Categories: CinemaEntertainment

சிவாஜி வந்ததும் … பாட முடியாமல் திணறிய பி.சுசீலா

1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவருட்செல்வர். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் நடிகர் திகலம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் சக நடிகர்கள், பாடகர்கள் என அனைவரிடமும் அன்போடு பழகும் குணம் கொண்டவர் என்றாலும் சில சமயங்களில் அவரின் அபரீதமாக அன்பின் காரணமாக தங்கள் பலர் தங்கள் வேலையை சரியாக செய்ய முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாடகி பி.சுசீலா ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.



க்ளாசிக் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்த பி.சுசீலா, பல முன்னணி நடிகைகளுக்கும் தனது இனிமையான குரலின் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்களை பாடியுள்ள பி.சுசீலா இன்றும் அவரது பாடல்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார் என்று சொல்லலாம்.

1967-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவருட்செல்வர். சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, முத்துராமன், பத்மினி, கே.ஆர்.விஜயா, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியுள்ளார்.



11 பாடல்கள் கொண்ட இந்த படத்தில் 7 பாடல்களை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். மேலும் இரு பாடல்களை பாடகி பி.சுசிலா பாடியிருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற மன்னவன் வந்தானடி பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது. இந்த பாடல் பதிவு நடைபெறும்போது, சிவாஜியும் பங்கேற்றுள்ளார். எப்போதும் அனைவரிடமும் அன்பாக பழகும் சிவாஜி, இந்த பாடல் பதிவின்போது பி.சுசீலாவின் அருகில் அமர்ந்துள்ளார்.

சிவாஜி அருகில் அமர்ந்ததால் பாட முடியாமல் திணறிய பி.சுசீலா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். மேலும் பாடலில் வரும் சொரவரிசை பதிவு நடைபெற்றபோதும், சிவாஜி அருகில் இருக்கும்போது பாட முடியாமல் பல டேக்குகள் வாங்கியுள்ளார். அதன்பிறகு மெதுவாக வெளியில் வந்து இயக்குனர் உள்ளிட்ட சிலரிடம் அவரை வெளியில் அழைத்துக்கொள்ளுங்கள் அப்போது தான் என்னால் சரியாக பாட முடியும் என்று கூறியுள்ளார்.

அதன்பிறகு அவர்கள் சிவாஜி கணேசனை அழைத்து செல்ல, பி.சுசீலா அற்புதமாக அந்த பாடலை பாடி முடித்துள்ளார். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.



What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Radha

Recent Posts

விஜய் டிவியின் 5 சீரியலின் கதை..ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி! தான்.

என்னதான் சன் டிவி சீரியலுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்து வந்தாலும் இப்ப இருக்கிற ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சீரியலை கொடுப்பது விஜய் டிவி தான்.…

9 hours ago

பாக்யா குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி இனிமே…

9 hours ago

பாலியல் தொழிலாளிகள் சூழலை பேசும் வெப் சீரிஸ்: ஹீராமண்டி எப்படி? ஓடிடி திரை அலசல்

பாலியல் தொழில் நடக்கும் புகழ்பெற்ற ஹீராமண்டியின் ஷாஹி மஹாலின் தலைவியான மல்லிகாஜானை வென்று அந்த இடத்தைப் பிடிக்க அவரது சகோதரியின்…

10 hours ago

பேரிச்சம்பழம் அல்வா

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன. பேரீச்சை பழங்கள் துரிதமான…

10 hours ago

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

14 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

14 hours ago