செடிகளுடன் சேர்த்து விதைகளையும் பாதுகாப்பது எப்படி? – சில டிப்ஸ்
வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்துட்டு வர்றோம். விதைகளைச் சேமிக்கிறது பற்றியும், சில டிப்ஸ்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
“இன்றைக்கு மாடித் தோட்டத்துக்கு அவசியமானவை பாரம்பர்ய விதைகள். அவற்றுக்கே உரித்தான வீரியம் எப்போதும் குறையாது. மாடித்தோட்டத்திலிருந்து நாம் ஒருமுறை விதைகளைப் பெற்று அதை அடுத்த முறை விதைப்புக்குப் பயன்படுத்துவதுதான் இப்போது பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம், வெளியிலிருந்து வாங்கும் விதைகளில் முளைப்புத் திறன்கள் சந்தேகமாக இருப்பதுதான். ஏனெனில், எல்லா விதைகளுக்கும் ஒரு ஆயுள் உண்டு. விதைகளின் ஆயுளை சரியாகப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் முளைப்புத்திறன், மகசூல் கொடுக்கும் திறன் ஆகியவை சரியாக இருக்கும்.
விதைகளின் மேற்பரப்பில் பாதுகாப்பாகக் கவசம் போல ஒரு உறை இருக்கும். அதை நீக்காமல் இருக்கும்வரை அந்த விதைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கும். அதற்குச் சரியான உதாரணம், நமது உடலின் மேல் தோலைச் சொல்லலாம். இந்தத் தோல் எனும் உறை எப்படி மனித உடலைக் காக்கிறதோ அதேபோல விதைகளின் மேல் இருக்கும் உறைகள் விதைகளைப் பாதுகாக்கும். அதற்காக விதைகளின் மேல் தோலை நீக்காமல் அப்படியே சேமிக்க வேண்டும் என்பதும் தவறு.
2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக…