Categories: lifestyles

குழந்தைப் பாக்கியம் தாமதமாகும் பெண்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள்!

குழந்தைப் பேறு என்பது பெண்கள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, அதில் ஆண்களுக்கும் பெரும் பங்குண்டு. அதேபோல், குழந்தைப் பேறு தாமதமாவதற்கும் ஆண், பெண் இருவருக்கும் சம பங்கு உண்டு. இதில் பிள்ளைப் பேறு தாமதமாவதற்கு பெண்கள் தரப்பில் சில கருப்பை கோளாறுகளால் குழந்தை பாக்கியம் பெற நீண்ட நாட்களாகி விடுகின்றன. அதற்கு எளிய வைத்தியங்களை கையாண்டால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும். அதற்கான சில வைத்திய குறிப்புகள்.



மகிழம்பட்டையை பொடித்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும்.

இலந்தை இலை ஒரு பிடி, மிளகு ஆறு, பூண்டு பல் நாலு இவற்றை மென்மையாகும் படி அரைத்து மாதவிலக்கான முதல் இரு நாட்கள் கொடுத்து வர கருப்பை குறைபாடுகள் நீங்கி மகப்பேறு வாய்க்கும்.

இளம் மூங்கில் குருத்தை சிதைத்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை, மதியம் குடித்து வர பேறு கால கருப்பை அழுக்குகள் வெளியேறும். சூதகக் கட்டு தீரும்.

மாவிலங்கம் பட்டையை இடித்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை சாப்பிட்டு வர மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.



அசோகப்பட்டை, மாதுளை வேர் பட்டை, மாதுளம் பழவோடு இவற்றை சமனளவு பொடி செய்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட்டு வர கருச்சிதைவு, வயிற்று வலி, கருச்சூலை, பெண் மலடு ஆகியவை தீரும்.

காரைப் பழத்தை காலை, மாலை சாப்பிட்டு வர, கருங்காலி பிசினை நீரில் கரைத்து காலை, மாலை சாப்பிட்டு வர தாது பலப்படும். கோரைக்கிழங்கை உலர்த்தி பொடித்து காலை, மாலை தேனில் சாப்பிட்டு வர தாது பெருக்கம் உண்டாகும்.

பழம் புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி இவற்றை சம அளவு அரைத்து நெல்லிக்காய் அளவு காலை, மாலை கொடுக்க கருப்பை இறக்கம் குணமாகும்.

மந்தார இலையை உலர்த்தி பொடித்து தேனுடன் சாப்பிட வாந்தி, குமட்டல், மசக்கை நீங்கி பசி உண்டாகும்.

ஓரிதழ் தாமரை இலை, வேர், பூ என்று சமூலம் அனைத்தையும் அரைத்து கணவன் மனைவி இருவரும் குடித்து வர குழந்தை பாக்கியம் கிட்டும்.

அரச விதையை உலர்த்தி பொடித்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உயிர் அணுக்கள் பெருகி ஆண் மலட்டை நீக்கும்.

ஆலம்பழம், விழுது, கொழுந்து சம அளவு அரைத்து எலுமிச்சங்காய் அளவு காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உயிரணுக்கள் உற்பத்தியாகும்.

பருத்தி இலைச் சாற்றை தேனில் கலந்து மாதவிலக்கு முடிந்ததும் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை பலம் பெறும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கருங்காலி மாலை பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும்

தொழிலில் வெற்றியை தந்து, அனைத்து கனவுகளையும் நனவாக்கும் தன்மை கருங்காலி மாலைக்கு உண்டு. செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்டது என்பதால்…

10 mins ago

மகாபாரதக் கதைகள்/பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!

பலருக்கும் தெரியாத புராணத்தில் உள்ள பாலினம் மாறுபாடு குறித்த சில சுவாரஸ்ய கதைகள்!!!பாலியல் வன்கொடுமைக்காக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது;…

11 mins ago

மாவட்ட கோவிகள்:உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி

திருஞானசம்பந்தர், சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்– பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாகப் அவதரித்தார். தனது மூன்றாம் வயதில் தந்தையுடன் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் உள்ள…

14 mins ago

நாள் உங்கள் நாள் (07.07.24) ஞாயிற்றுக்கிழமை

கௌரி பிக் பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஜூலை 07.07.24 ஞாயிற்றுக்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - ஆனி 23 …

16 mins ago

இன்றைய ராசி பலன் (07.07.24)

ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை…

17 mins ago

நீயில்லாமல் வாழ்வது லேசா!-16 (நிறைவு)

16 ‘‘அட.. ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்? வாருங்கள் சகோதரி..” பிரெட்ரிக்கின் ‘சிஸ்டர்’ மைக் வழியாக அந்த அரங்கம் முழுவதும் அதிர்ந்தது.…

12 hours ago