மகாபாரதக் கதைகள்:பொறாமையினால் ஏற்படும் துன்பம்

பாண்டுவின் மனைவியர்களான குந்தி, மாதுரி இருவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். தனது ஓரகத்திகளுக்குப் பிள்ளைப் பேறு உண்டாகியும், தனக்கு உண்டாகாததை எண்ணி பொறாமை கொண்ட பாண்டுவின் அண்ணன் மனைவியான காந்தாரி ஓர் உலக்கையால் வயிற்றில் அடித்துக் கொண்டாள். சில நாள்களில் கர்ப்பமான காந்தாரி ஒரு மாமிசப் பிண்டத்தைப் பெற்றுஎடுத்தாள்!





வியாச முனிவர் அதை நூறு பிள்ளைகளாகவும், ஒரு பெண்ணாகவும் மாற்றினார். அதாவது, காந்தாரியின் பொறாமை நூறு பிள்ளைகளாகவும் பெண்ணாகவும் உருவெடுத்தது. பொறாமையே மனித உருவாகப் பிறந்ததனால், அவர்களில் மூத்தவனான துரியோதன் பாண்டவர்களின் வீரம், புகழ் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டான். குறிப்பாக, நிகரற்ற உடல் பலம் கொண்டிருந்த பீமனைக் கண்டு மிக அதிகமாகப் பொறாமைப் பட்டான்.

அதன் விளைவாக, ஒருநாள் துரியோதனன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து பீமனுக்கு விஷமளித்து, அவனை நாகப்பாம்புகள் நிறைந்த ஆற்றினில் தூக்கி வீசினர். நாகங்கள் அவனைத் தீண்ட, அவற்றின் விஷம், ஏற்கெனவே துரியோதனன் அளித்த விஷத்தை முறியடித்து விட்டது. ஆற்றில் மூழ்கிய பீமன் ஆற்றின் அடியிலிருந்த நாகலோகத்தை அடைந்தான். நாகராஜா அவனை வரவேற்று உபசரித்து, ஆயிரம் யானைகளின் பலத்தை அவனுக்கு அளித்தான்.

உயிர் பிழைத்து வந்த பீமனைக் கண்டு, துரியோதனின் பொறாமை பல மடங்கு பெருகியது. பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு சூதாட்டத்தில் ஆசை உண்டு. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவரை சூதாட்டத்தில் தோற்கடித்த துரியோதனன், பாண்டவர்களை பதின்மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்துகிறான்.

பதின்மூன்று ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகும், பாண்டவர்களின் உரிமையை துரியோதனன் தர விரும்பாததால், பாரதப் போர் நிகழ்கிறது. மொத்தத்தில், துரியோதனுடைய பொறாமையினால் மற்றவர்களுக்குத் துன்பமும், இறப்பும் உண்டாகிறது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற பயன்.. ஓம வாட்டரை தயாரிப்பது எப்படி?

குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை உதவக்கூடிய ஓம வாட்டரின் பயன்கள் என்னென்ன தெரியுமா? ஓம வாட்டரை எப்படி தயாரிக்க வேண்டும்?…

23 mins ago

ஜூலை 2024 க்கான முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 2024  க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம். அரசு விடுமுறை …

26 mins ago

இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் கலகல பேச்சு.!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக…

28 mins ago

தானங்களும் அவற்றின் பலன்களும்

தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின்…

4 hours ago

மகாபாரதக் கதைகள்/தற்பெருமையையும் அகந்தையையும்

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள்…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

சுவாமி : விருத்தகிரீஸ்வரர் (அ)பழமலைநாதர், முதுகுந்தர். அம்பாள் : விருத்தாம்பிகை (அ) பாலாம்பிகை, இளைய நாயகி. தீர்த்தம் : மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி,…

4 hours ago