உங்க வீட்டு செடி முருங்கையில் தாறுமாறாக காய்கள் காய்க்கனுமா?

செடி முருங்கை என்பது, மரத்தை போன்று அல்லாமல் ஒரு குறிப்பிட்ட உயரம் வளரக்கூடியது ஆகும். இது பதியம் வைத்த 4 மாதங்களில் காய்க்க தொடங்கும். இதன் மூலம் குறுகிய காலகட்டத்தில் அதிக விளைச்சலை பெறலாம். இது, மூன்று வருடங்கள் வரை காய்த்து பயனளிக்கும். பெரும்பாலும், நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில், செடி முருங்கையை மாடித்தோட்டத்தில் வளர்ப்பார்கள். எனவே, இதனை நாம் வீட்டில் வளர்க்கும் போது அதற்கு என்னென்ன அளிக்க வேண்டும் என்பதை அதனை எப்படி பராமரிப்பது என்பதையும் பின்வருமாறு விவரித்துள்ளோம்.



முருங்கை செடி வைத்து 2 அடி வளர்ந்ததும், அதன் அடிப்பகுதியில் உள்ள மண்ணினை சிறிதளவு குழிபறித்து கட்டி பெருங்காயத்தை அதில் பதித்து வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், முருங்கை எந்தவிதமான நோய்களின்றி நன்றாக வளர தொடங்கும்.

செடி முருங்கை வைத்து, 3 அடிஅளவிற்கு வளர்ச்சி அடைந்ததும் அதனை கவாத்து செய்து விட வேண்டும். அதாவது, அதில் உள்ள பக்க கிளைகளை நறுக்கி விட வேண்டும். செடி முருங்கை வைத்த 4 -வது மாதத்தில் காய்க்க தொடங்கும்.

முருங்கை மரத்தில், பூக்கள் அதிகமாக பூத்தால் தான் காய்கள் காய்க்க தொடங்கும். எனவே, அதற்கு நாம் ஒரு கரைசலை செடி முருங்கைக்கு அளிக்க வேண்டும். அது வேறொன்றுமில்லை, அது புளித்த மோர் கரைசல் தான்.



முதலில் கெட்டியான தயிரை எடுத்து கொள்ளுங்கள். அதை நன்றாக கடைந்து 3 முதல் 5 நாட்கள் வரை புளிக்க வைத்து கொள்ளுங்கள். பிறகு, இந்த புளித்த மோரில் மரத்தின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். அடுத்து, அதில் பெருங்காயம் அல்லது பெருங்காய தூளினை கலந்து ஒரு கரைசலாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது, இதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடி முருங்கைக்கு தெளித்து விடுங்கள். முருங்கையின் தண்டுப்பகுதி, இலைப்பகுதி மற்றும் பூக்கள் என எல்லாவற்றிற்கும் தெளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், செடி முருங்கையில் பூக்கள் அதிகமாக பூத்து வேகமாக காய்கள் காய்க்க தொடங்கும்.



What’s your Reaction?
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

ஜப்பான் Miyazaki மாம்பழத்தை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை…

7 mins ago

மீனாவுக்காக முத்து எடுத்த அடுத்த முடிவு – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாட்டி…

8 mins ago

நடிகை மனோரமா- 5

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என்று மனோரமா…

2 hours ago

ரயில்களில் வெள்ளை நிற பெட்ஷீட்டுகள் கொடுக்க என்ன காரணம்?

நம் நாட்டில் மக்கள் குறைந்த செலவில்  நீண்ட தூரம் பயணிக்க ரயில்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரயிலில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான பயணம்…

2 hours ago

வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி?

அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை…

2 hours ago

விஜய் பெயரை கெடுக்குறதுக்கு த்ரிஷா செய்த வேலையா இது ?

கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அது இந்த செய்தியில் வர ஒரு சிலருக்கு சரியா பொருந்தும். தளபதி…

3 hours ago