அந்தக்காலத்தில் திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் மாசித்திருவிழா நடக்கவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. அதனால அங்கு கொடி மரம் வைக்கணும்னு முடிவு எடுக்கிறாங்க. அதற்காக ஆறுமுக ஆசாரி தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி மலையில் போய் கொடி மரம் வெட்ட வேண்டும் என தீர்மானிக்கிறார்கள்.
இதற்காக திருச்செந்தூர் மந்தை அருகே உள்ள அம்மனை வேண்டலாம்னு அங்கு வந்து சாமி கும்பிட வர்றாங்க. அப்போ ஆறுமுக ஆசாரி மட்டும் கோவிலுக்குள் போய் வணங்குறாரு. அப்போ அம்மனின் கண்களில் கண்ணீர் வழிகிறது. அதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார் ஆறுமுக ஆசாரி. ‘அம்மனே, ஏன் உனக்கு இந்த நிலை?’ என கேட்கிறார்.
‘நீங்கள் செய்யக்கூடிய காரியம் நல்ல காரியம் தான். ஆனால் அங்கு உன்னைத் தவிர உன்னுடன் இருக்கும் வேறு யாரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள். இதை நினைத்துத் தான் எனக்கு கண்ணீர் வருகிறது. இதை அவர்களிடம் சொல்லி விடாதே. இது ஆண்டவன் கட்டளை’ என்கிறது அந்த அம்மன்.