Categories: lifestylesNews

ஐஆர்சிடிசியில் உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதா?

ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்து ரயிலில் பயணிப்பது என்பது பலருக்கும் சிக்கலான விஷயமாக உள்ளது. ஐஆர்சிடிசி வெப்சைட்டில் உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவே பலர் எப்படி டிக்கெட் எடுக்கிறார்கள்.

இந்நிலையில் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட்டு எடுத்து வந்தவர்கள் கவலையில் உள்ளனர். இந்த செய்தி வதந்தி என்று ரெயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்,



இது தொடர்பாக அவர் கூறுகையில், ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் தவறானது. ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஐஆர்சிடிசி தளத்தின் மூலம் இ-டிக்கெட் எடுக்கலாம். ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம்.

கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருத்தல் வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்” என்றார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஓம வாட்டர் தரும் ஒப்பற்ற பயன்.. ஓம வாட்டரை தயாரிப்பது எப்படி?

குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள் வரை உதவக்கூடிய ஓம வாட்டரின் பயன்கள் என்னென்ன தெரியுமா? ஓம வாட்டரை எப்படி தயாரிக்க வேண்டும்?…

53 mins ago

ஜூலை 2024 க்கான முக்கிய நிகழ்வுகள்

ஜூலை 2024  க்கான அரசு விடுமுறை, விரத நாட்கள், பண்டிகை நாட்கள், முகூர்த்த நாட்களின் தொகுப்பினை வழங்கியுள்ளோம். அரசு விடுமுறை …

56 mins ago

இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சித்தார்த் கலகல பேச்சு.!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன் 2” படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக…

58 mins ago

தானங்களும் அவற்றின் பலன்களும்

தானம் செய்வதின் பலன்கள் உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின்…

4 hours ago

மகாபாரதக் கதைகள்/தற்பெருமையையும் அகந்தையையும்

கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில் தான் அங்கு விளையாடிய நினைவுகள்…

4 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்

சுவாமி : விருத்தகிரீஸ்வரர் (அ)பழமலைநாதர், முதுகுந்தர். அம்பாள் : விருத்தாம்பிகை (அ) பாலாம்பிகை, இளைய நாயகி. தீர்த்தம் : மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி,…

4 hours ago