்டரை தயாரிப்பது எப்படி?

குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை உதவக்கூடிய ஓம வாட்டரின் பயன்கள் என்னென்ன தெரியுமா? ஓம வாட்டரை எப்படி தயாரிக்க வேண்டும்?…

1 hour ago

ஜூலை 2024 க்கான முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 2024  க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம். அரசு விடுமுறை …

1 hour ago

இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் கலகல பேச்சு.!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக…

1 hour ago

தானங்களும் அவற்றின் பலன்களும்

தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின்…

5 hours ago

மகாபாரதக் கதைகள்/தற்பெருமையையும் அகந்தையையும்

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள்…

5 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

சுவாமி : விருத்தகிரீஸ்வரர் (அ)பழமலைநாதர், முதுகுந்தர். அம்பாள் : விருத்தாம்பிகை (அ) பாலாம்பிகை, இளைய நாயகி. தீர்த்தம் : மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி,…

5 hours ago