அர்ஜுனன் தனது வனவாச காலத்தின் போது, சித்திராங்கதையிடம் இருந்து விடைபெற்று சென்று புண்ணிய நீர்நிலையான தெற்கு கடற்கரைக்கு சென்றார்.
ஆனால் அங்கே அந்த ஐந்து நீர்நிலைகளான அகஸ்தியம், சௌபத்ரம், கரந்தமம், பரத்வாஜம், பௌலோமம் ஐந்து புண்ணிய நீர் நிலைகளைளும் அனைவராலும் தவிர்க்கப்பட்டிருப்பதை கண்டார்.
இதற்கான காரணத்தை துறவிகளிடம் வினவிய போது அவர்கள் அங்கே ஐந்து பெரும் முதலைகள் வசிப்பதாகவும், அவை குளிக்க செல்பவர்களை இழுத்துச் சென்று விடுகின்றன என்றும் கூறினார்கள்.
துறவிகளின் இந்த வார்த்தைகளை கேட்ட அர்ஜுனன் அந்த நீர்நிலைகளிற்கு சென்று, குளிப்பதற்காக மூழ்கினார்.
அவர் மூழ்கியதும் அவனது காலை ஒரு பெரிய முதலை பற்றியது.
ஆனால் பலம் கொண்ட அர்ஜுனன் அந்த முதலையை தரையில் இழுத்துப் போட்டார்.
அப்போது அங்கே அவரால் இழுத்துப் போடப்பட்ட முதலை ஒரு அழகிய பெண்ணாக மாறியது.
இதை கண்ட அர்ஜுனன் அவளை நோக்கி ” நீ யார், நீ ஏன் இந்த நீரை அதிகாரம் செய்து கொண்டு இப்படிப்பட்ட பாவங்களை இழைக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மங்கை “நான் ஒரு அப்சரஸ் , எனது பெயர் வர்கா. நான் குபேரனுக்கு மிக அன்பானவள்.
என்னுடன் இன்னும் நான்கு தோழிகள் இருக்கிறார்கள். நாங்கள் நினைத்த இடத்திற்கு செல்லக்கூடிய சக்தி பெற்றவர்கள்.
ஒரு நாள் அவர்களுடன் குபேரனின் வசிப்பிடத்திற்கு சென்றேன். அப்போது நாங்கள் செல்லும் வழியில் கடும் தவம் இருந்த ஒரு அந்தணரை கண்டோம். அவர் தன் தவத்தால் அந்த பகுதியையே பிரகாசிக்க செய்திருந்தார்.
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் அழகை கண்ட நாங்கள், அவரின் தவத்தை கலைக்க தீர்மானித்தோம்.
நானும் சௌரபேயி,சமிச்சி,வியுத்யுதா,லதா ஆகிய எனது தோழிகளும் சிரித்தும் பாட்டுப் பாடியும் பல வழிகளிலும் அந்த அந்தணரை மயக்க முயற்சி செய்தோம்.
ஆனாலும் அவர் மனதை எம்மால் கலைக்க முடியவில்லை. அவர் எங்களை கண்ட போது பெரும் கோபத்துடன் பார்த்தார்.
எங்களை பார்த்து “நீங்கள் அனைவரும் முதலைகளாக மாறி நீர்நிலைகளில் அதிகாரம் செலுத்துங்கள் ” என்று சபித்தார்.
பின்னர் நாங்கள் துன்பமடைந்து, எமது தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு விமோசனம் வேண்டினோம்.
அப்போது அவர் “நீங்கள் முதலைகளாகி நூறு ஆண்டுகளுக்கு மனிதர்களை பிடித்து உண்ணுங்கள்.
அந்தக் காலத்தின் முடிவில் ஒரு மேன்மை மிகுந்தவன் உங்கள் அனைவரையும் நீரில் இருந்து வெளியே இழுத்துப் போடுவான்.
அப்போது நீங்கள் உங்கள் உண்மையான உருவத்தை அடைவீர்கள்” என்றார்.
அதன் பின்னர் கனத்த இதயத்துடன் நாங்கள் அங்கே வசித்து வந்தோம்.
அப்போது நாங்கள் அங்கே தெய்வீக முனிவரான# நாரதரை சந்தித்தோம்.
அவரை வணங்கி எமது நிலைமையை துயரத்துடன் கூறினோம்.
நடந்தவற்றை கேட்ட அவர்……
“”தெற்கு கடலருகே இருக்கும் தாழ்ந்த நிலங்களில் ஐந்து புனித நீர்நிலைகள் இருக்கின்றன. தாமதமில்லாமல் அங்கே செல்லுங்கள்.
பாண்டுவின் மகனான சுத்தமான ஆன்மா கொண்ட தனஞ்செயன் உங்களை இந்த நிலையில் இருந்து விடுவிப்பான்”””என்று கூறினார்.
முனிவரின் வார்த்தைகளை கேட்ட நாங்கள் இங்கு வந்தோம். அவர் கூறியது போலவே நான் உங்களால் விடுவிக்கப்பட்டேன்.
ஆனால் எனது நான்கு தோழிகள் அந்த நீர்நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுப்பாயாக ” என்று வேண்டினாள்.
அவள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மற்றவர்களையும் சாபத்திலிருந்து விடுவித்தார் அர்ஜுனன். அந்த நீர்நிலைகளையும் காப்பாற்றி, அவர்களையும் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி வைத்தார்.
அன்று ஸ்ரீராமனின் பாதம் பட்டு கல்லாய் இருந்த அகலியை சாப விமோசனம் பெற்றது போலவே,,,,
இந்த பார்த்தனால் ஐந்து அப்சரஸ்கள் சாப விமோசனம் பெற்றனர். நம் அர்ஜுனர் பெருமை கூற வார்த்தைகள் ஏது??????????……..